Thursday, December 16, 2010

நதிக்கரை ஓரத்து நாணல்களே

நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே

நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாருங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே

நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாருங்களே

தரையை தொடாத தென்றலைப் போல்
உன் தாமரை பாதங்கள் நடப்பதென்ன
கல்யாண செய்தியைக் கேட்டவுடன்
என் கால்கள் தரையைத் தொடவில்லையே

கரையைத் தொடாத அலைகளைப்போல்
உன் கருங்குழல் கைகளில் விழுவதென்ன
காதலன் கையினில் சுகம் பெறவே
என் கூந்தல் சரிந்து விழுந்ததய்யா

நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகன் புகழை கேளுங்களே

கங்கையின் சங்கமம் கடலிடத்தில்
எந்தன் கன்னியின் சங்கமம் என்னிடத்தில்
ஜென்மம் பூமியில் விழும் போதே
என் சிந்தை கலந்தது உன்னிடத்தில்

உதடுகளாலே கதை எழுதி
உள்ளத்தை மயக்கிட நான் வரவா
மாலையும் மேளமும் வரும் வரைக்கும்
உன் மனதை அடக்கவும் முடியாதா

நதிக்கரை ஓரத்து நானல்களே
என் நாயகி அழகை பாருங்களே
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே

பாடியவர்கள்.: ஷைலஜா, ஜேஸுதாஸ்
திரைப்படம்: காதல்கிளிகள்
வரிகள் : முத்துலிங்கம்
இசை: கே. வி . மகாதேவன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam