Wednesday, September 3, 2014

ஞாயிறு தினங்களின் பொழுது சாயும் போது




ஞாயிறு தினங்களின்
பொழுது சாயும் போது
ஏங்கித் தவித்திடும் மனதை என்ன சொல்ல
பந்து தொலைந்தாலே வந்து போகும் அழுகை
உன்னைத் தொலைத்துவிட்டு
நான் என்ன செய்வேன்

நீ நிறம் மங்கா நினைவாக
என்றும் இருப்பாயே
சிக்கனமாக காதல் செய்ய மனம்
அறியவில்லை

நீ விலகினால்
மிக நான் தவிப்பது
குளிர்நாள் போர்வை
அன்பின் பார்வை
நான் நேசிக்க  வெகுநாள்
கழியனும்
குறைமாதக் குழந்தை
கூறும் அகங்கை

மரக்கன்றை ஊன்றி வைத்தேன்
என்னுள்ளே மெல்ல வளரவே

தரங்கெட்ட ஊரில் உன்னை
கரம் கொண்டே நான் காப்பேன்
நாட்கள் போகட்டும்

திரைப்படம்: பூவரசம் பீப்பீ
இசை:அருள்தேவ்
வரிகள்; ஹலிதா சமீம்














Last 25 songs posted in Thenkinnam