Monday, November 28, 2011

நான் கண்டேன்

நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்
நேற்று இல்லா ஒன்று
மீண்டெதென்று இங்கு
மின்னலைகள் என்னைத்தாக்கிடுதே

மழை நின்றும் நான் நனைகிறேன்
துளி துளியாய் உடைகின்றேன்
சிறகில்லை நான் பறக்கின்றேன்
என்னை ஏனோ மறக்கின்றேன்
நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்

மௌனமாய் நெஞ்சிலே காயங்கள்
சேர்க்கிறாய்
ஆறுதல் நானாகவா
உன்னை நீ உன்னையே ஏனடி
புதைக்கிறாய்
வான்வெளி நான் காட்டவா
என் காதோரம் ஏதேதோ சொன்னாய்
கண் காணாத தூரம் நின்று
என் மூச்சுக்கு காற்றாய் வந்தாய்
என் ஆதாரம் நீயே என்று

நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்


பயணங்கள் போகப்போக நெடும்பாதை
நீளும் ஜாலம் கண்டேன்
விரல்களை கோர்த்துப்போக நீ பக்கம் வேண்டும்
என்பேனே
வழியினில் நானுமே மழையுதிர்காலமே
உலகத்தின் எல்லை போகவே தோன்றுமே

இரவினில் நான் விழிக்கிறேன்
கனவினில் தான் உறங்கினேன்
நடந்ததை நான் மறக்கிறேன்
இன்று புதிதாய் பிறக்கின்றேன்

நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்


திரைப்படம் : முரண்
பாடியவர்கள்: ரஞ்சித்,?
இசை: சாஜன் மாதவ்
வரிகள்: லலிதா ஆனந்த்

Saturday, November 26, 2011

நிழல் கண்டவன் நாளுமிங்கே

நிழல் கண்டவன் நாளுமிங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்
மொழிக்கேட்டவன் மோகம் கொண்டு
முகத்தைக்காணத் தேடுகின்றான்
நிழல் கண்டவன் நாளுமிங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்


என்றும் தொடர்ந்து போவது தான்
இனிய காதல் விதி ஆகும்

வெல்க இளமை வெல்க
வாழ்க காதல் வாழ்க
நிழல் கண்டவன் நாளுமிங்கே
நிழல் கண்டவன் நாளுமிங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்

இசை: எம் .எஸ். வி
பாடியவர்: எஸ்.பி.பி
திரைப்படம்: நினைத்தாலே இனிக்கும்

Tuesday, November 22, 2011

நகருதே நகருதே

நகருதே நகருதே
இந்த நிமிடம் நகருதே
எந்தன் இதயம் பதறுதே

உன்னைவிட்டுச் செல்ல வலிக்குதே
இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தந்த நினைவுகள் மறக்காதே
நான் இறந்தால்கூட இறக்காதே

இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தரும் பிரிவுகள் தாங்காதே
என் உயிரே உயிரை விலகா....தே


தேவதை உன்னிடம் நான்
வரமா கேப்பேன்
கேளடி
தேவதை உன்னையே
வரமாய்கேப்பேன்
நானடி
தூங்கினால் தூக்கத்தில்
கனவிலும் கேட்கும்
உந்தன் காலடி
எதற்கேன் இந்த இடைவெளி
ஏனடி?


இசை: S. தமன்
பாடியவர்: S.தமன்
வரிகள்: நா.முத்துக்குமார்
திரைப்படம் :வந்தான் வென்றான்

Monday, November 21, 2011

ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து

ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே

காதல் ரேகை ஒன்று இதயத்தைத் திறந்து
செல்லமாக மிரட்டிச் செல்கிறதே

உயிரே இதயம்….

உனக்கே உனக்கே…

உன்னை போலொருப் பெண்ணின் அருகிலே
மௌனம் கொள்வது கஷ்டம் தான்
பேசிகொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம்

சொற்கள் என்பது நெஞ்சம் மொத்தமும்
மௌனம் என்பதில் உள்ளது உள்ளது
மௌன மிஞ்சினால் பேசிவிடுவதே நல்லது

சூரியனை போலே என் முன்பு வந்தாய்
பனி துளி போலே பணிந்து விட்டேனே

உயிரே இதயம்….

உனக்கே உனக்கே…

கனவாய் இருந்தால் – இதிலே இருப்போம்
நிஜமாய் இருந்தால். – இன்னும் கேட்போம்

கனவாய் இருந்தால் – இதிலே இருப்போம்
நிஜமாய் இருந்தால். – இன்னும் கேட்போம்

ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே

காதல் ரேகை ஒன்று இதயத்தைத் திறந்து
செல்லமாக மிரட்டிச் செல்கிறதே

உள்ளே போகிற சுவாசம் என்பது
வெளியில் வருவது நியாயம் நியாயம்
வெளி வரும் சுவாசம் வாசம் தருவதே மாயம்

கண்கள் காண்கிற கனவு என்பது
கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும்
வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம்

போதி மரம் போலே உந்தன் கண்கள் பார்க்க
உந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேன்
உயிரே இதயம்….

உனக்கே உனக்கே…

ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து
ஆயுள் ரேகை நீள செய்கிறதே
காதல் ரேகை ஒன்று இதயத்தைத் திறந்து
செல்லமாக மிரட்டிச் செல்கிறதே

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : கார்த்திக், கோபிகா பூர்ணிமா

Sunday, November 20, 2011

காதல் வந்தும் சொல்லாமல்

காதல் வந்தும் சொல்லாமல்,
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை
கொல்லாதே சொல்லாமல் செல்லாதே...

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயோ?

இதயத்திலே ஒரு வலி,
இமைகளிலே பல துளி,
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்

வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு

விதியின் கைகளோ வானம் போன்றது
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது

நினைவு இடறி மண்ணில் விழுகிறதே,
நிழலில் கரைந்து அது சாகாதா?
காதல் கதறி இங்கு அழுகிறதே
இரண்டு கண்ணும் அதில் கருகாதா

ஏன்தான் காதல் வளர்த்தேன்
அதை ஏனோ என்னுள் புதைத்தேன்
சுடரில்லாத தீயில் எரிகின்றேன்
சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்
பெண்ணே உன் பாதையில் நகரும் மரமாகுவேன்...ஒ..ஒ
இரவைத் தின்று வாழ்ந்தாய் நீயடி...ஒ ஒ...
இதயம் கொண்டு போனாய் என்னடி

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயோ?

காதல் வந்தும் சொல்லாமல்,
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை,
கொல்லாதே, சொல்லாமல் செல்லாதே

ஓகாதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயோ?

இதயத்திலே ஒரு வலி,
இமைகளிலே பல துளி,
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு

விதியின் கைகளோ வானம் போன்றது
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது

திரைப்படம்: சரவணா
பாடியவர்கள் : சைந்தவி, ப்ரசன்னா
இசை: ஸ்ரீகாந்த் தேவா

Friday, November 18, 2011

ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம்

இதுபோல வருமா சந்தனமலர்கள்
வாசனை தரலாம் அன்பைத்தருமா
வானில் நீந்தும் மேகங்கள்
நம்மைப்பாடாதோ
நேரில் வந்து தெய்வங்கள்
பூவைத்தூவாதோ?

இறைவன் எழுதும் கவிதைகள் யாவும்
இயற்கை அழகாய் சிரிக்கிறதே
இயற்கை சிரிக்கும் அழகினைக் கண்டு
இதயம் சிறகை விரிக்கிறதே

சோலைப்பூங்காற்று இசைப்படிக்கும்
சொந்தம் கொண்டாடி மலரழைக்கும்
நதிகளில் அலைமோதி
கரைகளில் விளையாடும்
பறவைகள் அதைப்பார்த்து
புதுவகை பண்பாடும்
இனிமை வசந்தம் இதுதானோ

மரங்கள் விரும்பி குடையென நின்று
நிழலைக் கொடுக்கும் நமக்கெனவே
நிலவும் கதிரும் உதிப்பது கூட
உலகில் நமக்கு ஒளி தரவே
வாழ்வில் எந்நாளும் வளர்பிறையே
பாசம் நம்வாழ்வில் தனிக்கதையே
உலகினில் எல்லாரும்
உறவெனச் சொல்வோமே
அன்பெனும் ராஜாங்கம்
அமைந்திடச் செய்வோமே
மலர்வோம் மலர்வோம் மலராக


திரைப்படம் : புதுவசந்தம்
பாடியவர்: சித்ரா
இசை: எஸ்.ஏ ராஜ்குமார்


Wednesday, November 16, 2011

ஓய்வெடு ஓய்வெடு நிலவே

ஓய்வெடு ஓய்வெடு நிலவே - நீ
காதலில் தேயாதே
சாய்ந்திடு சாய்ந்திடு நிலவே - வா
மார்பிலே இடம் தாரேன்
பனி மார்கழி மாதத்திலே
இள வான்மதி மோகத்திலே
இந்த காதலன் கீதத்திலே
இளைப்பாரிடு நாணத்திலே


தேய்ந்தது தேய்ந்தது நிலவு -தன்
காதலன் முகம் காண

நிலமெனில் நீராய்
மரம் எனில் வேராய்
உயிர்துணை சேர்ந்திட
நானும் வரவா
மலருக்கு மணமாய்
இதழுக்கு நிறமாய்
இணைபிரியாதொரு ராகம் தரவா
மலர்விழி அம்பில் நான்
விழுந்தென்னை இழந்தேன்
தளிர்க்கரம் பற்றி நான்
யார் என்று மறந்தேன்
இடைவெளி இனி இல்லை
வா காதல் மானே
ஈருடல் இணைந்ததும்
ஓர் உயிர் தானே

தேய்ந்தது தேய்ந்தது நிலவு - தன்
காதலன் முகம் காண
சாய்ந்தது சாய்ந்தது நிலவு - உன்
மார்பினில் சுகம் காண

கவி எனில் பொருளாய்
கரும்பெனில் சுவையாய்
கடை வரை நான் உந்தன் கூடவருவேன்
நிஜமெனில் நிழலாய்
நெருப்பெனில் சுடராய்
இருவிழி மூடாமல் காவல் தருவேன்
உனக்கெனத்தானே பால் நிலவாக வளர்ந்தேன்
உனைக்கண்டதாலே நான் தினம் தேய மறந்தேன்
இயற்கையின் தடை மீறி
வாழும் நம் காதல்
இதற்கிணை கிடையாது
வேரொரு காதல்

ஓய்வெடு ஓய்வெடு நிலவே - நீ
காதலில் தேயாதே
சாய்ந்திடு சாய்ந்திடு நிலவே - வா
மார்பிலே இடம் தாரேன்
பனி மார்கழி மாதத்திலே
இள வான்மதி மோகத்திலே
இந்த காதலன் கீதத்திலே
இளைப்பாரிடு நாணத்திலே


தேய்ந்தது தேய்ந்தது நிலவு -தன்
காதலன் முகம் காண
சாய்ந்தது சாய்ந்தது நிலவு - உன்
மார்பினில் சுகம் காண


திரைப்படம்: வேலை
பாடகர்கள்: பவதாரிணி, ஹரிஹரன்
இசை: யுவன்சங்கர் ராஜா
வரிகள் : ஆர்.வி. உதயக்குமார்

Friday, November 11, 2011

நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி

நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி
நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி
(நாள்தோறும்)
விளையாடும் கேள்விக்குள்
விடைகள் தேடும் பதிலே வா
அலைபாயும் நெஞ்சுக்குள் அணைபோடும் அழகே வா
ஐ லவ் யூ ..

நெஞ்சில் நிரஞ்சனி கொஞ்சம் இறங்கி நீ
தாலாட்டு ராத்திரி
நீயே நீலாம்பரி

கவிதை சொல்லும் கிளியே கிளியே
கதைகள் தேடிப் போவோமா

காதலைத் தேடும் அலையே அலையே
கரையைத் தொட்டு சேர்வோமா

பகலும் இரவும் தழுவும்
கொஞ்சிப்பேசி குலவும் குலவும்
பொன்மாலை
பொன்மாலை ஓ இவ்வேளை ஓ..

(நாள்தோறும் )

காதல் விமானங்கள் காணாத தூரங்கள்
கந்தர்வ ராகங்கள் காதாரக் கேளுங்கள்
என் நெஞ்ச வானில் இன்று
நீ போடும் மின்னல்கள்
சொல்லாத ஜதிகள் சொல்லும்
என்னெண்ண துள்ளல்கள்

கதிர்கள் மின்னும் கண்ணில்
காதல் பொழுது புலரும் புலரும்
இன்னேரம்
இன்னேரம் ஓ பொன்னேரம்

(நாள்தோறும்)
இசை: இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா,கவிதா கிருஷ்ணமூர்த்தி
திரைப்படம் : தேவதை
வரிகள் : காமகோடியான்

Thursday, November 10, 2011

வெடி - இச்சு இச்சு



இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ரைட்டு
அச்சு அச்சு அச்சு அச்சு கொடு
தச்சு தச்சு தச்சு தச்சு கொடு
பிச்சு பிச்சு பிச்சு பிச்சு கொடு
ரைட்டா

ரைட்டு
மொட்டாகி பூவாகிற
பூவாகி காயாகிற
காயாகி கனியாகிற
கனியாகி தனியாகிட நின்னேனே

ஹே ஹே..

நான் தானே

ஹே ஹே..

ஏ முத்தாடுற பெண்ணுக்கு
முன்னுக்கும் பின்னுக்கும்
கன்னங்கள் புண்ணாகிட
காயங்கள் உண்டாகிட
வந்தேனே

ஹே ஹே..

வந்தேனே

ஹே ஹே..

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ரைட்டு

வாடகை வாடகை என்னடி வாடகை
உன் மன வீட்டுக்குள் உக்கார
என்னையே கேட்டாலும் இந்தான்னு தந்து நான்
ஒட்டிப்பேன் அட்டை போல் உன்கூட

மீனாக மீனாக வானத்து மீனாக
வீட்டைத்தான் விட்டுத்தான் வந்தாட
இந்திரன் சந்திரன் ரெண்டுமே நீதானே
தன்னைத்தான் உன் கையில் தந்தானே

வண்ணப் புதையலா உன்னை எண்ணி
நெஞ்சில் வச்சிருப்பேன் ரொம்ப பத்திரமா
சின்ன சிரிப்புல என்னை வளைச்சுட்ட
சித்தன்ன வாசலில் சித்திரமா

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ரைட்டு

வாசனை வாசனை மல்லிகை வாசனை
கப்புன்னு குப்புன்னு மப்பேத்த
அத்திக்கும் இத்திக்கும் எத்திக்கும் பத்திக்கும்
தொத்திக்கும் தீ ஒண்ணு சூடேத்த

பூசனை பூசனை மன்மத பூசனை
கை பாதி மெய் பாதி செய்யாதே
மை வைத்த கண்ணுக்குள் பொய் வைத்த பெண்ணுக்குள்
பெய்யாத தேன்மழை பெய்யாதே

கொக்கு தலையில வெண்ணை வச்சு
அதை பக்குன்னு தின்னுக்கப் பார்க்குறியே
அந்தி கருக்கலில் அத்த இத்த சொல்லி
முந்தி விரிச்சிட கேக்குறியே

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ரைட்டு
இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ரைட்டு
முத்தாடுற பெண்ணுக்கு
முன்னுக்கும் பின்னுக்கும்
கன்னங்கள் புண்ணாகிட
காயங்கள் உண்டாகிட
வந்தேனே

ஹே ஹே..

வந்தேனே

ஹே ஹே..

மொட்டாகி பூவாகிற
பூவாகி காயாகிற
காயாகி கனியாகிற
கனியாகி தனியாகிட நின்னேனே

ஹே ஹே..

நான் தானே

ஹே ஹே..

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ரைட்டு

படம்: வெடி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: விஜய் அந்தோணி, சங்கீதா ராஜேஸ்வரன்
வரிகள்: வாலி

சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்




சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
புள்ளி வைத்தாய்
யாரைக்கேட்டு என்வாசலிலே
கோலம்போட்டாய்
வீட்டுக்குள் விடச்சொல்லிக்
கேட்டுப்பார்த்தாய்
மறுத்ததும் இடி என்று திட்டித்தீர்த்தாய்
ஹூலாலா ஹூலாலா ஹூலா ஹூலா

வானத்தின் தீபாவளிகள் பார்த்தேன் பார்த்தேனே
ஈரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே
கேட்டேனே
(சொட்டு சொட்டு சொட்டாய்)

மரங்களின் கதகளி
மரகத வயல்வெளி
பார்த்தேனின்று
பார்த்தேனின்று

அலைகளை தாயமாய்
உருட்டிடும்
கடலிடம்
கண்டேன் கண்டேன் கவிதை ஒன்று
பூவின் மீது
தாழ்ப்பாள் போட்டு
தூங்கும் தேனை திருடிட வா
வாயை வாயை மூடித்திறந்தே பேசும்
மீனே பதில் தரவா

தையாரே தையாரே
தைய்யா தையயா
தையாரே
மயில்தோகை மயில்தோகை
பட்டுச்சேலை முந்தானை
முந்தானை
(சொட்டு சொட்டு சொட்டாய்)

வானமே வாயிலே
பருகிடும் ஆசையிலே
தூக்கம் இன்றி
தூக்க்ம் இன்றி
வானவில் பாலமா
தரை வரை நீளுமா
ஏக்கம் கொண்டேன்
ஏக்கம் கொண்டேன்

விண்மீன் கிண்ணம்
பொங்கும் வண்ணம்

வானில் வழியும் வெண்ணிலவே
காலை நேரம் காற்றில் ஈரம்
சோம்பல் முறிக்கும் சூரியனே
ஓ தையாரே தையாரே
தைய்யா தைய்யா
தையாரே

தீராத தீராத இன்பமெல்லாம் கண்டேனே
இயற்கையிலே

(சொட்டுசொட்டாய்)

திரைப்படம் : வர்ணஜாலம்
இசை : வித்யாசாகர்
வரிகள் : தாமரை
பாடியவர் : மாதங்கி

Wednesday, November 9, 2011

உன்னைத் தேடித்தேடி காற்றில் கலந்து

உன்னைத் தேடித்தேடி காற்றில் கலந்து
என் இசையின் பயணம் தொடங்கும்
உன்னைக் காணும் நேரம்
கண்ணீர் துளிகள்
என் தோளில் விழுந்து இறங்கும்
இன்று என்னை மீட்டும்
உனது பாடல் உயிரை சூடி வருமா
உன்னைத்தேடித்தேடி
உன்னைத்தேடித்தேடி


கண்ணும் இமையும் இருபாகமோ(2)
விடியும் போது அது தூங்குமா
உனது வானில் வரும் வெண்ணிலா
எனது இரவுகளைச் சொல்லுமா
நீ தரும் இசையில் நனைகிறேன்
நனைந்த சிறகுடன் சிலிர்க்கிறேன்
ஒரிதழ் மலரைப்போலவே
வலிக்கும் தனிமையில் துடிக்கிறேன்
உனது பாடல் எனது தேடல்
இரண்டும் சேரும் நாளை எண்ணி

(உன்னைத்தேடித்தேடி)

உனது நினைவில் இங்கு வாழ்கிறேன்
உனது வார்த்தைகளைப் பாடினேன்
நடந்து போகும் வழி யாவிலும்
உனது சுவடுகளைத் தேடினேன்
தீபத்தை விழியில் ஏற்றினேன்
மனதில் மலர்களைத் தூவினேன்
நீ வரும் நினைவில் மாலையில்
எனக்குள் உன்னுடன் பேசினேன்
கனவுப்பாலம் போட்டு நடந்து
கைகள் கூடுகின்ற காலம் பார்த்து

திரைப்படம் : கொஞ்சிப்பேசலாம்
பாடியவர் : சாதனா சர்கம்
இசை : இளையராஜா




வெடி - இப்படி மழை அடித்தால்



இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன்

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்

இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இப்படி இப்படியே வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்

இப்படி இப்படியே முகம் சிவந்தால்
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்

இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மணம் விடுவேன்

இப்படி இப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இப்படி இப்படியே பூட்டி கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்

இப்படி இப்படி நீ அடம் பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்

இப்படி இப்படியே கிறங்கடித்தால்
எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்

இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

படம்: வெடி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: கார்த்திக், சைந்தவி
வரிகள்: நா. முத்துக்குமார்

என் வெண்ணிலவே எரிக்காதே



என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே



பனியில் இலையற்ற தனிமரம் நான்
பாலையில் துடித்திடும் சிறுப்புழு நான்
காதல் தேவதைப் போல் வந்து
களப்பலிக்கேட்பதேன் மோகினியே
நீ ஏன் எரித்தாய் மீனாட்சி
உன் நிழலில் வாழும் மதுரையடி!
மழையாய் தர வா நீ
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...



கள்ளிப் பாலை ஊற்றிவிட்டு
வெள்ளி நிலவாய்ப் போனவளே
என்னில் வளர்த்த பொற்சிறகை
ஒடிந்திட நடந்திடும் கொடும் புயலே
அழகரைத் தொட்டதால் வைகை நதி
அலை கடல் சேரா மதுரையடி
என் விடிவா முடிவா நீ!
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏதோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

திரைப்படம் : ஆடுகளம்
பாடியவர் : கே கே
இசை: ஜிவி ப்ரகாஷ்
வரிகள் : V. I. S. Jayapalan

Tuesday, November 8, 2011

மயக்கம் என்ன - என்னென்ன செய்தோம்



என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே
காணாத துயரம் கண்ணிலே
ஓயாத சலனம் நெஞ்சிலே
இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
அன்பான புன்னைகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்

வாழ்கையின் பொருள்தான் என்ன
வாழ்ந்துதான் பார்த்தால் என்ன
கதை சொல்கிறாய் பயம் கொள்கிறாய்
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
உனது அரசாங்கம் பெரும் காடு
உலகம் அதிலே ஒரு சிறு கூடு
உன்னை அணைத்து கொண்டு
உள்ளம் மருகி நின்றால்
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்
இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா

உள்ளிருக்கும் உன்னை தேடி
ஓயாமல் அலைவோர் கோடி
கருவறையா நீ கடல் அலையா
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
என்னில் கடவுள் யார் தேடுகிறோம்
பொய்யாய் எவரின் பின் ஓடுகிறோம்
கண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த
பெருந்தாயின் கருணை மறக்கிறோம்
இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
அன்பான புன்னகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்

படம்: மயக்கம் என்ன
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
வரிகள்: செல்வராகவன்

பூந்தென்றல் காற்றே வா வா

பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

ஏங்காமல் ஏங்கும் இளமைக்காலம்
எங்கெங்கும் தோன்றும் இனிமைக்கோலம்
என் நெஞ்சின் நினைவில் புதிதோர் ராகம்
என்றென்றும் தொடரும் மனதில் தாகம்
பூவாரமே எந்தன் பொன்னாரமே
நான் பாட நீ வேண்டும் அன்பே...ஏ ஏ

பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

காணாத நெஞ்சம் கனவில் வாழும்
காவேரி போல நினைவில் ஆடும்
கண்மூடும் நேரம் கவிதை பாடும்
கைசேரும் போதும் இதயம் கூடும்
ஏனென்பதோ என்னதான் என்பதோ
நீ சொல்ல வாராததேனோ...ஓ ஓ

பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா


இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுசீலா , ஜெயச்சந்திரன்
திரைப்படம் : மஞ்சள் நிலா

Monday, November 7, 2011

போறானே போறானே காத்தோட தூத்தலப் போல

திரைப்படம்: வாகை சூட வா
இசை: ஜிப்ரான்.எம்
பாடலசிரியர்: கார்திக் நேதா
பாடியவர்கள்: ரஞ்சித், நேஹா பஸின்
====

போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே

அழகாய் நீ நெரஞ்ச
அடடா பொந்துக்குள் புகையைப் போல

போறாளே போறாளே காத்தோட தூத்தலப் போல
போறாளே போறாளே போவாம தான் போறாளே

போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே போவாமத் தான் போறாளே
====
பருவம்…தொடங்கி… ஆசவைச்சேன்….
இல்லாத…சாமிக்கும் பூசவைச்சேன்…

மழையில், நனஞ்ச காத்தப் போல,
மனச நீயும் நனச்சுபுட்ட

ஈரகுலைய கொஞ்சம் இரவல்தாய்யா
உன்ன மனச கொஞ்சம் புனையவா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா

அட நல்லாங்குருவி ஒன்னு மனச மனச
சிறு கன்னாங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன கொரத்தி பொன்னு கண்ணு முழியத்தான்
ஈச்சங்காய ஆஞ்சிருச்சே …
====
போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத் தான் போறானே
====
கெனத்து நெலவா நானிருந்தேன்,
கல்ல எரிஞ்சு கொழப்பிப்புட்ட

ஒன்ன பார்த்து பேசயில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்

மூக்கணாங் கவுரப்போல உன்னெனப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு

அடகாக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்கின்னு பூத்திரிச்சே என் பொளப்பு

அட மஞ்சக் கெழங்கே உன்ன நெனச்சி நெனச்சி தினம்
மனசுகுள்ள வச்சி பூட்டிகிட்டேன்
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து நான்
காயத்துக்கு பூசிக்கிட்டேன்
===
போறாளே.. போறாளே.. போறாளே..
போவாமதான் போறாளே.

அழகாய் நீ நெரஞ்ச
அடடா பொந்துக்குள் புவியப் பொல ..

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே

போறானே ..போறானே ..போறானே ..

மயக்கம் என்ன - காதல் என் காதல்



காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல

ஏ மச்சி உட்ரா

ஏய்என்னை பாட உடுடா
நா பாடியே தீருவேன்

சரி பாடித் தொல


காதல் எங் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாழான நெஞ்சு இப்ப வெந்னீருல

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல
எதுவும் புரில உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல
சூட்டுல எங்குறேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள

நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ வொர்த்தே இல்ல

தேனூறுன நெஞ்சுக்குள்ள
கல்லூறுதே என்ன சொல்ல

ஒ படகிருக்கு வலை இருக்கு
கடலுக்குள்ள மீனா இல்ல

வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல

மான் விழி தேன் மொழி
என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி

ப்ரெண்ட்சு கூடத்தான் இருக்கணும் மாமா
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட
உன்னத் தவிர எனக்கொண்ணும் இல்ல

ஒ... கனவிருக்கு கலரே இல்ல
படம் பாக்கறேன் கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல
உறவிருக்கு பெயரே இல்ல

வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி...

போதும் மச்சான்

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல
எதுவும் புரில உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

குட் நைட்...குட் நைட்...

ஆங்... ஓகே

ஏய்...

குட் நைட்... தேங் யு சோ மச்... மச்சி

படம்: மயக்கம் என்ன
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: தனுஷ், செல்வராகவன்
வரிகள்: தனுஷ்

Sunday, November 6, 2011

மயக்கம் என்ன - வோட வோட வோட



வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல

ஃப்ரியா சுத்தும் போது ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

உலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்சு கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது

கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கர் ஆயிட்டேன்
குண்டு சட்டியில
ரெண்டு குதிர வண்டி ஓட்டுறேன்

ஒரு பீச்சுல தனியா அலைஞ்சேன் அலைஞ்சேன்
நடு ரோட்டுல அழுதேன் புரண்டேன் கிழிஞ்சேன்
பாரம் தாங்கல தாங்கல கழுதை நான் இல்லையே
ஜாணும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே
கிராக்கா மாறிட்டேன் ஜோக்கர் ஆயிட்டேன்
பீயூசு போன பின் பல்புக்கான சுவிட்ச்ச தேடுறேன்

வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல

:ஃப்ரியா சுத்தும் போது ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

நடு ராத்திரி எழுந்தேன் படுத்தேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்

மீனா நீந்தறேன் நீந்தறேன்
கடலும் சேரலையே
படகா போகுறேன் போகுறேன்
கரையும் ஏறலையே

கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கர் ஆயிட்டேன்
கேள்வி கேட்டு கேட்டு
கேள்விகுறி போல நிக்குறேன்

வோட வோட வோட தூரம் கொறயல
தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல
ஃப்ரியா சுத்தும் போது
ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப
ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

உலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்சு கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது

படம்: மயக்கம் என்ன
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்: தனுஷ்
வரிகள்: செல்வராகவன்,தனுஷ்

Saturday, November 5, 2011

மயக்கம் என்ன - நான் சொன்னதும் மழை வந்துச்சா



நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்துச்சா
உன்ன தூக்கி போக தான் வருவேனுன்னு
கிளி வந்து பதில் சொல்லுச்சா
கரு நாக்கு கார புள்ள
கருப்பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நெனப்பு தொல்ல
நீ களவாணி
ஓஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

ஆடு ... ஆடு ...

ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா

அடி போடி போடி போடி முட்ட கன்னி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ணை மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவுல தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாரேன்
காதுக்கு ஜிமிக்கி தாரேன்
கழுத்துக்கு தாலி தாரேன்
நீ வர்றியாடி
கருவாட்டு கொழம்பா ஆ ஆ... நீயும்... ருசி ஏத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது.

படம்: மயக்கம் என்ன
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,சைந்தவி
வரிகள்: செல்வராகவன்

Friday, November 4, 2011

ஏழாம் அறிவு - ஏலேலம்மா



ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

அடி நியூட்டன் ஆப்பிள் விழ
புவி ஈர்ப்பை கண்டானடி
இன்று நானும் உன்னில் விழ
விழி ஈர்ப்பை கண்டேனடி
ஓசை கேட்காமலே இசை அமைத்தான் பீதோவனே
நீ என்னை கேட்காமலே எனை காதல் செய் நண்பனே

குத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே
குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே
மேலும் மேலும் அழகாய் மாறி போனனேன் நானே

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

சிறு நேரம் இல்லாமலே
துளி நீரும் இல்லாமலே
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்
தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை இட்டாய்
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா வா

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

படம்: ஏழாம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், கார்த்திக், ஷாலினி, சுருதி ஹாசன்
வரிகள்: நா. முத்துக்குமார்

Thursday, November 3, 2011

அன்பே ஒரு ஆசை கீதம் ...

அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ

இங்கே தினம் ஏங்கும் நெஞ்சம்
மீண்டும் பார்ப்பாயோ
குயிலோசை கேட்குதோ ..ஓ.. ஓ.. ஓ. கூக்கு
நீ எங்கே நான் இங்கே
வா.. நீ.. வா...
(அன்பே)


கண்ணில் விழுந்து
என் நெஞ்சில் கலந்தாய் (கண்ணில்)
கண்ணே என் காதலி
நெஞ்சில் இருந்தே
நித்தம் இனிக்கும்
நீயே என் நாயகி
நீயின்றி நானில்லை
வா . .. நீ .வா..

(அன்பே)

ஜென்மம் முழுதும்
உன் நெஞ்சில் உலவும்
ஜென்மம் முழுதும்
உன் நெஞ்சில் உலவும்
என் ஜீவன் உன்னிடம்

உன்னைத்தொடர்ந்தேன்
என் எண்ணம் இருக்கும்
நீயென்றும் என்னிடம்
நீயின்றி நான் இல்லை
வா.. நீ.. வா...

அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ
இங்கே தினம் ஏங்கும் நெஞ்சம்
மீண்டும் பார்ப்பாயோ

குயிலோசை கேட்குதோ ..ஓ.. ஓ.. ஓ. கூக்கு
நீ எங்கே நான் இங்கே
வா.. நீ.. வா...

படத்தின் பெயர்: பூவுக்குள் பூகம்பம்
இசை: சங்கீத ராஜன்
பாடியவர் : எஸ்.பி .பி

ஏழாம் அறிவு - யம்மா யம்மா காதல் பொன்னம்மா



யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே

பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்

அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை
ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாரு

என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே

வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா

படம் : ஏழாம் அறிவு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: கபிலன்

Wednesday, November 2, 2011

ஏழாம் அறிவு - இன்னும் என்ன தோழா



இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

இன்னும் என்ன தோழா, , எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!
தொடு வானம் இனி தொடும் தூரம்!
பலர் கைகளை சேர்க்கலாம்!

விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?

ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்

பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?

இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு!
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

படம்: ஏழாம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பல்ராம், நரேஷ் ஐயர், சுசித் சுரேசன்
வரிகள்: பா. விஜய்

ஒருநாள் உன்னோடு ஒருநாள்



ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்....


மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே
உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்


உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு
கோபம்.. வேகம்.. மாறாதோ
மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ
புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக

காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்

ஒரு நாள்..

உன்னோடு ஒரு நாள்

உறவினிலாட..

புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

இசை:இளையராஜா
பாடியவர்கள்: எஸ். ஜானகி, எஸ்.பி. பி
வரிகள் : பஞ்சு அருணாசலம்
திரைப்படம் :உறவாடும் நெஞ்சம்

Tuesday, November 1, 2011

மயிலே மயிலே உன் தோகை இங்கே


ஜென்ஸி பற்றிய ஒரு கட்டுரை



மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
கனி வாய் மலரே பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா...நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழலில் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

திரைப்படம் : கடவுள் அமைத்த மேடை
பாடியவர் : பாலசுப்ரமணியம் , ஜென்ஸி
இசை : இளையராஜா

Last 25 songs posted in Thenkinnam