Friday, December 31, 2010

தாயே உன்னை இத்தனை காலம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தாயே உன்னை இத்தனை காலம்
எப்படி பிரிந்து வாழ்ந்தேனோ
கால் பட்ட இடமெல்லாம் கருவரை போல
தாங்கிக் கொண்டதும் நீதானோ
நீரும் நிலழும் உணவும் தள்ளு
உயிரை காத்தாய் நீ
வேண்டாம் என்று என்னை நீயும்
தள்ள மாட்டாய் நீ
மரம் செடி போல மனிதனையும்
வளர்த்து காத்தவள் நீதானே

ஐவது நிலங்களை அண்டங்கள் ஆக்கி
அழுக்கலை கூட சுமக்கின்றாய்
கோல வடிவில் சுமைதான் நீயாகி
ஓய்வே இன்றி சுற்றுகின்றாய்
உன்னை விட்டால் வாழ்வேது
உன்னை போலே உறவேது
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
பிறந்தாலும் இறந்தாலும்
நிலையான சொந்தம் நீதானே
உன்னை இனியும் பிரியேனே
உன்னை இனியும் பிரியேனே

படம்: பாண்டவர் பூமி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: பரத்வாஜ்
வரிகள்: சினேகன்

Thursday, December 30, 2010

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்



அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
(அவரவர்..)

காற்றும் கூட எங்களுடன்
இரவினில் தூங்க இடம் கேட்கும்
மழை துளி கூட என் தாயின்
மடியினில் தவழ தினம் ஏங்கும்
நத்தை கூட்டின் நீர் போதும்
எங்களின் தாகம் தீர்த்துக்கொள்வோம்
காத்தும் கடலும் கை கட்ட
கவிதைகள் போல வாழ்ந்து வந்தோம்
தாயின் மடியில் தினம் இருந்து
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்
கனவினில் காலையில் ஒளி பெயர்த்து
சொல்லி சொல்லி சுகமாய் தினம் சிரிப்போம்
ஐந்தெழுத்து புது ஒளியை
அறிய வைத்தாள் என் அன்னை
அண்ணன் தங்கை இருவருமே
நேசம் கொண்டு தமிழ் மன்னை
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
(அவரவர்..)

அன்னை ஊட்டிய பிடி சோற்றில்
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்
ஒற்றை கண்ணில் அடி பட்டால்
பத்து கண்ணிலும் வழி கண்டோம்
பள்ளிக்கூடம் தந்ததில்லை
பாசம் என்னும் நூல் ஒன்றை
வேதங்கள் நாங்கும் சொன்னதில்லை
எங்கள் கதை போல வேறொன்றை
கண்களும் நீர் துளி கண்டதில்லை
அழுதிட அவைகளும் பழகவில்லை
கறுப்பா சிவப்பா தெரியவில்லை
கவலைகள் இதுவரை முளத்ததில்லை
சேகத்து வைப்பதற்க்கு தேவை இன்று எதுவுமில்லை
இறைவனுக்கும் எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
(அவரவர்..)

படம்: பாண்டவர் பூமி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: பரத்வாஜ்
வரிகள்: சினேகன்

Wednesday, December 29, 2010

தோழா தோழா கனவு தோழா



தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்

உன்ன நான் புரிஞ்சிக்கணும் ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா

நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூல் எடுத்து
பூமியை கட்டி நீ நிருத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா

காதல் ஒன்னும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதனும் இல்லை
நண்பர்களும் காதலர் ஆக
மாறியப்பின் சொல்லிய உண்மை

நீயும் நானும் பழகுறோமே காதல் ஆகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா
(தோழா..)

பிரிதல் காதல் சொல்லுமடி
காதல் காதல்தான் நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல் வளருமே

பிரிந்து போன நட்பினை கேட்டால்
பசுமையாக கதைகளை சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்தப்பின் ரணமாய் கொல்லும்
ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்
ஆ.. இது கரெக்ட்
அதை ஆயுள் முழுக்க கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்
நீயும் நானும் வெகு நேரம்
மனம் விட்டு பேசி சிரித்தாலும்
பிரியும் பொழுது சில நொடிகள்
மௌனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி
உன்ன நான் புரிஞ்சிக்கணும்
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா

படம்: பாண்டவர் பூமி
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: யுகேந்திரன், ரேஷ்மி
வரிகள்: சினேகன்

Tuesday, December 28, 2010

நண்பா நண்பா காதல் நண்பா



நண்பா நண்பா காதல் நண்பா
இரவில் பகலும் ஏதடா
பூவும் பெண்ணும் இதழ்கள் திறக்கும்
இதயம் திறப்பது ஏதடா
(நண்பா..)

உன் பேரை கேட்கும் டிசம்பர் பூவெல்லாமே
உதிர்ந்து போகும் என் போல்
கண்ணாடி மேகம் தனிமை தாங்கிடாமல்
நகர்ந்து போகும் என் போல்

எந்தன் வானில் பெய்த தூரலில்
வானவில் வந்து சேர்ந்ததே
தென்றல் வெயில் வந்த மாயம்
ஓடி போகிறதே
என் ஜன்னல் கதவை சேர்ந்த கடிதம்
எந்தன் கைவசம் வந்ததே
பெயர்கள் மாறி சேந்ததால்
அது கைகள் மாறியதே
பூமியில் வீசும் பூந்தென்றல் காற்று மெல்ல
நிலாவில் வீசும் ஓஹோ
சொல்லாத நேசம் இல்லாமல் போன பின்னே
நெஞ்சோடு பேசுமோ

கண்ணொடு பார்த்தேன் காற்ற் என்றால்
யாரும் நம்பிட கூடுமோ
நெஞ்சோடு சேர்ந்தேன் உன்னை என்றால்
வாழ்க்கை வழி விடுமோ
எப்போதும் போல நானும் வாழ
நாட்கள் எண்ணியும் மாற்றுமோ
வாராத ஒன்று இந்த பூமியில்
வாழ்த்தல் சாத்தியமோ
உன்னோடு பேசி சந்தித்த ஞாபகங்கள்
நெஞ்சோடு தூங்குவேன்
காதோடு ஏதோ நீ சொன்ன வாசகங்கள்
அங்கங்கே கேட்குமே
(நண்பா..)

படம்: உற்சாகம்
இசை: ரஞ்சித் பரோட்
பாடியவர்: குணால்
வரிகள்: பா. விஜய்

Monday, December 27, 2010

மன்மதன் அம்பு - கமல் கவிதை



கண்ணோடு கண்ணை கலந்தாலென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை

உடனே கையுடன் கைக்கோர்தாளா ?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

கலவி முடிந்தபின் கிடந்தது பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினலாயின்
காசை மதியாள் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமேன்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாககொள்

கூட்டல் ஒன்றே குறி என்றானப்பின்
கழிவது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர் ?
யோசிக்காமல் வருவதை எதிர் கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவே எனகொள்

காமம் எனப்படும் பண்டை செயலில்
காதல் கலவாது காத்துக் கொள்

இப்பெண்ணுரைகேதிறாய் ஆணுறை ஒன்றை
ஏற்ற துணியும் அணி சேர்த்துகொள்

கமல்: aaha…
இயற்ற துணியும் அணி செர்துகனுமா ?
துணிவே அணியும் துணை என்றானபின்
அணியொன்று எதற்கு? தனியே வருவேன் …

த்ரிஷா: அப்படி வாங்க வழிக்கு. So நீங்க கவிஞர் தானே ?

கமல்: guilty as accused.
த்ரிஷா: அப்போ judgement சொல்றேன்
கமல்: hmm…சொல்லுங்க
த்ரிஷா: பதிலுக்கு ஒரு கவிதை சொல்லுங்க. அதுதான் தண்டனை

கமல்: யாருக்கு ??? !!!
த்ரிஷா: அது கவிதைய கேட்டாதானே தெரியும்
கமல்: ha ha ha….அதுவும் சரிதான்
ஆனா, நீங்க கோவிச்சுக்க கூடாது
த்ரிஷா: ஏன்… பெண்களை பத்தி கேலியா ?
கமல்: ச்ச ச்ச… இது ஒரு பெண்ணுடைய வேண்டுதல் மாதிரி
ஒரு பெண் தெய்வத்துகிட்ட பாடுற தோத்திர பாடல்

த்ரிஷா: ohh நீங்க பக்தி மானா ?
கமல்: அதெல்லாம் இல்லேங்க, நான் புத்தி மானங்கரதே கேள்விகுறியா இருக்கு…
த்ரிஷா: கவிதைய கேட்டா கேள்வி குறி ஆச்சர்ய குறியா மாறாலாம் இல்லையா
கமல்: hmmm.. may be.. may I?
த்ரிஷா: Please

கலவி செய்கையில் கத்தில் பேசி
கனிவாய் மெலிதாய் கழுத்தைகவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்

குழந்தை வாயை முகர்ந்தது போல
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காம கழிவுகள் கழுவும் வேளையும்
கூட நின்றவன் உதவிட வேண்டும்
சமையலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திட திண்தோள் வேண்டும்

மோதி கோபம் தீர்க்க வசதியாய்
பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும்
அதற்கு பின்னால் துடிக்கும் இதயமும்
அது ரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தையும்

மூளை மடிப்புகள் அதிகம் உள்ள
மேடாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கி புழங்கிட பணமும் வேண்டும்
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

இப்படி கணவன் வரவேண்டும் என நான்
ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலக்ஷிஎன
கடும் நோன்பு முடிந்தும் தேடி போனேன்

த்ரிஷா: தேடி எங்க போனா அந்த பொண்ணு
கமல்: பீச்சுக்குதான்

பொடி நடை போட்டே இடை மெலியவென
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மண துறவிகள் கூடிட கண்டேன்

த்ரிஷா: எங்க? tv’ லையோ ?
கமல்: issshhhhhhhh

மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையிலே அவன்
சக்காளத்தி வேண்டும் என்றான்
எக்குலமானால் என்ன என்று
வேற்று மதம் வரை தேடி போனேன்
வரவர புருஷ லக்ஷணம் உள்ளவர்
திருமண சந்தையில் மிகமிக குறைவு

வரம்தர கேட்ட வரலக்ஷ்மி உனக்கு
வீட்டுகாரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது ?
உறங்கி கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?

பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
இனிய கணவர் யார்குமுண்டோ ?

உனக்கேனுமது அமையபெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும் அமையசெய்யேன்
ஸ்ரீ வரலக்ஷ்மி நமோஸ்துதே...

படம்: மன்மதன் அம்பு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கமல் ஹாசன், த்ரிஷா
வரிகள்: கமல் ஹாசன்

Sunday, December 26, 2010

ஆடுகளம் - ஐயய்யோ நெஞ்சு அலையுதடி

ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னப்பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல
கொழம்பு வேணான்னு
உன் ஆச அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே
(ஐயய்யோ..)

உன்னத் தொடும் அணல் காத்து
கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித்தவிக்குதடி எம்மனச..

ஓ திருவிழா கடைகளைப்போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
நனனன ஏன் தானோ

கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே

ஹோ ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
ஹோ எம்மேல நிலா ஒளிருதடி

மழைச்சாரல் விழும் வேல
மண் வாசம் மன வீச
ஒம்மூச்சைத் தொடவே நான் மிதந்தேன்

கொழைகிற அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
இருட்டுல அணைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே

பாதைக்கத்தி என்னை ஒருப்பார்வையாலக்கொன்ன
ஊரோட வாழுறப்போதும்
யாரோடும் சேரலதான்
(ஐயய்யோ..)

படம்: ஆடுகளம்
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், SPB சரண், பிரஷாந்தினி

Saturday, December 25, 2010

ஆடுகளம் - யாத்தே யாத்தே



யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
(யாத்தே..)
மீன் கொத்திப்போல் நீக்கொத்துரதால

அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தலைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே நானே
(யாத்தே..)

உயர தட்ட மரமாலே தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் சுத்துதே
உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்
நிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்
(யாத்தே..)

அடி நெஞ்சின் நிலாவே தேணை அள்ளி ஊத்துற
கண்ணில் ஏதும் இல்லாமலே
உசுரையேக் கோர்க்குற
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்
கடவாயிலே இடை மேய்கிறாய்
கண் ஜாடையில் எனைக்கொள்கிறாய்
(யாத்தே..)

படம்: ஆடுகளம்
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்: GV பிரகாஷ் குமார்

Friday, December 24, 2010

மைனா - நீயும் நானும்



நீயும் நானும் வானும் மண்ணும்
நெனச்சது நடக்கும்புள்ள
வீசும் காத்தும் கூவும் குயிலும்
நெனச்சது கெடக்கும் புள்ள

நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்

ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல
ஏழாயிரம் கதவுகள் நமக்கெனத் தொறக்கும் புள்ள
பறவைகள் பறந்திட சொல்லித்தர தேஅயில்லை
(நீயும் நானும்..)

நாம நெனச்சது நடந்துச்சுன்னா நல்லபடி
சந்த சாமிக்கு என்ன சொல்லுவ
நாம கேட்டதும் கெடைச்சிட்ட வாழ்க்கையத்தான்
பல ஜென்மமும் வாந்திடுவேன்

ஹே ஆச கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளக்கூட்டும்
அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல
அத நெனச்சாலேப்போதும் புள்ள
(நீயும் நானும்..)

தெருக்கோடியில் கெடந்தா வாழ்க்கையுந்தான்
இல்ல கோடியில் பொறழுதடா
இந்த பூமியக்கூட கையில் சுத்தம்
அந்த இரகசியம் தெரிஞ்சதடா
ஹே ஹே ஹேய் காதல் தானே மாற்றம்
நம்மை உயரத்தூக்கி மட்டும்
அட பொன்னாக்கிடு வாழ்க்கை சுத்தும் பூவா
ஒன்னா கொண்டாடிப்போகும் புள்ள
(நீயும் நானும்..)

படம்: மைனா
இசை: D இமான்
பாடியவர்கள்: பென்னி தயால், ஷ்ரேய கோஷல்

Thursday, December 23, 2010

மைனா - மைனா மைனா



மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பன்னுது
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுப்புள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேலே கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்னை மறந்தே தள்ளி இருந்திடத்
துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்னைத் தவிப்புல
எரிஞ்சதேன் முறையா முறையா
ஏலே ஏலே ஏலே ஏலே

சூவினிக்க மண்ணெண்ணையைப்போல
சித்திரைக்கி உச்சி வெயில் போல
நீயும் எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக
சக்கரத்தைப்போல சுத்திவரும் ஆச
கண்ணுமைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
அடியே நீ மணலத்திரிச்ச கயிறா
கொடியே நீ உசுற கடைஞ்ச தயிரா
(மைனா..)

கட்டவண்டி செல்லும் வழி தேடி
உண்டிவில்லு ஜல்லிக்கல்லத்தேட
நானும் உன்னத்தேடி அலைஞ்சேனே மனவாடி
பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழு ஆடக்கூட இல்ல நீயும்
தொணையா நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
நீ கலஞ்சா நெனப்பேன் நீர
(மைனா..)

படம்: மைனா
இசை: D இமான்
பாடியவர்: ஷான்

Wednesday, December 22, 2010

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு



சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன் கண்களுக்கு பள்ளி கொண்டேன்
வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)

ஓ கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)

ஓ காதல் வெண்ணிலா கையோடு வந்தாடும்
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
ஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ
மீனுக்கு தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

Tuesday, December 21, 2010

அன்னை மடியில் கண் திறந்தோம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

அன்னை மடியில் கண் திறந்தோம்
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்
உயிரின் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கைதானடா ஏன் சலனம்
(அன்னை..)

அன்னை என்பள் அருகில் வந்துமே
பிள்ளை அறியவே இல்லையே
பிள்ளை அன்னையை அறிந்த வேளையில்
அன்னை உணரவே இல்லையே
ஓர கண்ணிலே உயிரை சுமந்தவள்
உன்னை தேடியே உலகில் அலைந்தவள்
சேரும் இடத்திலே சேர்ந்து விட்டாள்
(அன்னை..)

வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பதும்
வகுத்த நெறியடா மகனே
வாழை விழுவதும் கன்று அழுவதும்
வாழ்க்கை முறையடா மகனே
அன்னம் தந்தவள் அணலில் வேகிறாள்
அன்பு பிள்ளை நீ அழுது சாகிறாய்
சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய்
(அன்னை..)

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Monday, December 20, 2010

தென்றலை கண்டுக்கொள்ள மானே



தென்றலை கண்டுக்கொள்ள மானே
கண்களின் தேவை என்ன தேனே

தென்றலை கண்டுக்கொள்ள மானே
கண்களின் தேவை என்ன தேனே
உள்ளத்தில் பார்வை உண்டு மானே
உண்மைக கண்டு சொல்லும் தேனே
நெஞ்சின் வண்ணங்களை ஓடும் எண்ணங்களை
காண கண் வேண்டுமா பேசச் சொல் வேண்டுமா
மலர் பூத்தண்டை வாசங்கள் சொல்லுமே
(தென்றலை..)

உன்னை பார்த்தொரு குயில் கூவுதே
அந்தக் காதல் தேன் குரல் கேட்டாயா
உன்னை பார்த்தொரு மேகம் தூவுதே
ஈர காத்து காதல் சொல்லக் கண்டாயா
உன்னை நான் எண்ணுகின்ற நேரம்
உள்ளுக்குள் மார்கழி மாதம்
அன்பே நான் உன்னை காணும் நேரம்
கண்ணுக்குள் கார்த்திகை தீபம்
கண்கள் இன்றி என்னை கண்டுக்கொள் என்று
நீ என் காதல் கண்டுக்கொள்வாயா
அந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு
(தென்றலை..)

நீல நிற வானத்தில வந்த நிலா இவள் தானோ
அமுதத்தில செஞ்ச உடம்போ
இல்ல தெறிச்சு விழுந்த விதையோ
தாமரை போல கண்ணுள்ளவளோ
இந்த மண்ணுக்கு ஆறுடை தருபவளோ
சோலை பூவனம் தேடும் பூவினம்
எந்தன் நெஞ்சில் பூப்பறிக்க வந்தாளோ
அந்த வெண்ணிலா தேடும் பெண்ணிலா
எந்தன் நெஞ்சை வானம் என்று கொண்டாளோ

ஹோ சந்தன சந்திரனின் பாட்டு சந்தங்கள் சொன்னது நேற்று
சொல்லாத ஏக்கங்கள் சேர்த்து நீதானே என்னைத் தொட்ட காற்று
அதிகாலை மாலை இரவென்ன அதன் துன்பம் இன்பம் தந்ததென்ன
என்று மௌனத்தின் வாசலை திறப்பாய்
(தென்றலை..)

படம்: நிலவே முகம் காட்டு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், இளையராஜா

Sunday, December 19, 2010

ரோஜாவை தாலாட்டும் தென்றல்



ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
(ரோஜாவை..)

இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
(இலைகளில்,.)
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ
(ரோஜாவை..)

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்
(வசந்தங்கள்..)
பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
(ரோஜாவை..)

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து

Saturday, December 18, 2010

நீதானே எந்தன் பொன்வசந்தம்



நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
(நீதானே..)
என் வாசல் ஹே வரவேற்க்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்
(நீதானே..)

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேஅக் குயில்கள்
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூரும்
நீ ஆடல் அணிகலன் சூடும் வேளையில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியோடு ப்ஓகும் வரையினில்
தென்றல் கவரிகை வீசும்
சந்தோஷம் உன்னோடு கைவீடும் எந்நாளும்
(நீதானே..)

ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் கோடி நினைவு
உன் ஆசை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் ஆசை ஹே குளிப்பதும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல்
திரையிடும் மேகம்
இரு காதல் விழிகள் பேசும் மொழிகளில் பிறையும்
பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீடும் எந்நாளும்
(நீதானே..)

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Friday, December 17, 2010

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்



இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அட புண்ணை வர குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் மழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ
(இந்த..)

மெல்ல மெல்ல பூத்து வரும் உன்னை பார்த்து வரும்
நெஞ்சுக்குள்ள நட்டு வெச்ச நாத்துதான்
உள்ளபடி சொல்ல போனா உன் இரண்டு கண்ணு பட்டு
உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்
நீச்சளிட ஓடி வரும் காத்துதான்
சித்திரமே நீயும் ஒரு உத்தரவு தந்து விடு
அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்து தான்
காதோரம் ஆசை ஆசையாய் கதை பேசும் காலம் தான் இது
ஏதேதோ பேசி பேசியே என்னை நீங்கி கூச்சம் போனது
ஒரு வாரம் ஒரு மாதம் உறங்காமல் ஒரு மோகம்
தனியாய் இருந்தால் அணலாய் எறியும்
போதும் ஏகாந்தம்
(இந்த..)

எப்படியும் ஆவணிக்குள் செப்பு சிலை தாவனிக்குள்
தொட்டில் கட்டி பிள்ளை போல ஆடுவேன்
என்னுடையை எண்ணப்படி கை கொடுக்கும் அம்மனுக்கு
சொன்னப்படி தேர் இழுத்து பாடுவேன்
வைகை நதி கை இணைக்க தென் மதுரை இங்கிருக்க
வங்க கடல் பக்கம் அது பொங்குமா
நட்ட நடு ஜாமத்திலும் பட்ட பகல் நேரத்திலும்
நின்றிருப்பேன் உன்னுடைய தாகமா
மான் பூவே மாலை வேளையில் மடி சேறு தாகம் தீர்க்கிறேன்
தாம்பூலம் மாற்றி ஆகட்டும் உனை நானே கையில் சேர்க்கிறேன்
உனை நானும் அடையாது பசி தாகம் கிடையாது
இளைத்தேன் இளைத்தேன் இனியும் இளைத்தால் தேகம் தாங்காது
(இந்த..)

படம்: பூவரசன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

Thursday, December 16, 2010

நதிக்கரை ஓரத்து நாணல்களே

நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே

நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாருங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே

நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாருங்களே

தரையை தொடாத தென்றலைப் போல்
உன் தாமரை பாதங்கள் நடப்பதென்ன
கல்யாண செய்தியைக் கேட்டவுடன்
என் கால்கள் தரையைத் தொடவில்லையே

கரையைத் தொடாத அலைகளைப்போல்
உன் கருங்குழல் கைகளில் விழுவதென்ன
காதலன் கையினில் சுகம் பெறவே
என் கூந்தல் சரிந்து விழுந்ததய்யா

நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகன் புகழை கேளுங்களே

கங்கையின் சங்கமம் கடலிடத்தில்
எந்தன் கன்னியின் சங்கமம் என்னிடத்தில்
ஜென்மம் பூமியில் விழும் போதே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்

உதடுகளாலே கதை எழுதி
உள்ளத்தை மயக்கிட நான் வரவா
மாலையும் மேளமும் வரும் வரைக்கும்
உன் மனதை அடக்கவும் முடியாதா

நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாருங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே

பாடியவர்கள்.: ஷைலஜா, ஜேஸுதாஸ்
திரைப்படம்: காதல்கிளிகள்
வரிகள் : முத்துலிங்கம்
இசை: கே. வி . மகாதேவன்

முருகனை நினை மனமே!

முருகனை நினை மனமே -நலங்கள்
பெருகிடும் தினம் தினமே
உருகிடும் மறுகணமே
நெருங்கி வருவது அவன் குணமே
(முருகனை)

ஒவ்வொரு நொடியிலும்
அருகினில் இருப்பவன்
ஆஆஆ
(ஒவ்வொரு)
ஒவ்வொரு செயலிலும்
பெருமையைக் கொடுப்பவன்

உடலுக்கு உயிரெனில்
உயிருக்கு ஒளியவன்
உணர்ந்தவர் தொழுதிடும்
உயர்ந்தவர் பரவிடும்
(முருகனை)

அழகனின் அழகினில்
இருவிழி குளிர்ந்திடும்
ஆஆஆ
(அழகனின்)
அவனருள் மழையினில்
உணர்வுகள் சிலிர்த்திடும்
அறிவுடன் பொருள் புகழ்
அனைத்திலும் சிறந்திட
( முருகனை நினை மனமே)
இசை , வரிகள், பாடியவர் : இளையராஜா

கிங்குடா அன்பு கிங்குடா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

கிங்குடா அன்பு கிங்குடா
கிங்குடா அண்ணன் கிங்குடா
ஹோய் டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும் தினதின்
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும் போடு
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்

இன்னாப்பா
மியூஜிக் அடிச்சாத்தான் நாங்க ஆடுவோம்

கிங்குடா அன்பு கிங்குடா
கிங்குடா அண்ணன் கிங்குடா
கிங்குடா இனிமே கிங்குடா
கிங்குடா கிங்கோ கிங்குடா
யெக்கக்கோ யெக்கக்க்கோ கிழிகிழின்னு கிழிச்சிக்கோ
அப்பப்போ அப்பப்போ ஆண்டவனை நினைங்கப்போ
(கிங்குடா..)

மரீனா பீச்சில் தூங்கும் நம்ம புரட்சி தலைவர் கிங்குடா
அவரு பக்கத்தில் நானும் தூங்க சான்சு கெடச்சா கிங்குடா
வாழ்க்கை சூதாட்டம் தாண்டா அதில் ஜேக்போட் கிஞ்குடா
யே அள்ளிக்கோ அசத்திக்கோ யெக்கக்கோ யெக்கக்கோ
உலக அழகிங்க நூறு பேரை வர சொல்லி
அதுல ஒருத்திய கட்டிக்கிட்டா கிங்குடா
(கிங்குடா..)

கில கில கில கில கில கில
கிச்சிலிக்கான் கிச்சிலிக்கான்
அஹான் அஹான் அஹா ஹஹான்
யெக்கக்கோ யெக்கக்கோ அப்பப்போ அப்பப்போ

சுக்ரன் திசையும் தோட என்ன சுத்துர நேரமும் வரும்டா
கர்ரன்சி நோட்ல தாண்டா நான் கோட்டைய கட்டுர கிங்குடா
கடல் ஒன்னு வாங்கி அதில் கப்பலை விடுர கிங்குடா
யே அள்ளிக்கோ அசத்திக்கோ யெக்கக்கோ யெக்கக்கோ
தங்கச்சிக்கு பக்கத்துல பிரதர் கிங்குடா
சிங்கப்பூர் மாப்பிள்ளை தேடிவரும் கிங்குடா
(கிங்குடா..)

படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: கலைக்குமார், மனோ, பிரபு தேவா, யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: கலைக்குமார்

Wednesday, December 15, 2010

அடடா அடடா யாரிவளோ


Get Your Own Hindi Songs Player at Music Plugin

அடடா அடடா யாரிவளோ
தேவதையோ வானவில்லோ
அடடா அடடா யாரிவளோ
பொன் சிலையோ வெண்ணிலவோ

வெண்ணிலா துண்டு ஒன்று
மண்ணிலே விழுந்ததோ
பாற்கடல் ஒன்று துள்ளி வந்ததா

அடடா அடடா யாரிவளோ
தேவதையோ வானவில்லோ
அடடா அடடா யாரிவளோ
பொன் சிலையோ வெண்ணிலவோ

ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ

படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: கார்த்திக் ராஜா

Tuesday, December 14, 2010

கதவை நான் தட்டினேன்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

கதவை நான் தட்டினேன்
சொர்க்கமே வந்தது
தேவதை நின்றது
என் காதல் தேவதை நின்றது

கதவை நான் தட்டினேன்
சொர்க்கமே வந்தது
தேவதை நின்றது
என் காதல் தேவதை நின்றது

கதவை திறந்தேன் ஒரு நிமிஷம்
இறந்து பிறந்தேன் மறு நிமிஷம்
இப்படி இப்படி இப்படியே
நாம் இருக்கக் கூடாதா பல வருஷம்

ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ

படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: கார்த்திக் ராஜா

Monday, December 13, 2010

உயிரே என் உயிரே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உயிரே என் உயிரே
எங்கு சாலையில் போகின்றாய்
எங்கு காலையில் போகின்றாய்

உயிரே என் உயிரே
எங்கு சாலையில் போகின்றாய்
எங்கு காலையில் போகின்றாய்

உனக்கு பின்னால் என் இதயம்
உன்னைத் தேடி வருகிறதே
சாலை விதிகள் தெரியாமல்
ஓடி ஓடி வருகிறதே

உயிரே என் உயிரே
எங்கு சாலையில் போகின்றாய்
எங்கு காலையில் போகின்றாய்

உனக்கு பின்னால் என் இதயம்
உன்னைத் தேடி வருகிறதே
சாலை விதிகள் தெரியாமல்
ஓடி ஓடி வருகிறதே

உயிரே என் உயிரே
எங்கு சாலையில் போகின்றாய்
எங்கு காலையில் போகின்றாய்

படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: ஹரிஹரன், கார்த்திக் ராஜா

Sunday, December 12, 2010

புயலே புயலே சுத்திவரும் புயலே



ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ

புயலே புயலே சுத்திவரும் புயலே
பதினெட்டு வயசு புயலே
அலையே அலையே வாலிப அலையே
கண்களை மிரட்டும் அலையே
(புயலே..)

ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
(புயலே..)

உன்னுடல் உன்னுடல் வெயில் பட்டு வெயில் பட்டு
வேர்ப்பதை வேர்ப்பதை பார்த்தேன் பார்த்தேன்
ஆயிரம் ஆயிரம் விசிறிகள் விசிறிகள்
வானத்தில் மாட்டிட நினைத்தேன்
(உன்னுடல்..)
தபால்காரன் கூட உந்தன் பேரை சொன்னால்
எந்தன் நெஞ்சுக்குள்ளே மோகம் தோணும் தன்னாலே

ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
(புயலே..)

உன் பெயர் உன் பெயர் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி
துடிக்கின்ற இதயமும் வேண்டும் வேண்டும்
எனக்குள்ளே எனக்குள்ளே அப்படியோர் இதயத்தை
டாக்டர்கள் பொருத்திட வேண்டும் வேண்டும்
(உன் பெயர்..)
சினா வாள்-இன் நீளம் காதல் கடிதம் எழுதி
உந்தன் கையில் நானும் சேர்ப்பேன் சேர்ப்பேன் இதுவும் உறுதி

ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
ஐயோ ஐயய்யோ
(புயலே..)

படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: உதித் நாராயன்

Saturday, December 11, 2010

கவிதைகள் சொல்லவா



கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ
ஓவியம் வரையவா
உன் கால்த்தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

யார் அந்த ரோஜாப்பூ
கண்ணாடி நெஞ்சின் மேல்
கை வீசி போனால் அவள் யாரோ
உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே
(கவிதைகள்..)

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறோம் என்று டெஹ்ரியாமல்
சுற்றுதம்மா இங்கு என் வாழ்வும்
உண்மையில் என் மனம் மெழுகாகும்
சிலர் வீட்டுக்குதான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனியாய் உருகும்

பிறர் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும் இல்லை
அந்த கண்ணாடி நாந்தானே
முகமே இல்லை என்னிடம்தான்

காகிதத்தில் செய்த பூவுக்கும்
என் மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ
பூமிக்குள் இருக்கிற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ
இரண்டுமே வெளிவர முடியாதோ

செடியாய் பூப்பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சருகாய் கிடக்குதே
(கவிதைகள்..)

படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: பா. விஜய்

Friday, December 10, 2010

நிலவே நிலவே தாளம் போடு

நிலவே நிலவே தாளம் போடு பாட்டொன்று பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி பாட்டொன்று பாட போறேன்
நட்சத்திரமே கூட வா கூட வா
அக்கா மகளே பாட வா பாட வா
நான் பாடும் ராகம் அவள் அல்லவா
(நிலவே..)

கேளாறு தங்கம் இல்லாமல் அவ மேனி ஜொலிக்குமடி
கோஹினூர் வைரம் இல்லாமல் அவ மூக்கு கொலிக்குமடி
(கேளாறு..)
என் வீட்டு தோட்டத்திலே மல்லிகைப்பூ செடி ஒன்னு வச்சிருக்கேன்
என்னோட ஆசையைத்தான் பூத்திருக்கும் பூக்களில் கொட்டி வச்சேன்
ஆனியில நல்ல நாள் குறிச்சி ஆவனியில் ஒரு பாக்கு வச்சி
என் அக்கா மக அவளத்தான் கை புடிக்கப்போறேன்..
(நிலவே..)

ஆகாயம் ரெண்டு பட்டாலும் அவ மூச்சில் கலந்திருப்பேன்
அவ மேலே மழை பெய்ஞ்சாலும் அடிபட்டு நான் துடிப்பேன்
(ஆகாயம்..)
வாழ்விருக்கும் காலம் எல்லாம் அவளுக்கு நிழலாக நான் இருப்பேன்
அவள் நடக்கும் பாதையெல்லாம் அணுதினம் பூவாய் நான் துடிப்பேன்
கண்ணுக்குள்ளே போயி பூட்டி வைப்பேன் கண்மனியை அதில் விட்டு வைப்பேன்
அவ கால் கொலுசா நான் இருப்பேன் தினம் ஒரு உரு எடுப்பேன்
(நிலவே..)

படம்: தை பொறந்தாச்சு
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்

Thursday, December 9, 2010

காதல் கடிதம் தீட்டவே



காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீளம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
(காதல்..)

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எதன் உயிரல்லோ
பொண்ணே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தல் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கிறேன்
(காதல்..)

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா
(காதல்..)

படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், S ஜானகி
வரிகள்: வைரமுத்து

Wednesday, December 8, 2010

ஆளான தேகம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை

ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை
தித்திக்கும் தேகத்தை தேனீக்கள் மொய்க்குதே
ஒத்தைக்கு ஒத்தையாக வாடா
தூங்காத கண்ணுக்குள் நீ தூங்க வருவாயா
வெண்ணிலா பருவம் தொட்டு வேரோடு பறித்திடு
(ஆளான..)

எட்டு பதினெட்டு இந்த பெண்ணோட தேகம் தொட்டு
ஆடு விளையாடு நீதான்
கையால் இரு கையால் வளவி என்னை பூட்டிக்கொள்ள
வா வா வருவாயா நீதான்
இந்த மெழுகுவர்த்தியை தினம் ஏற்றி வைத்திடு
என்னை உருக வைத்திடு வா வா
மூன்றாம் பிறையினை நீ ஊதி ஊதியே
அதை முழுமை ஆக்கிடு வா வா
(ஆளான..)

நீயோ இல்ல நானோ ஒரு நேர்க்கோட்டில் நடந்து வந்தால்
யோகம் சுக யோகம் தீரும்
வண்டு ஒரு வண்டு இறை இல்லாமல் போன பின்னே
பூவாய் பிறந்தாலே பாவம்
பல முட்கள் நடுவிலே ரோஜா வாழ்வது
அட பாவம் இல்லையே வா வா
ஒரு மெத்தை நடுவிலே ஒரு முத்தம் தந்து நான்
உன்னை மென்று திங்கவா வா வா
(ஆளான தேகம்..)

படம்: அரசு
இசை: தேவா
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: கலைக்குமார்

Tuesday, December 7, 2010

உன்னை பார்த்தால் எனக்குள் ஏதோ


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உன்னை பார்த்தால் எனக்குள் ஏதோ ஏதோ நடக்கிறதே
இதுவரை இதுப்போல் நடந்ததே இல்லை
உனக்கது புரிகிறதா
(உன்னை பார்த்தால்..)

பதினாறு வருடங்கள் இல்லாமல்
பறிப்போனதே மனம் சொல்லாமல்
பதினாறு வருடங்கள் இல்லாமல்
பறிப்போனதே மனம் சொல்லாமல்

சில நேரம் மனசுக்குள் புகை வண்டிப்போல் ஏதோ
மெதுவாக ஊர்ந்துதான் போகிறதே
அட உன்னைப் பார்த்தால் கண்ணிரண்டில்
புத்தம் புதிய விக்கல்
நான் பேச வந்த வார்த்தை எல்லாம்
பேசினாலும் சிக்கல்

பதினாறு வருடங்கள் இல்லாமல்
பறிப்போனதே மனம் சொல்லாமல்
பதினாறு வருடங்கள் இல்லாமல்
பறிப்போனதே மனம் சொல்லாமல்
(உன்னைப் பார்த்தால்..)

சுட சுட மழை மனசுக்குள்ளே
படப் பட என பெய்வது என்ன
குடை கொடு என உன்னிடம் கேட்டால்
நீ கொண்டு வருவாயா
இது யார் செய்த மாயம்
அதை அறிந்தவன் தான் நீயும்
இதில் மாட்டிக்கொண்டேன் நானும்
நீ புரிந்துக்கொள்ள வேண்டும்
(உன்னைப் பார்த்தால்..)

நட்பென்று சொன்னாலும் நான் நம்ப மாட்டேனே
காதல் தான் இதை செய்யும் வேறு இல்லை
அதை ஊறறிந்து சொல்லும் முன்னே நீ அறிந்து சொல்லு
நான் தன்னந்தனியே புலம்புகிறேனே
உந்தன் நிலையைச் சொல்லு

பதினாறு வருடங்கள் இல்லாமல்
பறிப்போனதே மனம் சொல்லாமல்
பதினாறு வருடங்கள் இல்லாமல்
பறிப்போனதே மனம் சொல்லாமல்
(உன்னைப் பார்த்தால்..)

படம்: எங்கே எனது கவிதை
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஷீலா ராமன்

Monday, December 6, 2010

அஞ்சாதே ஜீவா



ஜீவா ஜீவா ஓ ஜீவா ஓ ஜீவா

அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்தப் பூவே அன்பே வா ஜல்
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்தப் பூவே அன்பே வா

என்னைக் கொள்ளையிட்டுப் போகும் அழகே வா
என்னைக் கொன்றுவிட்டுப் போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
(என்னைக்..)

பூக்களையே ஆயுதமாய் கொண்டவன் நீதானே
பூவெறிந்து என்னுயிரைக் கொன்றவன் நீதானே
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா

ஒரு பூவுக்குள் வசிக்கின்ற நிலவே வா
என் போர்வைக்குள் அடிக்கின்ற வெயிலே வா
புதுப் புன்னகை பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா

காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
(காதல்..)
காற்று இல்லாத இடமும்
அட காதல் தெரியாமல் நுழையும்
கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி
காதல் யோகம் கொண்டாட வேண்டும்

சந்திர மண்டலம் எல்லாம்
நாம் தாவி விளையாட வேண்டும்
ஒன்பது கிரகம் தாண்டி
நாம் ஓடி விளையாட வேண்டும்
வானம் முடியும் முடியாது காதல் பயணம்
(என்னைக்..)
(அஞ்சாதே..)

காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல்லொன்றும் அல்ல
(காதல்..)
இரவு நேரத்துப் போரில்
நீ என்னை எப்போது வெல்ல
பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும்
முடிவில் இருவரும் வென்றாக வேண்டும்
ஒவ்வொரு காலையின் போதும்
உன் மார்பில் நான் தூங்க வேண்டும்
காலங்கள் முடிகின்ற போதும்
உனை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
மீண்டும் மீண்டும் நாம் காதல் ஜென்மம் காணலாம்
(என்னைக்..)

படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சீர்காழி சிவசிதம்பரம், ஸ்வர்ணலதா
வரிகள்: வைரமுத்து

Sunday, December 5, 2010

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
(தாயிற்)

தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

(தாயிற்)

பொறுமையிற் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய்மனம் உண்டு
கோவிலில் ஒன்று .. குடும்பத்தில் ஒன்று
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று
(தாயிற்)

பாடியவர் : T.K.கலா
திரைப்படம்: அகத்தியர்
இசை:குன்னக்குடி வைத்தியநாதன்
வரிகள் : பூவை செங்குட்டுவன்


கோமதிம்மாவின் தாய் வீரலெட்சுமியின் ( எனது ஆச்சி) நினைவு நாளுக்காய் கோமதிம்மாவின் நேயர் விருப்பமாக இப்பாடல் ஒலிக்கிறது .

கை தட்டித் தட்டி அழைத்தாளே



கை தட்டித் தட்டி அழைத்தாளே
என் மனதை தொட்டுத்தொட்டுத் திறந்தாளே
என் உயிரை மெல்ல துளைத்து திறந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்த தேன்குயிலே

தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானேங்கும் அவளின் பிம்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

ரத்தினத்துத் தேரானாள்
என் மனசுக்குள் சத்தமிடும் பூவானாள்
என் பருவத்தைப் பயிர் செய்யும் நீரானாள்
என் நெஞ்சக்குளத்தில் பொன் கல்லை எறிந்தாள்
அலை அடங்குமுன் நெஞ்சத்த்தில் குதித்தாள்
விழியால் நெஞ்சுடைத்துவிட்டாள்
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்

தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானேங்கும் அவளின் பிம்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

பால்வண்ண நிலவெடுத்துப்
பாற்கடலில் பலமுறை சலவை செய்து
பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ
என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ
என் மௌனங்களில் மொழி பெயர்த்தவளோ
அழகைத் தத்தெடுத்தவளோ
என் உயிர் மலரைத் தத்தரித்தவளோ

தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானேங்கும் அவளின் பிம்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தர ரம்பம் தர ரம்பம் தர ரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், திம்மி
வரிகள்: வைரமுத்து

Saturday, December 4, 2010

வண்ணப்பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

வண்ணப்பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா

வண்ணப்பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாத பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே
(வண்ணப்..)

வண்ணப்பூங்கா பூங்கா வண்ணப்பூங்கா

வெண்ணிலா வெண்ணிலா தங்கையானதோ
வெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ
(வெண்ணிலா..)

விண்மீன்களைக் கேட்டால் அன்னங்கள்
எல்லாம் பறித்து தருவார்கள்
நான் வானவில் கேட்டால் ஏணியிலேறி
ஒடித்து ஒடித்து தருவார்கள்
ஒற்றைத் தங்கை எனக்காக உயிரை தருவார்கள்
ஓ இன்னுயிர் போலெனைக் காப்பதும் ஏனோ
ஓ இன்னொருவன் கையில் என்னை ஒப்படைக்கத் தானோ
பெண்கள் வாழ்வே ரெட்டை வாழ்வோ ரெட்டை வாழ்வோ
(வண்ணப்..)
(வெண்ணிலா..)

அன்னையின் மடியினில் ஓரிடம் தேடி
தந்தையின் தோள்களில் சில பொழுதாடி
அண்ணன்கள் மார்பினில் கவிதைகள் பாடி
வாழ்வே கனவா
பெண்ணினம் ஒரு வகை பூச்செடியாகும்
வேருடன் பெயர்ந்தொரு வேறிடம் போகும்
நிறமற்ற ஒரு இடம் நிரந்தரம் ஆகும்
கனவே வாழ்வா
நானுமென்ன ஒரு பூச்செடியா
இந்தப் பூச்செடிகு இதயம் இல்லையா
(வண்ணப்..)
(வெண்ணிலா..)

படம்: ஜோடி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: மகாலெட்சுமி ஐயர்
வரிகள்: வைரமுத்து

Friday, December 3, 2010

கண்ணா என்ன குறையோ எந்த நிறையோ

கண்ணா....கண்ணா....கண்ணா
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்



நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே

என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
கண்ணன்....கண்ணன்....கண்ணன்...கண்ணன்


உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்
உறவைப்போலே கண்ணன் இருப்பான்

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழி கேட்டுப் பறவை வாடலாம்
புதிரானக் கேள்வி யாவிலும்
விடையாகக் கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை
தினம் பாடிவா மனமே.......

திரைப்படம் : மந்திரப்புன்னகை(2010)
இசை : வித்யாசாகர்
வரிகள் : அறிவுமதி
பாடியவர் : சுதா ரகுநாதன்

மேகம் கருக்குது வானம் இருட்டுது


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மேகம் கருக்குது வானம் இருட்டுது
மேக்காட்டு மூளையில
ஈரம் சிரிக்குது காத்தும் குளிக்குது
தென்காத்து ஓலையில
கத்தாளம் காடு நனஞ்சா
நெஞ்சுக்குள் பூக்கள் வெடிக்கும்
மானூத்து கம்மா நெறஞ்சா
மீனுக்கு ரெக்கை மொளைக்கும்
காத்தோட மெதக்கும் கொக்கோட சிறகை
ஊன் நெஞ்சு மாறும்
(மேகம்..)

தெண்டத்தி காட்டுக்காரி கிணத்துக்கு சேதி சொல்லு
கூத்தாட ஆட்டம் போட போற போறாக
கம்மாயில் மீன் புடிக்கும் கொக்குக்கு சேதி சொல்லு
துப்பாக்கி வச்சி ஒன்னும் சுட மாட்டாக
அந்த வரயாருங்க அறை வெலை பேசுங்க
அடை ஐயனாரு விருந்துக்கு கேட்பாருங்க
ஐயா குளிர் காருங்க கொஞ்சம் எளப்பாருங்க
அந்த ஆர்மி காரன் ரம் எல்லாம் குடுப்பாருங்க
(மேகம்..)

ஏழெட்டு வண்டி கட்டி பெண் பார்க்க ப்போகையில
அண்ணனை கேளி செஞ்சு அம்பு விட்டாக
அக்காக்கள் இல்லா வீடு அறை வீடு உண்மை தாங்க
அண்ணங்க வந்து அதை தீர்த்து வச்சாக
நீ தாலி கட்ட ஒரு மேளம் கொட்ட
அட அர்ச்சனையும் பச்சரிசி பத்து மூட்டை
வெரும் வாசத்துல ஒரு கருவேப்பில
அட மச்சினியோட கை மணக்கும் சாப்பாட்டுல
(மேகம்..)

படம்: ஈர நிலம்
இசை: சிற்பி
பாடியவர்கள்: கங்கா, ரஞ்சித்

Thursday, December 2, 2010

அமுதே தமிழே அழகிய மொழியே



அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே
நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயில வரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா
தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு


அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே


திரைப்படம் - கோயில் புறா
இசை - இளையராஜா
வரிகள்- புலமைப் பித்தன்
பாடியவர்கள் - இசையரசி பி.சுசீலா, உமா ரமணன்

மன்மதன் அம்பு - நீல வானம் நீயும் நானும்



நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாயுந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே..

நீல வானம்
Blue Sky
நீயும் நானும்
You and I

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம் தன்னை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம் தன்னை
காதல் என்று பெயர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்

ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தன்னை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவது இன்னொரு உயிர்தானடி
நீல வானம் நீயும் நானும்

படம்: மன்மதன் அம்பு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கமல் ஹாசன், பிரியா ஹிமேஷ்
வரிகள்: கமல் ஹாசன்

Wednesday, December 1, 2010

கண்ணோடு கண்ணோடு வந்த காதல்



கண்ணோடு கண்ணோடு வந்த காதல்
காதோடு காதோடு பேசும் காதல்
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்
உறவே வருக நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக
(கண்ணோடு..)

அன்பே அன்பே உன் ஆடை கொடு
உன் திருமுகம் தெரியட்டுமே
திங்கள் பெண்ணே உன் திரை விளக்கு
கண் நினைவுகள் மலரட்டுமே
உன் கால் கொலுசு சங்கீதம் பாடாதா
உன் கண் மணியில் என் காலம் விடியாதா
உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா
உயிரின் குரல் தான் அடி உனக்கு கேட்க வில்லையா
(கண்ணோடு..)

நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு
உன் நிழலுக்குள் கரைந்துவிடு
பூக்கள் கொஞ்சம் என் கூந்தலுக்குள்
ஒரு குடித்தனம் தொடங்கிவிடு
உன் நேசம் தான் என் வாழ்வின் ஆகாயம்
உன் நெஞ்சில் நால் இல்லாமல் என்னாகும்
நாளே..
நாம் சேர்ந்து ஒன்றாகட்டும்
உயிரே மடிந்தால் கடல் அலைகள் காதல் சொல்லட்டும்
(கண்ணோடு..)

படம்: கனவே கலையாதே
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஷோபனா

Last 25 songs posted in Thenkinnam