Tuesday, November 8, 2011

பூந்தென்றல் காற்றே வா வா

பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

ஏங்காமல் ஏங்கும் இளமைக்காலம்
எங்கெங்கும் தோன்றும் இனிமைக்கோலம்
என் நெஞ்சின் நினைவில் புதிதோர் ராகம்
என்றென்றும் தொடரும் மனதில் தாகம்
பூவாரமே எந்தன் பொன்னாரமே
நான் பாட நீ வேண்டும் அன்பே...ஏ ஏ

பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

காணாத நெஞ்சம் கனவில் வாழும்
காவேரி போல நினைவில் ஆடும்
கண்மூடும் நேரம் கவிதை பாடும்
கைசேரும் போதும் இதயம் கூடும்
ஏனென்பதோ என்னதான் என்பதோ
நீ சொல்ல வாராததேனோ...ஓ ஓ

பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா


இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுசீலா , ஜெயச்சந்திரன்
திரைப்படம் : மஞ்சள் நிலா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam