ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக
நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு
ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசியபடியே கொடுக்க வந்தேன்
படம்: காக்கும் கரங்கள்
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம்.செளந்தர்ராஜன், பி.சுசீலா
4 Comments:
Lyrics of this song is by Valee and not by Kannadhaasan.
வரிகள்: வாலி
கவிஞர் வாலி ஐயாவின் பாடல் வரிகள்
Male female needs to be included
Post a Comment