Thursday, May 26, 2011

அவன் இவன் - அவன் பத்தி நான் பாட

<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Avan+Ivan.html?e">Listen to Avan Ivan Audio Songs at MusicMazaa.com</a></p>

அவன பத்தி நான் பாடப் போறேன்
இவன பத்தி நான் பாடப் போறேன்
அவனும் சரி இல்ல இவனும் தான் சரி இல்ல
எவனத்தான் நான் இப்போ பாடப் போறேன்

ஊர பத்தி நான் பாடப் போறேன்
உறவ பத்தி நான் பாடப் போறேன்
ஊரும் சரி இல்ல உறவும் தான் சரி இல்ல
யாரைத்தான் நான் இப்போ பாடப் போறேன்

காட்டில் வாழ்ந்த மிருகம் தான் நானு
அந்த நினைப்பில் ஆட்டைத் தான் புலி தின்னு
புலியத் தான் காட்டனை மிதிக்குதுங்க

காட்டு குகையில் நான் வாழ்ந்த காலம்
நெஞ்சில் இருந்து தீப்பந்தம் தான் ஏந்தி
எப்போதும் தணியாமல் துரத்துங்க

மனுசப் பயலின் ரத்தத்தில் இருப்பது உனக்கென்ன தெரியும்
ஹேய் ஹேய் நீராக தெரியும் நீரா அது
ஆறாக ஓடும் நெருப்பே அது

உதிரம் உள்ளேதான் உள்ளதென்ன
பலியிருக்கும் பழியிருக்கும்
வெறியிருக்கும் அட
வேட்டை குணமிருக்கும்
களவுயிருக்கும் உலகுயிருக்கும்
கொலையிருக்கும் கொஞ்சம் கருணையும் இருக்கும்

கோபத்தில் சில நேரம் சாந்தத்தில் சில நேரம்
திண்டாடும் நெஞ்சத்தின் மர்மம் என்ன
சத்தங்கள் ஆனாலும் மௌனங்கள் ஆனாலும்
எல்லாமே ஒன்றேதான் வேறா என்ன

மெய் எல்லாம் பொய் ஆக பொய் எல்லாம் மெய் ஆக
மெய்யாக மெய் போயின் மர்மம் என்ன
மெய் எல்லாம் மெய் இல்லை பொய் எல்லாம் பொய் இல்லை
மெய் மெய் மெய் பொய் பொய் பொய் மெய்யா என்ன

கண் இரண்டில் தினம் தோன்றும் காட்சி எல்லாம்
கண் விட்டு வெளியேறும் மர்மம் என்ன
கண் இரண்டும் உனதில்லை அதன் காட்சி உனதில்லை
அறியாத மட நெஞ்சில் மயக்கம் என்ன

இடுகாட்டில் தினம் பார்க்கும் சாம்பல் எல்லாம்
இதயத்தில் ஏறாத மர்மம் என்ன
மலர்ந்தாலும் உதிர்ந்தாலும் மடி ஏந்தும் மணலாக
மனம் வாங்கும் ஒரு தேடல் கொண்டால் என்ன

உயிருக்கு உயிரோடு வந்தோம் என்ன
உயிர் வாழ்ந்து அதை நீயும் உணர்ந்தால் என்ன
உயிர் வாழ்க்கை நிலையாமை மர்மம் என்ன
நிலையாமை நினையாமை கொண்டால் என்ன

ஈசல் போல் வாழ்ந்தாலும் ஈசன் தான் சேர்ந்து
தூசாகி தூளாகும் மர்மம் என்ன
சிறிதாக வரைந்தாலும் பெரிதாக வரைந்தாலும்
பூஜ்யத்தில் பெருசெல்லாம் மதிப்பா என்ன

அவனாக இருந்தாலும் இவனாக இருந்தாலும்
எவனாக இருந்தாலும் இறுதி என்ன
பிச்சைத் தான் எடுத்தாலும் பேரரசர் ஆனாலும்
புழுவுக்கு இரையாவான் வேறே என்ன

படம் : அவன் இவன் (2011)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : TL. மகாராஜன், சத்யன்
வரிகள் : நா. முத்துக்குமார்

Wednesday, May 25, 2011

அவன் இவன் - ராசாத்தி போல

<p> <a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Avan+Ivan.html?e">Listen to Avan Ivan Audio Songs at MusicMazaa.com</a></p>

ஹே... ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

அடி ஆத்தி (அடி ஆத்தி) என் கண்ணுல (என் கண்ணுல)
சில நாளா (சில நாளா) அவ தெரியல (அவ தெரியல)
வேறேதும் நா பாக்கல வாழ்வே இப்ப பிடிக்கல
வருவா அவ வருவா எனை தாலாட்ட

ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

காட்டுச் சிறிக்கியே காட்டுச் சிறிக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

ஹேய்ய்.. ஆணாய் நான் வந்ததும்
அடி பெண்ணாய் நீ வந்ததும்
எங்கேயோ முடிவானது
என்னை நீ பார்த்ததும்
அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்ம தொடர்பானது
யார் வந்து தடுத்தாலும்
என் வாழ்வின் எதிர்காலம் நீ தானடி
கண் மூடி படுத்தாலும்
கனவெல்லாம் நீதானே
இறந்தாலும் இறக்காதது இந்த காதலே
புரியாதது புதிரானது
அழிந்தாலுமே அழியாதது நிலையானது

காட்டுச் சிறிக்கியே காட்டுச் சிறிக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

காட்டுச் சிறிக்கியே காட்டுச் சிறிக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

படம் : அவன் இவன் (2011)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : ஹரிசரன்
வரிகள் : நா. முத்துக்குமார்

Monday, May 23, 2011

கண் பாடும் பொன் வண்ணமே




படம்:சகோதரி
பாடியவர்கள்.ஏ.எம்.ராஜா, ஜமுனாராணி??
இயக்குனர்: ஏ. பீம்சிங்
தயாரிப்பாளர் ஜி. எச். வீரண்ணா
கர்நாடகா பிலிம்ஸ், சி. ஆர். பாசவராஜ்
கதை : கிருஷ்ணமூர்த்தி புரானிக்
நடிப்பு: பாலாஜி, பிரேம்நசீர், முத்துராமன், நாகைய்யா, சந்திரபாபு, தேவிகா, ராஜசுலோச்சனா, தாம்பரம் லலிதா, எஸ். ஆர். ஞானகி, பிரியதர்சினி
இசையமைப்பு: ஆர். சுதர்சனம்
வருடம்:1959

Get this widget | Track details | eSnips Social DNA


கண் பாடும் பொன் வண்ணமே
காதல் முத்தாரமே
அழகில் ஆடும் இருவர் பாடும்
இனிய சங்கீதமே

கண் பாடும் பொன் வண்ணமே
காதல் முத்தாரமே
அழகில் ஆடும் இருவர் பாடும்
இனிய சங்கீதமே

கண் பாடும் பொன் வண்ணமே

தங்கத் தமிழ் மீதே
பொங்கும் அலைப் போலே
அந்தி மாலை
இந்த வேலை
அன்பு கலைவண்ணம் கொண்டாடுவேன்

அந்தி மாலை
இந்த வேலை
அன்பு கலைவண்ணம் கொண்டாடுவேன்

கண் பாடும் பொன் வண்ணமே

கல்லும் கனியாகும்
உள்ளம் மலராகும்
காதல் என்னும்
வார்த்தை சொன்னால்
காணும் பொருள் யாவும் கதை கேட்குமே

காதல் என்னும்
வார்த்தை சொன்னால்
காணும் பொருள் யாவும் கதை கேட்குமே

கண் பாடும் பொன் வண்ணமே

தங்கை மறுத்தாலும்
சமையல் வெறுத்தாலும்
சிந்தை ஒன்றாய்
ஏறும் இன்பம்
மாறாது மறையாது எந்நாளூமே

சிந்தை ஒன்றாய்
ஏறும் இன்பம்
மாறாது மறையாது எந்நாளூமே

கண் பாடும் பொன் வண்ணமே
காதல் முத்தாரமே
அழகில் ஆடும் இருவர் பாடும்
இனிய சங்கீதமே

கண் பாடும் பொன் வண்ணமே

Monday, May 16, 2011

வாடா... மச்சான் வாடா





தேன்கிண்ண நேயர்களே நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன் இனிமையான பாடலுடன். கேட்டு மகிழுங்கள்.

படம்: அன்று கண்ட முகம்
பாடியவர்கள்: டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன்
இசை: கே.வி.மகாதேவன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்

வாடா... மச்சான் வாடா
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா

ஆசை மட்டும் பெரிசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா ஓ ஓ ஹோஒ
மீசை மட்டும் பெரிசா இருந்தா
வீரம் வருமாடா ஆஆஆஆ ஓஓஓஓ
ஆசை மட்டும் பெரிசா இருந்தா
அதிர்ஷ்டம் வருமாடா
மீசை மட்டும் பெரிசா இருந்தா
வீரம் வருமாடா

காசுக்காக காரியம் செஞ்சா கருணை வருமாடா
வெறும் காசுக்காக காரியம் செஞ்சா கருணை வருமாடா
கைக்கு கையா சண்டை போட தைரியம் உண்டோடா
ஏண்டா டோய் ஏண்டா டோய் ஏண்டா டோய் டேய் டேய்
வாடா மச்சான் வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
வாடா மச்சான் வாடா

தண்டனைக்கு தப்பிய திருடன் தரணியில் உண்டோடா டா
தப்பிப் போன திருடனை கூட தர்மம் விடுமாடா
தண்டனைக்கு தப்பிய திருடன் தரணியில் உண்டோடா டா
தப்பிப் போன திருடனை கூட தர்மம் விடுமாடா

அந்தப் புகழும் கொலையும் கூட அகப்பட்டுக் கொண்டாண்டா டா டா
அவனே அப்படி ஆனா நீயே அப்பன் மகனோடா போடா

வாடா மச்சான் வாடா.. பயப்படாமா வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா

சொந்தப் புத்தி இருந்தா நல்ல சோத்துக்கு வழியுண்டு
இந்த புத்தி இருந்தா அங்கே கம்பிக் கதவு உண்டு
அம்மா இருந்தா அவளை தேடும் பாசம் என்னென்று
எங்கம்மா இருந்தா அவளை தேடும் பாசம் என்னென்று ஹெஹே
அடுத்தவன் சொல்லை கேட்டு கெட்டவன் ஆயிரம் பேருண்டு
ஏண்டா டோய் ஏண்டா டோய் ஏண்டா டோய் டேய் டேய்

வாடா மச்சான் வாடா.. பயப்படாமா வாடா
ஏடா மூடா உந்தன் ஜம்பம்
என்னிடம் பலிக்குமாடா
வாடா மச்சான் வாடா

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, May 11, 2011

திமு திமு தீம் தீம் தினம்

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மனம்
ஒ அன்பே! நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே! என் நாட்கள் என்றும் போலே போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கனம் கொண்டேன்

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மணம்


உள்ளமே உள்ளமே உள்ளே உன்னைக் காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய் உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தேனே என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே என்னுடைய உலகம் தனி

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணைத் துண்டாக்கி துள்ளும் (கொஞ்சம்)

சந்தோசமும் சோகமும் சேர்ந்து வந்து தாக்கக் கண்டேனே
சந்தேகமாய் என்னையே நானும் பார்த்துக் கொண்டேனே
ஜாமத்தில் விழிக்கிறேன் ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ காய்ச்சலில் கொதிக்கிறேன் கண்ணுக்குள்ளே காதல் விழா விழா

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே தினம் நெஞ்சில் கூடும் மணம்
ஒ! அன்பே! நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே! என் நாட்கள் என்றும் போலே போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே காதல் கனம் கொண்டேன்

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணை துண்டாக்கி துள்ளும்
கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்



படம் : எங்கேயும் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : கார்த்திக்
பாடலாசிரியர் : ந.முத்துக்குமார்

தீயில்லை புகையில்லை




தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்..
ஒ... ஹோ... விலையாய் தந்தேனே என்னை
ஒ... ஹோ... வாங்கிக் கொண்டேனே உன்னை
ஒ... ஹோ... ஆடை கொண்டதோ தென்னை
ஒ... ஹோ... ஒ.. ஹோ....

வெகு நாளாய் கேட்டேன்
விழித் தூரல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே ஒ.. ஒ...
விலகாத கையைத் தொட்டு
விழியோர மையைத் தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே
விலக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா?
கண்கள் மோதாதா? காதல் ஓதாதா?
-----------------------------------------------------

பாடல் வரிகளை எழுதியனுப்பிய கவிதாவிற்கு நன்றிகள்.

தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே

பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...

ஒ.. ஒ... புனல் மேலே வீற்று
பனி வாடை காற்று
புனைந்தது நமகொரு புது பாட்டு


கடற்கரை நாரைக் கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வர பார்த்து
சிலு சிலுவென்று குளிரடிக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே
என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா..

தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...

ஒ... ஹோ... விலையாய் தந்தேனே என்னை
ஒ... ஹோ... வாங்கி கொண்டேனே உன்னை
ஒ... ஹோ... ஆடை கொண்டதோ தென்னை

படம் : எங்கேயும் காதல் (2011)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : நரேஷ் ஐயர், முகேஷ், கோபால் ராவ், மஹதி
பாடல் வரி : வாலி

Monday, May 2, 2011

செண்பகப்பூவைப் பார்த்து


செண்பகப் பூவைப் பார்த்து
ஒரு சேதி சொன்னது காற்று
என் பொன்னழகன் கைகளதைக் கொண்டால்
அந்தப் பூவுக்கொரு மோட்சம் வரும் என்று

செண்பகப் பூவைப் பார்த்து
ஒரு சேதி சொன்னது காற்று
என் கோதை மகள் கூந்தலதைக் கொண்டால்
அந்தப் பூவுக்கொரு மோட்சம் வரும் என்று
(செண்பகப்பூவைப் பார்த்து)

மடியில் பிறந்த நதியை மலைகள் மறைத்து வைப்பதும் இல்லை
செடியில் பிறந்த மலரைச் செடிகள் சிறையில் வைப்பதும் இல்லை
மனிதன் கொண்ட காதல் மட்டும் மறைத்து வைப்பதென்ன
மலைக் காட்டில் ஆடுந்தளிர் போல் மனந் துடிப்பதுமென்ன
கலைந்தோம் கலைந்தோம் மெளனம் கலைந்தோம்
தண்ணீரில் பெய்யும் மழைபோல் ஒன்றாய் இணைகிறோம்.

செண்பகப் பூவைப் பார்த்து
ஒரு சேதி சொன்னது காற்று
என் கோதை மகள் கூந்தலதைக் கொண்டால்
அந்தப் பூவுக்கொரு மோட்சம் வரும் என்று

செண்பகப் பூவைப் பார்த்து
ஒரு சேதி சொன்னது காற்று

கழுத்துவரை ஆசைகளைப் புதைத்து வைத்தவள் தானே
இவள் கனவுகளில் நீர் குடித்துத் தரையில் வாழும் மீனே
கனவுகளும் ஆசைகளும் காதலின் உரிமை
உரிமைகளை அடைவதற்கே உரிய இடம் தனிமை
கனவுகளும் ஆசைகளும் காதலின் உரிமை
உரிமைகளை அடைவதற்கே உரிய இடம் தனிமை
தொடுங்கள் தொடுங்கள் அதுதான் இனிமை
இப்போது எங்கே கனியும்
இவள் கொண்ட கண்ணில்

செண்பகப் பூவைப் பார்த்து
ஒரு சேதி சொன்னது காற்று
என் பொன்னழகன் கைகளதைக் கொண்டால்
அந்தப் பூவுக்கொரு மோட்சம் வரும் என்று

செண்பகப் பூவைப் பார்த்து
ஒரு சேதி சொன்னது காற்று
என் கோதை மகள் கூந்தலதைக் கொண்டால்
அந்தப் பூவுக்கொரு மோட்சம் வரும் என்று

இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள் . எஸ்.பி.பி, சுஜாதா
திரைப்படம் : பாசமலர்கள்

Last 25 songs posted in Thenkinnam