Friday, December 10, 2010

நிலவே நிலவே தாளம் போடு

நிலவே நிலவே தாளம் போடு பாட்டொன்று பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி பாட்டொன்று பாட போறேன்
நட்சத்திரமே கூட வா கூட வா
அக்கா மகளே பாட வா பாட வா
நான் பாடும் ராகம் அவள் அல்லவா
(நிலவே..)

கேளாறு தங்கம் இல்லாமல் அவ மேனி ஜொலிக்குமடி
கோஹினூர் வைரம் இல்லாமல் அவ மூக்கு கொலிக்குமடி
(கேளாறு..)
என் வீட்டு தோட்டத்திலே மல்லிகைப்பூ செடி ஒன்னு வச்சிருக்கேன்
என்னோட ஆசையைத்தான் பூத்திருக்கும் பூக்களில் கொட்டி வச்சேன்
ஆனியில நல்ல நாள் குறிச்சி ஆவனியில் ஒரு பாக்கு வச்சி
என் அக்கா மக அவளத்தான் கை புடிக்கப்போறேன்..
(நிலவே..)

ஆகாயம் ரெண்டு பட்டாலும் அவ மூச்சில் கலந்திருப்பேன்
அவ மேலே மழை பெய்ஞ்சாலும் அடிபட்டு நான் துடிப்பேன்
(ஆகாயம்..)
வாழ்விருக்கும் காலம் எல்லாம் அவளுக்கு நிழலாக நான் இருப்பேன்
அவள் நடக்கும் பாதையெல்லாம் அணுதினம் பூவாய் நான் துடிப்பேன்
கண்ணுக்குள்ளே போயி பூட்டி வைப்பேன் கண்மனியை அதில் விட்டு வைப்பேன்
அவ கால் கொலுசா நான் இருப்பேன் தினம் ஒரு உரு எடுப்பேன்
(நிலவே..)

படம்: தை பொறந்தாச்சு
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam