Friday, March 15, 2013

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது - thiraipaadal.com


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வர பாடும் ராகமே


படம்: புவனா ஒரு கேள்விக்குறி
இசை: இளையராஜா
பாடல்: பஞ்சு அருணாச்சலம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam