Saturday, December 11, 2010

கவிதைகள் சொல்லவா



கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ
ஓவியம் வரையவா
உன் கால்த்தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

யார் அந்த ரோஜாப்பூ
கண்ணாடி நெஞ்சின் மேல்
கை வீசி போனால் அவள் யாரோ
உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே
(கவிதைகள்..)

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறோம் என்று டெஹ்ரியாமல்
சுற்றுதம்மா இங்கு என் வாழ்வும்
உண்மையில் என் மனம் மெழுகாகும்
சிலர் வீட்டுக்குதான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனியாய் உருகும்

பிறர் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும் இல்லை
அந்த கண்ணாடி நாந்தானே
முகமே இல்லை என்னிடம்தான்

காகிதத்தில் செய்த பூவுக்கும்
என் மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ
பூமிக்குள் இருக்கிற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ
இரண்டுமே வெளிவர முடியாதோ

செடியாய் பூப்பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சருகாய் கிடக்குதே
(கவிதைகள்..)

படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: பா. விஜய்

1 Comment:

srisuthesh said...

டெஹ்ரியாமல் - தெரியாமல்

Last 25 songs posted in Thenkinnam