Friday, November 18, 2011

ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம்

இதுபோல வருமா சந்தனமலர்கள்
வாசனை தரலாம் அன்பைத்தருமா
வானில் நீந்தும் மேகங்கள்
நம்மைப்பாடாதோ
நேரில் வந்து தெய்வங்கள்
பூவைத்தூவாதோ?

இறைவன் எழுதும் கவிதைகள் யாவும்
இயற்கை அழகாய் சிரிக்கிறதே
இயற்கை சிரிக்கும் அழகினைக் கண்டு
இதயம் சிறகை விரிக்கிறதே

சோலைப்பூங்காற்று இசைப்படிக்கும்
சொந்தம் கொண்டாடி மலரழைக்கும்
நதிகளில் அலைமோதி
கரைகளில் விளையாடும்
பறவைகள் அதைப்பார்த்து
புதுவகை பண்பாடும்
இனிமை வசந்தம் இதுதானோ

மரங்கள் விரும்பி குடையென நின்று
நிழலைக் கொடுக்கும் நமக்கெனவே
நிலவும் கதிரும் உதிப்பது கூட
உலகில் நமக்கு ஒளி தரவே
வாழ்வில் எந்நாளும் வளர்பிறையே
பாசம் நம்வாழ்வில் தனிக்கதையே
உலகினில் எல்லாரும்
உறவெனச் சொல்வோமே
அன்பெனும் ராஜாங்கம்
அமைந்திடச் செய்வோமே
மலர்வோம் மலர்வோம் மலராக


திரைப்படம் : புதுவசந்தம்
பாடியவர்: சித்ரா
இசை: எஸ்.ஏ ராஜ்குமார்


0 Comments:

Last 25 songs posted in Thenkinnam