Thursday, December 16, 2010

முருகனை நினை மனமே!

முருகனை நினை மனமே -நலங்கள்
பெருகிடும் தினம் தினமே
உருகிடும் மறுகணமே
நெருங்கி வருவது அவன் குணமே
(முருகனை)

ஒவ்வொரு நொடியிலும்
அருகினில் இருப்பவன்
ஆஆஆ
(ஒவ்வொரு)
ஒவ்வொரு செயலிலும்
பெருமையைக் கொடுப்பவன்

உடலுக்கு உயிரெனில்
உயிருக்கு ஒளியவன்
உணர்ந்தவர் தொழுதிடும்
உயர்ந்தவர் பரவிடும்
(முருகனை)

அழகனின் அழகினில்
இருவிழி குளிர்ந்திடும்
ஆஆஆ
(அழகனின்)
அவனருள் மழையினில்
உணர்வுகள் சிலிர்த்திடும்
அறிவுடன் பொருள் புகழ்
அனைத்திலும் சிறந்திட
( முருகனை நினை மனமே)
இசை , வரிகள், பாடியவர் : இளையராஜா

3 Comments:

ஆயில்யன் said...

மார்கழி ஸ்பெஷல் தொடரட்டும்

:)

கோபிநாத் said...

ஆகா...நன்றியோ நன்றி ;) இப்போது தான் கேட்கிறேன் இந்த பாடலை ;)

Anonymous said...

I want this song can you send it to motisuni@gmail.com

Last 25 songs posted in Thenkinnam