Saturday, March 16, 2013

தோட்டம் கொண்ட ராசாவே





தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
காட்டுக் குயில் போல் பாட்டு படிச்சோம்
கங்கையம்மா காவல் இருப்பா
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா


மேட்டை விட்டு காட்டு வெள்ளம் கீழிறங்கி வந்ததே
தோட்டமும் துலங்குது
வீட்டை கட்டி வேலி கட்டி வாழ வெச்ச சாமியே
காலமும் கனிஞ்சுது
கட்டிவெல்லம் போல ராணியைப் பாருங்க
கட்டெறும்பு போல ராசாவைக் கேளுங்க
சிட்டுச் செல்லம்மா ஆம்பளப்புள்ள ஒன்னு பெத்து கொடும்மா
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா


பூத்த மல்லி காத்தடிச்சா பொண்ணுருவம் ஆச்சுது
கண்ணு ரெண்டும் பேசுது
காத்திருந்த வண்டு ஒன்னு கால வடிவாச்சுது
வேளை வந்து சேர்ந்தது
பொட்டு வச்ச பார்த்தா தாமரைப்பூவே
பூ முடிச்சுப் பார்த்தா அம்மையைப் போல
கட்டித்தங்கமே தோட்டத்து மாம்பழம் உன்னை வெல்லுமா
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா


கண்டெடுத்த ரத்தினத்தை மண் தொடச்சு வையுங்க
கையில் அள்ளிக் கொள்ளுங்க
கண்ணுபடப் போகுதையா பொண்ணு கிட்டச் சொல்லுங்க
கன்னப் பொட்டு வையுங்க
நல்லதொரு காலம் அலையில ஆடுங்க
ஒன்னுக்குள்ள ஒன்னா உறவில வாழுங்க எங்க துரையே
வாழுங்க வாழுங்க ரொம்ப ரொம்ப நாள்
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா



படம்: பகலில் ஓரு இரவு
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜென்சி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam