Wednesday, November 2, 2011

ஒருநாள் உன்னோடு ஒருநாள்



ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்....


மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே
உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்


உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு
கோபம்.. வேகம்.. மாறாதோ
மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ
புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக

காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்

ஒரு நாள்..

உன்னோடு ஒரு நாள்

உறவினிலாட..

புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

இசை:இளையராஜா
பாடியவர்கள்: எஸ். ஜானகி, எஸ்.பி. பி
வரிகள் : பஞ்சு அருணாசலம்
திரைப்படம் :உறவாடும் நெஞ்சம்

1 Comment:

ஜோதிஜி said...

மின் அஞ்சல் வாயிலாக பெறும் வசதியை உருவாக்கவும்.

Last 25 songs posted in Thenkinnam