Wednesday, November 9, 2011

உன்னைத் தேடித்தேடி காற்றில் கலந்து

உன்னைத் தேடித்தேடி காற்றில் கலந்து
என் இசையின் பயணம் தொடங்கும்
உன்னைக் காணும் நேரம்
கண்ணீர் துளிகள்
என் தோளில் விழுந்து இறங்கும்
இன்று என்னை மீட்டும்
உனது பாடல் உயிரை சூடி வருமா
உன்னைத்தேடித்தேடி
உன்னைத்தேடித்தேடி


கண்ணும் இமையும் இருபாகமோ(2)
விடியும் போது அது தூங்குமா
உனது வானில் வரும் வெண்ணிலா
எனது இரவுகளைச் சொல்லுமா
நீ தரும் இசையில் நனைகிறேன்
நனைந்த சிறகுடன் சிலிர்க்கிறேன்
ஒரிதழ் மலரைப்போலவே
வலிக்கும் தனிமையில் துடிக்கிறேன்
உனது பாடல் எனது தேடல்
இரண்டும் சேரும் நாளை எண்ணி

(உன்னைத்தேடித்தேடி)

உனது நினைவில் இங்கு வாழ்கிறேன்
உனது வார்த்தைகளைப் பாடினேன்
நடந்து போகும் வழி யாவிலும்
உனது சுவடுகளைத் தேடினேன்
தீபத்தை விழியில் ஏற்றினேன்
மனதில் மலர்களைத் தூவினேன்
நீ வரும் நினைவில் மாலையில்
எனக்குள் உன்னுடன் பேசினேன்
கனவுப்பாலம் போட்டு நடந்து
கைகள் கூடுகின்ற காலம் பார்த்து

திரைப்படம் : கொஞ்சிப்பேசலாம்
பாடியவர் : சாதனா சர்கம்
இசை : இளையராஜா




1 Comment:

வல்லிசிம்ஹன் said...

அருமையான குரல் அருமையான பாடல். நன்றி கயல்.அனுபவித்தேன்.

Last 25 songs posted in Thenkinnam