Thursday, December 29, 2011

ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்


ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..
ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..

யார் மீது ஆசை கூடிப்போக தேகம் இளைத்தாயோ
நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ
யார் மீது ஆசை கூடிப்போக தேகம் இளைத்தாயோ
நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ
குறையிது குறையிது இடைவெளி குறையிது
நிறையிது நிறையிது சுகம்
இணையிது இணையிது இரு உடல் இணையிது
கவிதைகள் எழுதுது நகம்
நீ விடும் மூச்சிலே காதலின் கூச்சலே
ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..

உன் சேலை கூறும் காதல் பாடம்
நான் பயில வேண்டும்
என் ஆயுள் ரேகை நீயுமாகி
கூட வர வேண்டும்
உன் சேலை கூறும் காதல் பாடம்
நான் பயில வேண்டும்
என் ஆயுள் ரேகை நீயுமாகி
கூட வர வேண்டும்
கொடியது கொடியது தனிமைகள்கொடியது
இனியது இனியது துணை
மிரளுது மிரளுது அழகுகள் மிரளுது
இமைகளில் முடிந்திடு எனை
தாவணி வீதியில் காமனின் வேதியல்
ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..
இசை: வித்யாசாகர்
திரைப்படம்: பரமசிவன்
பாடியவர்கள் :மது பாலக்ருஷ்ணன், சுஜாதா

வரிகள் : யுகபாரதி

Wednesday, December 28, 2011

என்ன இது இது என்ன தொல்லை

என்ன இது இது என்ன தொல்லை
என் மனசு என்னிடமும் இல்லை
மௌனம் வந்து விழுங்குது சொல்லை
ஏனோ
காலிரண்டும் உடன் வரவில்லை
புன்னகையும் புரிந்திடவில்லை
கண்ணிமைகள் உறங்கிடவில்லை
ஏனோ ஏனோ

உந்தன் தனிமையின் உலகினில் முதன்முறை
ஒருமுகம் அடிக்கடி  அடிக்கடி வருதோ
உந்தன் தலையணை உறைகளில்
கனவெனும் பூச்செடி வட்டமிட்டு பூக்களைத்தருதா
உந்தன் நடையுடை பாவனை சிந்தனை யாவிலும்
புதுப்புது மாற்றங்கள் வருதா

ஒரு செல்லமான கள்ளத்தனம்
கண்ணுக்குள்ளே வந்து நின்று
விட்டுவிட்டு வேதனைகள் தருதா



இது ஏனோ இது ஏனோ
என்னயிதுவோ என்னயிதுவோ
என்னவென்று அய்யோ தெரியாதா
கண்ணை மூடி உன்னை  நீயே
உற்றுப்பார்த்தால்
உள்ளம் சொல்லாதா

என்ன இதுவோ  என்ன இதுவோஎன்னவென்று
அய்யோதெரியாதா
ஒன்றும் ஒன்றும் ஒன்று சேர்ந்து
ஒன்றாகும் உண்மைப் புரியாதா
ஏனோ ஏனோ

(என்ன இது )

நேரம் வரும் வரை என் மனதுக்குள்
நூறு தீ அலை இது எதனாலோ
அய்யோ

பார்வை ஒரு முறை நீ பார்த்ததும்
சாரல் பலமுறை எதனாலோ
நீ ஒருமுறை பார்த்தால்
இருதயம்  உறையும்
இது என்ன இது ஏனோ

அய்யோ நீ மறுமுறை பார்த்தால்
இருதயம்
இது என்ன இது ஏனோ

ஒன்றாக தொலைந்தோமோ
என்ன இதுவோ என்ன இதுவோ
என்னவென்று அய்யோ தெரியாதா
விரும்பிவந்து மாட்டிக்கொண்ட
மந்திரத்தை உள்ளம் சொல்லாதா
 என்ன இதுவோ என்ன இதுவோ
என்னவென்று
அய்யோ தெரியாதா
திரும்ப திரும்ப மாட்டிக்கொள்ளும்
தந்திரத்தால் உள்ளம் துள்ளாதா
ஏனோ ஏனோ
திரைப்படம் : மௌனகுரு
இசை: தமன்
வரிகள் : நா.முத்துகுமார்
பாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரஞ்சித்,ரீட்டா, ரம்யா



Tuesday, December 27, 2011

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்

http://www.saavn.com/popup/psong-c2VIrL4g.html&L=tamil

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
வெண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம் நீலாம்பரி கேட்கலாம்
(சந்தனம்)


மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த காதல் சீதனம் (மாணிக்க)

இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இசைவந்து பாடும் மோகனம்
இசைவந்து பாடும் மோகனம்

(சந்தனம்)

நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன (நீ பார்க்கும்)

இதமாக மை போட்டு இமையென்னும் கைபோட்டு
இதமாக மை போட்டு இமையென்னும் கைபோட்டு
உன் கண்கள் என்னைக் கொய்தன
உன் கண்கள் என்னைக் கொய்தன

(சந்தனம்)

திரைப்படம்: துடிக்கும் கரங்கள்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பி
இசை:எஸ்.பி.பி

Thursday, December 22, 2011

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி

ஓர் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற நேரம் ,
பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள்

நான் காலைப் பனி
நீ புல்லின் நுனி நான் வீழாமல் நீ தாங்கினாய்

நான் கேளா ஒலி
நீதானே மொழி என் ஓசைக்கு பொருளாகிறாய்…ஓஓ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

நான் தூங்காத போதும்
என் துன்பத்தின் போதும் என் அன்னை போல் காத்தாய் எனை
பொன் வான் எங்கும் நீயே
விண்மீன் ஆகின்றாயே நான் அண்ணாந்து பார்ப்பேன் உனை
நான் கேட்கும் வரம்
என் வாழ் நாள் தவம் உன் அன்பன்றி வேறேதடி

ஒஹ் பாரா முகம்
நீ காட்டும் கணம் நான் கூறாமல் சாவேனடி …ஹோ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாணி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்

திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: முகமத் இர்ஃபான்
வரிகள்: தாமரை
ஜிவிப்ரகாஷ்: இசை

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி

ஓர் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற நேரம் ,
பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள்

நான் காலைப் பனி
நீ புல்லின் நுனி நான் வீழாமல் நீ தாங்கினாய்

நான் கேளா ஒலி
நீதானே மொழி என் ஓசைக்கு பொருளாகிறாய்…ஓஓ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

நான் தூங்காத போதும்
என் துன்பத்தின் போதும் என் அன்னை போல் காத்தாய் எனை
பொன் வான் எங்கும் நீயே
விண்மீன் ஆகின்றாயே நான் அண்ணாந்து பார்ப்பேன் உனை
நான் கேட்கும் வரம்
என் வாழ் நாள் தவம் உன் அன்பன்றி வேறேதடி

ஒஹ் பாரா முகம்
நீ காட்டும் கணம் நான் கூறாமல் சாவேனடி …ஹோ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாணி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்

திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: முகமத் இர்ஃபான்
வரிகள்: தாமரை
ஜிவிப்ரகாஷ்: இசை



திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: முகமத் இர்ஃபான்
வரிகள்: தாமரை
ஜிவிப்ரகாஷ்: இசை
<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Muppozhudhum+Un+Karpanaigal.html?e">Listen to Muppozhudhum Un Karpanaigal Audio Songs at MusicMazaa.com</a></p>

Wednesday, December 21, 2011

கண்கள் நீயே காற்றும் நீயே

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊணும்நீ ..உயிரும் நீ


பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே


(கண்கள் நீயே..காற்றும் நீயே )

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் தேனே
தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்

எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

இசை: ஜி.வி ப்ரகாஷ்
வரிகள்: தாமரை
திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்:சிதாரா
<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Muppozhudhum+Un+Karpanaigal.html?e">Listen to Muppozhudhum Un Karpanaigal Audio Songs at MusicMazaa.com</a></p>

Tuesday, December 20, 2011

ஹேஹேஹே கீச்சுக் கிளியே - 2000வது பாடல்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்,
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்,
அதன் உயிர்சதை இசைவது
என்றும் அந்த நாதத்தில்,

உயிர்களின் சுவாசம் காற்று,
அந்த காற்றின் சுவாசம் கானம்,
உலகே இசையே… ஏ…
எந்திர வாழ்கையின் இடையே,
நெஞ்சில் ஈரத்தில் புசிவதும் இசையே,
எல்லாம் இசையே, …ஏ…
காதல் வந்தால் அட அங்கும் இசைதான்,
கண்ணீர் வந்தால் அட அங்கும் இசைதான்,
தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்,
அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்,
யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து,
கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்,

இசையோடு வந்தோம்… இசையோடு வாழ்வோம்,
இசையோடு போவோம்… இசையாவோம்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

இன்னிசை நின்று போனால் என் இதயம்,
நின்று போகும் இசையே… உயிரே…
எந்தன் தாய்மொழி இசையே,
என் இமைகள் துடிப்பதும் இசையே,
எங்கும் இசையே,
மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்,
கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்,
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு,
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு,
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு,
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு,

இசையோடு வந்தேன்… இசையோடு வாழ்வேன்…
இசையோடு போவேன்… இசையாவேன்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

இசை:தேவா
பாடியவர்:ஹரிஹரன்
திரைப்படம்:முகவரி
வரிகள்: வைரமுத்து

அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே


அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே

ஓட்டுக்குள்ளே நத்தையைப் போல்
ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம்
பறவை போல பறக்கிறதே
பார்த்துகொள்ளு நீ கொஞ்சம்
மின்னல் வந்து விளக்கேற்றும்
மேகம் வந்து தாலாட்டும்
நினைக்கும் திசையில் பறந்திடலாம்
காதல் உனக்கு கை கொடுக்கும்
குட்டி குட்டி செடி அது
தொட்டில் கட்டும் மலர்
தினம் உன் பெயரை சொல்லிசொல்லி
அது அழைக்கிறதே
பெற்றவர்கள் முகம்
சுற்றி உள்ளவர்கள் முகம் - அட
அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே


ஆ..நீயின்றி நானில்லை அது நிச்சயம்
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
அன்பே அன்பே லலலாலலாலா..
அன்பே அன்பே லலலாலலாலா..

தேவதையின் கதைக் கேட்டு
சின்ன வயதில் தூங்கினேன்
தூக்கம் பறிக்கும் தேவதையை
நேரில் இன்று பார்க்கிறேன்..
சின்ன வயதில் பார்த்த நிலா
தூரமாகிப் போகலாம்
இந்த வயதில் நீ நினைத்தால்
நிலவின் மடியில் வாழலாம்..

ஒ...காதல் ஒரு வனம்
அதில் அலைவது சுகம்
வா சுற்றி சுற்றி எங்கும் நாம் நடந்திடலாம்
ஒ...காதல் ஒருமழை
அதில் தேவை இல்லை குடை
வா சொட்ட சொட்ட அதில் நாம் நனைந்திடலாம்...

ஆ ..நீயின்றி நானில்லை அது நிச்சயம்
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே

திரைப்படம் :: அன்பே அன்பே
பாடியவர்கள்: சாதனா சர்கம், ஹரிஹரன்
இசை: பரத்வாஜ்

Monday, December 19, 2011

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்

ஆரீராரோ ஆரீராரீரோ
ஆரீராரோ ஆரீராரீரோ

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்....
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே........ஏ..ஏ...ஏ...

கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு

ஆடாத தீபம் தான் என் இல்லம்...ம்..ம்..ம்
பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம்...ம்..ம்..ம்
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம்
கனவுகளே கனவுகளே இரவெனும் தீபம் எரிகின்ற நேரம்
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்....ல்...ல்..ல்
தென்றல் வீசும் கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
ராரீரோ ஆரீராரீரோ
கண்ணின் மணியே நீயும் உறங்கு


ஆகாயம் மண் மீது வீழாது...
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது....
இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது
உறவுகளால் ஒரு உலகம்
இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்
ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
ஆரீராரோ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் லால லால லா



படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்
வரிகள்: வைரமுத்து
பாடியவர் : ஜானகி

தாரா அவர் வருவாரா


தாரா அவர் வருவாரா
கண்கள் தவிப்பதைத் தான் அறிவாரா
மாறா அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா

தனியே பேசி மனம் மகிழ்ந்தாடுவாரா
தணியாக்காதலுடன் உறவாடுவாரா
அழைப்பாரா அணைப்பாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
(என் தாரா ..)

இதய வீணைதனில் ஒலி மீட்டுவாரா
இன்பக்காவியமாய் சுவையூட்டுவாரா
புதுமை ஊஞ்சலிலே தாலாட்டுவாரா
புகழ்வாரா மகிழ்வாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
(என் தாரா ..)
திரைப்படம் : அரசிளங்குமரி
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை:ஜி.ராமனாதன்

Sunday, December 18, 2011

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும்.. வருவேன்
ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்


வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது

கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

பாடியவர் : ஜானகி
இசை: எம்.எஸ்.வி
திரைப்படம்: அவளுக்கென்று ஒரு மனம்
வரிகள் : கண்ணதாசன்

Saturday, December 17, 2011

உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது

தந்தனன தானானா
தந்தனன
தானானா
தந்தானா
தந்தானா
தந்தனா னானா

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது
என் மனசதை கேட்டுத் தான் தவிக்குது

அதில் என்னை வச்சுப் பாட மாட்டியா
நெஞ்சத் தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு

(உன் மனசுல )

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சே
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே
போடாத சங்கதிதான் போட ஓரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வாங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து

(உன் மனசுல)

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியை தந்ததையா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணலை
பூவான பாட்டு இந்த பொண்ணத் தொட்டுப் போனதையா
போன வழி பார்த்த கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் ..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் ..
உங்களத் தான் எண்ணி எண்ணி என்னுசுரு வாழும்
சொல்லுமையா நல்லச்சொல்லு சொன்னா போதும்

ஏங் மனசுல பாட்டுத் தான் இருக்குது
உன் மனசதை கேட்டுத் தான் தவிக்குது


நான் உன்னை மட்டும் பாடும் குயிலுதான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலதா
மனசு முழுதும் இசைதான் எனக்கு
இசையோடொனக்கு இடமும் இருக்கு
என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசதை கேட்டுத்தான் தவிக்குது

திரைப்படம்: பாண்டி நாட்டு தங்கம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா, மனோ


Friday, December 16, 2011

பருவமே புதிய பாடல் பாடு

படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே.
இசை: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி.


பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

(பருவமே புதிய பாடல் பாடு...)

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

(பருவமே புதிய பாடல் பாடு...)

எங்கும் நிறைந்த இயற்கையில்

பாடலைக் இங்கே காணலாம்.



எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
அங்கு காதல் கோலமிடும்
மனம் ராகம் பாடிவரும்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
தேனாக...லல லல லல லல...லாலா லாலா
ஆசை...தேனாக ஆசை
அது ஆறாக...வாழ்வில் இன்பம் நூறாக
வா...ம்ம்ம்
வா...ம்ம்ம்
வா...ம்ம்ம்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

தங்கமும் வைரமும் போலே
தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே
தங்கமும் வைரமும் போலே
தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே
சேராதோ...லல லல லல லல...லாலா லாலா
மோகம்...சேராதோ மோகம்
அது தீராதோ...தேகம் கொஞ்சம் வாடாதோ
வா...ம்ம்ம்
வா...ம்ம்ம்
வா...ம்ம்ம்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

திரைப்படம் : இது எப்படி இருக்கு
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, கே.ஜே. யேஸுதாஸ்
இசை: இளையராஜா

Tuesday, December 13, 2011

வசந்த காலக் கோலங்கள்


வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

அலையிலாடும் காகிதம்
ம் ம் ம்
அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

(வசந்த )
திரைப்படம்: தியாகம்
பாடியவர் : ஜானகி
எழுதியவர் : கண்ணதாசன்
இசை: இளையராஜா

Thursday, December 1, 2011

அள்ளி அள்ளி வீசுதம்மா

அள்ளி அள்ளி வீசுதம்மா
அன்பைமட்டும்
அந்த நிலா நிலா
மாளிகை மாடம் மட்டும் வீசாம
ஓலைக்குடிசை என்னும் பாக்கம
அள்ளி அள்ளி வீசுதம்மா
அன்பை மட்டும்
அந்த நிலா நிலா

என் கோயிலில் தீபம் ஏற்றி
நான் வாழ்கிறேன் உன்னாலே உன்னாலே
என் நெஞ்சிலோர் ராகம் உண்டு
நாளும் பாடுவேன் அன்பாலே அன்பாலே
என் நேசமும் என் ஆசையும் உன்னோடு உன்னோடு
பூமாலையும் நீ சூடவா
பூமாலையும் நீ சூடவா
பாராட்டவா சீராட்டவா

(அள்ளி அள்ளி)

பூந்தென்றலாய் உன்னை நானும்
நான் வாழ்த்துவேன் பூப்போலே பூப்போலே
தாய்போலவே உன்னை நானும்
சீராட்டுவேன் தேன்போலே தேன்போலே
என் சொந்தமும் உன் பந்தமும்
என்னாளும் நீங்காது
என் ஜீவனே என்னாளுமே
என் ஜீவனே என்னாளுமே
உன் பேரையே கொண்டாடுமே

திரைப்படம் : அத்தை மக ரத்தினமே
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்


திரைப்படம் : அத்தை மக ரத்தினமே
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்

Monday, November 28, 2011

நான் கண்டேன்

நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்
நேற்று இல்லா ஒன்று
மீண்டெதென்று இங்கு
மின்னலைகள் என்னைத்தாக்கிடுதே

மழை நின்றும் நான் நனைகிறேன்
துளி துளியாய் உடைகின்றேன்
சிறகில்லை நான் பறக்கின்றேன்
என்னை ஏனோ மறக்கின்றேன்
நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்

மௌனமாய் நெஞ்சிலே காயங்கள்
சேர்க்கிறாய்
ஆறுதல் நானாகவா
உன்னை நீ உன்னையே ஏனடி
புதைக்கிறாய்
வான்வெளி நான் காட்டவா
என் காதோரம் ஏதேதோ சொன்னாய்
கண் காணாத தூரம் நின்று
என் மூச்சுக்கு காற்றாய் வந்தாய்
என் ஆதாரம் நீயே என்று

நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்


பயணங்கள் போகப்போக நெடும்பாதை
நீளும் ஜாலம் கண்டேன்
விரல்களை கோர்த்துப்போக நீ பக்கம் வேண்டும்
என்பேனே
வழியினில் நானுமே மழையுதிர்காலமே
உலகத்தின் எல்லை போகவே தோன்றுமே

இரவினில் நான் விழிக்கிறேன்
கனவினில் தான் உறங்கினேன்
நடந்ததை நான் மறக்கிறேன்
இன்று புதிதாய் பிறக்கின்றேன்

நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்


திரைப்படம் : முரண்
பாடியவர்கள்: ரஞ்சித்,?
இசை: சாஜன் மாதவ்
வரிகள்: லலிதா ஆனந்த்

Saturday, November 26, 2011

நிழல் கண்டவன் நாளுமிங்கே

நிழல் கண்டவன் நாளுமிங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்
மொழிக்கேட்டவன் மோகம் கொண்டு
முகத்தைக்காணத் தேடுகின்றான்
நிழல் கண்டவன் நாளுமிங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்


என்றும் தொடர்ந்து போவது தான்
இனிய காதல் விதி ஆகும்

வெல்க இளமை வெல்க
வாழ்க காதல் வாழ்க
நிழல் கண்டவன் நாளுமிங்கே
நிழல் கண்டவன் நாளுமிங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்

இசை: எம் .எஸ். வி
பாடியவர்: எஸ்.பி.பி
திரைப்படம்: நினைத்தாலே இனிக்கும்

Tuesday, November 22, 2011

நகருதே நகருதே

நகருதே நகருதே
இந்த நிமிடம் நகருதே
எந்தன் இதயம் பதறுதே

உன்னைவிட்டுச் செல்ல வலிக்குதே
இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தந்த நினைவுகள் மறக்காதே
நான் இறந்தால்கூட இறக்காதே

இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தரும் பிரிவுகள் தாங்காதே
என் உயிரே உயிரை விலகா....தே


தேவதை உன்னிடம் நான்
வரமா கேப்பேன்
கேளடி
தேவதை உன்னையே
வரமாய்கேப்பேன்
நானடி
தூங்கினால் தூக்கத்தில்
கனவிலும் கேட்கும்
உந்தன் காலடி
எதற்கேன் இந்த இடைவெளி
ஏனடி?


இசை: S. தமன்
பாடியவர்: S.தமன்
வரிகள்: நா.முத்துக்குமார்
திரைப்படம் :வந்தான் வென்றான்

Monday, November 21, 2011

ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து

ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே

காதல் ரேகை ஒன்று இதயத்தைத் திறந்து
செல்லமாக மிரட்டிச் செல்கிறதே

உயிரே இதயம்….

உனக்கே உனக்கே…

உன்னை போலொருப் பெண்ணின் அருகிலே
மௌனம் கொள்வது கஷ்டம் தான்
பேசிகொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம்

சொற்கள் என்பது நெஞ்சம் மொத்தமும்
மௌனம் என்பதில் உள்ளது உள்ளது
மௌன மிஞ்சினால் பேசிவிடுவதே நல்லது

சூரியனை போலே என் முன்பு வந்தாய்
பனி துளி போலே பணிந்து விட்டேனே

உயிரே இதயம்….

உனக்கே உனக்கே…

கனவாய் இருந்தால் – இதிலே இருப்போம்
நிஜமாய் இருந்தால். – இன்னும் கேட்போம்

கனவாய் இருந்தால் – இதிலே இருப்போம்
நிஜமாய் இருந்தால். – இன்னும் கேட்போம்

ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து
ஆயுள் ரேகை நீளச் செய்கிறதே

காதல் ரேகை ஒன்று இதயத்தைத் திறந்து
செல்லமாக மிரட்டிச் செல்கிறதே

உள்ளே போகிற சுவாசம் என்பது
வெளியில் வருவது நியாயம் நியாயம்
வெளி வரும் சுவாசம் வாசம் தருவதே மாயம்

கண்கள் காண்கிற கனவு என்பது
கருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும்
வண்ணமாக அது மாறிவிட்டதே மாயம்

போதி மரம் போலே உந்தன் கண்கள் பார்க்க
உந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேன்
உயிரே இதயம்….

உனக்கே உனக்கே…

ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து
ஆயுள் ரேகை நீள செய்கிறதே
காதல் ரேகை ஒன்று இதயத்தைத் திறந்து
செல்லமாக மிரட்டிச் செல்கிறதே

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : கார்த்திக், கோபிகா பூர்ணிமா

Sunday, November 20, 2011

காதல் வந்தும் சொல்லாமல்

காதல் வந்தும் சொல்லாமல்,
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை
கொல்லாதே சொல்லாமல் செல்லாதே...

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயோ?

இதயத்திலே ஒரு வலி,
இமைகளிலே பல துளி,
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்

வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு

விதியின் கைகளோ வானம் போன்றது
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது

நினைவு இடறி மண்ணில் விழுகிறதே,
நிழலில் கரைந்து அது சாகாதா?
காதல் கதறி இங்கு அழுகிறதே
இரண்டு கண்ணும் அதில் கருகாதா

ஏன்தான் காதல் வளர்த்தேன்
அதை ஏனோ என்னுள் புதைத்தேன்
சுடரில்லாத தீயில் எரிகின்றேன்
சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்
பெண்ணே உன் பாதையில் நகரும் மரமாகுவேன்...ஒ..ஒ
இரவைத் தின்று வாழ்ந்தாய் நீயடி...ஒ ஒ...
இதயம் கொண்டு போனாய் என்னடி

காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயோ?

காதல் வந்தும் சொல்லாமல்,
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை,
கொல்லாதே, சொல்லாமல் செல்லாதே

ஓகாதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயோ?

இதயத்திலே ஒரு வலி,
இமைகளிலே பல துளி,
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு
பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு

விதியின் கைகளோ வானம் போன்றது
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது

திரைப்படம்: சரவணா
பாடியவர்கள் : சைந்தவி, ப்ரசன்னா
இசை: ஸ்ரீகாந்த் தேவா

Friday, November 18, 2011

ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம்

இதுபோல வருமா சந்தனமலர்கள்
வாசனை தரலாம் அன்பைத்தருமா
வானில் நீந்தும் மேகங்கள்
நம்மைப்பாடாதோ
நேரில் வந்து தெய்வங்கள்
பூவைத்தூவாதோ?

இறைவன் எழுதும் கவிதைகள் யாவும்
இயற்கை அழகாய் சிரிக்கிறதே
இயற்கை சிரிக்கும் அழகினைக் கண்டு
இதயம் சிறகை விரிக்கிறதே

சோலைப்பூங்காற்று இசைப்படிக்கும்
சொந்தம் கொண்டாடி மலரழைக்கும்
நதிகளில் அலைமோதி
கரைகளில் விளையாடும்
பறவைகள் அதைப்பார்த்து
புதுவகை பண்பாடும்
இனிமை வசந்தம் இதுதானோ

மரங்கள் விரும்பி குடையென நின்று
நிழலைக் கொடுக்கும் நமக்கெனவே
நிலவும் கதிரும் உதிப்பது கூட
உலகில் நமக்கு ஒளி தரவே
வாழ்வில் எந்நாளும் வளர்பிறையே
பாசம் நம்வாழ்வில் தனிக்கதையே
உலகினில் எல்லாரும்
உறவெனச் சொல்வோமே
அன்பெனும் ராஜாங்கம்
அமைந்திடச் செய்வோமே
மலர்வோம் மலர்வோம் மலராக


திரைப்படம் : புதுவசந்தம்
பாடியவர்: சித்ரா
இசை: எஸ்.ஏ ராஜ்குமார்


Wednesday, November 16, 2011

ஓய்வெடு ஓய்வெடு நிலவே

ஓய்வெடு ஓய்வெடு நிலவே - நீ
காதலில் தேயாதே
சாய்ந்திடு சாய்ந்திடு நிலவே - வா
மார்பிலே இடம் தாரேன்
பனி மார்கழி மாதத்திலே
இள வான்மதி மோகத்திலே
இந்த காதலன் கீதத்திலே
இளைப்பாரிடு நாணத்திலே


தேய்ந்தது தேய்ந்தது நிலவு -தன்
காதலன் முகம் காண

நிலமெனில் நீராய்
மரம் எனில் வேராய்
உயிர்துணை சேர்ந்திட
நானும் வரவா
மலருக்கு மணமாய்
இதழுக்கு நிறமாய்
இணைபிரியாதொரு ராகம் தரவா
மலர்விழி அம்பில் நான்
விழுந்தென்னை இழந்தேன்
தளிர்க்கரம் பற்றி நான்
யார் என்று மறந்தேன்
இடைவெளி இனி இல்லை
வா காதல் மானே
ஈருடல் இணைந்ததும்
ஓர் உயிர் தானே

தேய்ந்தது தேய்ந்தது நிலவு - தன்
காதலன் முகம் காண
சாய்ந்தது சாய்ந்தது நிலவு - உன்
மார்பினில் சுகம் காண

கவி எனில் பொருளாய்
கரும்பெனில் சுவையாய்
கடை வரை நான் உந்தன் கூடவருவேன்
நிஜமெனில் நிழலாய்
நெருப்பெனில் சுடராய்
இருவிழி மூடாமல் காவல் தருவேன்
உனக்கெனத்தானே பால் நிலவாக வளர்ந்தேன்
உனைக்கண்டதாலே நான் தினம் தேய மறந்தேன்
இயற்கையின் தடை மீறி
வாழும் நம் காதல்
இதற்கிணை கிடையாது
வேரொரு காதல்

ஓய்வெடு ஓய்வெடு நிலவே - நீ
காதலில் தேயாதே
சாய்ந்திடு சாய்ந்திடு நிலவே - வா
மார்பிலே இடம் தாரேன்
பனி மார்கழி மாதத்திலே
இள வான்மதி மோகத்திலே
இந்த காதலன் கீதத்திலே
இளைப்பாரிடு நாணத்திலே


தேய்ந்தது தேய்ந்தது நிலவு -தன்
காதலன் முகம் காண
சாய்ந்தது சாய்ந்தது நிலவு - உன்
மார்பினில் சுகம் காண


திரைப்படம்: வேலை
பாடகர்கள்: பவதாரிணி, ஹரிஹரன்
இசை: யுவன்சங்கர் ராஜா
வரிகள் : ஆர்.வி. உதயக்குமார்

Friday, November 11, 2011

நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி

நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பௌர்ணமி
நான் போகும் பாதை காட்டும் பொன் மின்மினி
(நாள்தோறும்)
விளையாடும் கேள்விக்குள்
விடைகள் தேடும் பதிலே வா
அலைபாயும் நெஞ்சுக்குள் அணைபோடும் அழகே வா
ஐ லவ் யூ ..

நெஞ்சில் நிரஞ்சனி கொஞ்சம் இறங்கி நீ
தாலாட்டு ராத்திரி
நீயே நீலாம்பரி

கவிதை சொல்லும் கிளியே கிளியே
கதைகள் தேடிப் போவோமா

காதலைத் தேடும் அலையே அலையே
கரையைத் தொட்டு சேர்வோமா

பகலும் இரவும் தழுவும்
கொஞ்சிப்பேசி குலவும் குலவும்
பொன்மாலை
பொன்மாலை ஓ இவ்வேளை ஓ..

(நாள்தோறும் )

காதல் விமானங்கள் காணாத தூரங்கள்
கந்தர்வ ராகங்கள் காதாரக் கேளுங்கள்
என் நெஞ்ச வானில் இன்று
நீ போடும் மின்னல்கள்
சொல்லாத ஜதிகள் சொல்லும்
என்னெண்ண துள்ளல்கள்

கதிர்கள் மின்னும் கண்ணில்
காதல் பொழுது புலரும் புலரும்
இன்னேரம்
இன்னேரம் ஓ பொன்னேரம்

(நாள்தோறும்)
இசை: இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா,கவிதா கிருஷ்ணமூர்த்தி
திரைப்படம் : தேவதை
வரிகள் : காமகோடியான்

Thursday, November 10, 2011

வெடி - இச்சு இச்சு



இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ரைட்டு
அச்சு அச்சு அச்சு அச்சு கொடு
தச்சு தச்சு தச்சு தச்சு கொடு
பிச்சு பிச்சு பிச்சு பிச்சு கொடு
ரைட்டா

ரைட்டு
மொட்டாகி பூவாகிற
பூவாகி காயாகிற
காயாகி கனியாகிற
கனியாகி தனியாகிட நின்னேனே

ஹே ஹே..

நான் தானே

ஹே ஹே..

ஏ முத்தாடுற பெண்ணுக்கு
முன்னுக்கும் பின்னுக்கும்
கன்னங்கள் புண்ணாகிட
காயங்கள் உண்டாகிட
வந்தேனே

ஹே ஹே..

வந்தேனே

ஹே ஹே..

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ரைட்டு

வாடகை வாடகை என்னடி வாடகை
உன் மன வீட்டுக்குள் உக்கார
என்னையே கேட்டாலும் இந்தான்னு தந்து நான்
ஒட்டிப்பேன் அட்டை போல் உன்கூட

மீனாக மீனாக வானத்து மீனாக
வீட்டைத்தான் விட்டுத்தான் வந்தாட
இந்திரன் சந்திரன் ரெண்டுமே நீதானே
தன்னைத்தான் உன் கையில் தந்தானே

வண்ணப் புதையலா உன்னை எண்ணி
நெஞ்சில் வச்சிருப்பேன் ரொம்ப பத்திரமா
சின்ன சிரிப்புல என்னை வளைச்சுட்ட
சித்தன்ன வாசலில் சித்திரமா

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ரைட்டு

வாசனை வாசனை மல்லிகை வாசனை
கப்புன்னு குப்புன்னு மப்பேத்த
அத்திக்கும் இத்திக்கும் எத்திக்கும் பத்திக்கும்
தொத்திக்கும் தீ ஒண்ணு சூடேத்த

பூசனை பூசனை மன்மத பூசனை
கை பாதி மெய் பாதி செய்யாதே
மை வைத்த கண்ணுக்குள் பொய் வைத்த பெண்ணுக்குள்
பெய்யாத தேன்மழை பெய்யாதே

கொக்கு தலையில வெண்ணை வச்சு
அதை பக்குன்னு தின்னுக்கப் பார்க்குறியே
அந்தி கருக்கலில் அத்த இத்த சொல்லி
முந்தி விரிச்சிட கேக்குறியே

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ரைட்டு
இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ரைட்டு
முத்தாடுற பெண்ணுக்கு
முன்னுக்கும் பின்னுக்கும்
கன்னங்கள் புண்ணாகிட
காயங்கள் உண்டாகிட
வந்தேனே

ஹே ஹே..

வந்தேனே

ஹே ஹே..

மொட்டாகி பூவாகிற
பூவாகி காயாகிற
காயாகி கனியாகிற
கனியாகி தனியாகிட நின்னேனே

ஹே ஹே..

நான் தானே

ஹே ஹே..

இச்சு இச்சு இச்சு இச்சு கொடு
வெச்சு வெச்சு வெச்சு வெச்சு கொடு
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ரைட்டு

படம்: வெடி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: விஜய் அந்தோணி, சங்கீதா ராஜேஸ்வரன்
வரிகள்: வாலி

சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்




சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
புள்ளி வைத்தாய்
யாரைக்கேட்டு என்வாசலிலே
கோலம்போட்டாய்
வீட்டுக்குள் விடச்சொல்லிக்
கேட்டுப்பார்த்தாய்
மறுத்ததும் இடி என்று திட்டித்தீர்த்தாய்
ஹூலாலா ஹூலாலா ஹூலா ஹூலா

வானத்தின் தீபாவளிகள் பார்த்தேன் பார்த்தேனே
ஈரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே
கேட்டேனே
(சொட்டு சொட்டு சொட்டாய்)

மரங்களின் கதகளி
மரகத வயல்வெளி
பார்த்தேனின்று
பார்த்தேனின்று

அலைகளை தாயமாய்
உருட்டிடும்
கடலிடம்
கண்டேன் கண்டேன் கவிதை ஒன்று
பூவின் மீது
தாழ்ப்பாள் போட்டு
தூங்கும் தேனை திருடிட வா
வாயை வாயை மூடித்திறந்தே பேசும்
மீனே பதில் தரவா

தையாரே தையாரே
தைய்யா தையயா
தையாரே
மயில்தோகை மயில்தோகை
பட்டுச்சேலை முந்தானை
முந்தானை
(சொட்டு சொட்டு சொட்டாய்)

வானமே வாயிலே
பருகிடும் ஆசையிலே
தூக்கம் இன்றி
தூக்க்ம் இன்றி
வானவில் பாலமா
தரை வரை நீளுமா
ஏக்கம் கொண்டேன்
ஏக்கம் கொண்டேன்

விண்மீன் கிண்ணம்
பொங்கும் வண்ணம்

வானில் வழியும் வெண்ணிலவே
காலை நேரம் காற்றில் ஈரம்
சோம்பல் முறிக்கும் சூரியனே
ஓ தையாரே தையாரே
தைய்யா தைய்யா
தையாரே

தீராத தீராத இன்பமெல்லாம் கண்டேனே
இயற்கையிலே

(சொட்டுசொட்டாய்)

திரைப்படம் : வர்ணஜாலம்
இசை : வித்யாசாகர்
வரிகள் : தாமரை
பாடியவர் : மாதங்கி

Wednesday, November 9, 2011

உன்னைத் தேடித்தேடி காற்றில் கலந்து

உன்னைத் தேடித்தேடி காற்றில் கலந்து
என் இசையின் பயணம் தொடங்கும்
உன்னைக் காணும் நேரம்
கண்ணீர் துளிகள்
என் தோளில் விழுந்து இறங்கும்
இன்று என்னை மீட்டும்
உனது பாடல் உயிரை சூடி வருமா
உன்னைத்தேடித்தேடி
உன்னைத்தேடித்தேடி


கண்ணும் இமையும் இருபாகமோ(2)
விடியும் போது அது தூங்குமா
உனது வானில் வரும் வெண்ணிலா
எனது இரவுகளைச் சொல்லுமா
நீ தரும் இசையில் நனைகிறேன்
நனைந்த சிறகுடன் சிலிர்க்கிறேன்
ஒரிதழ் மலரைப்போலவே
வலிக்கும் தனிமையில் துடிக்கிறேன்
உனது பாடல் எனது தேடல்
இரண்டும் சேரும் நாளை எண்ணி

(உன்னைத்தேடித்தேடி)

உனது நினைவில் இங்கு வாழ்கிறேன்
உனது வார்த்தைகளைப் பாடினேன்
நடந்து போகும் வழி யாவிலும்
உனது சுவடுகளைத் தேடினேன்
தீபத்தை விழியில் ஏற்றினேன்
மனதில் மலர்களைத் தூவினேன்
நீ வரும் நினைவில் மாலையில்
எனக்குள் உன்னுடன் பேசினேன்
கனவுப்பாலம் போட்டு நடந்து
கைகள் கூடுகின்ற காலம் பார்த்து

திரைப்படம் : கொஞ்சிப்பேசலாம்
பாடியவர் : சாதனா சர்கம்
இசை : இளையராஜா




வெடி - இப்படி மழை அடித்தால்



இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன்

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்

இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இப்படி இப்படியே வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்

இப்படி இப்படியே முகம் சிவந்தால்
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்

இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மணம் விடுவேன்

இப்படி இப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

இப்படி இப்படியே பூட்டி கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்

இப்படி இப்படி நீ அடம் பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்

இப்படி இப்படியே கிறங்கடித்தால்
எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்

இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்

இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்

படம்: வெடி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: கார்த்திக், சைந்தவி
வரிகள்: நா. முத்துக்குமார்

என் வெண்ணிலவே எரிக்காதே



என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...
என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே



பனியில் இலையற்ற தனிமரம் நான்
பாலையில் துடித்திடும் சிறுப்புழு நான்
காதல் தேவதைப் போல் வந்து
களப்பலிக்கேட்பதேன் மோகினியே
நீ ஏன் எரித்தாய் மீனாட்சி
உன் நிழலில் வாழும் மதுரையடி!
மழையாய் தர வா நீ
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...



கள்ளிப் பாலை ஊற்றிவிட்டு
வெள்ளி நிலவாய்ப் போனவளே
என்னில் வளர்த்த பொற்சிறகை
ஒடிந்திட நடந்திடும் கொடும் புயலே
அழகரைத் தொட்டதால் வைகை நதி
அலை கடல் சேரா மதுரையடி
என் விடிவா முடிவா நீ!
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

என் வெண்ணிலவே எரிக்காதே
என் கனவுகளை சிதைக்காதே
உன்னில் படர்ந்த என்னுயிரை
மண்ணில் ஏதோ... வீசிவிட்டாய்...
மண்ணில் ஏனோ... வீசிவிட்டாய்...

திரைப்படம் : ஆடுகளம்
பாடியவர் : கே கே
இசை: ஜிவி ப்ரகாஷ்
வரிகள் : V. I. S. Jayapalan

Tuesday, November 8, 2011

மயக்கம் என்ன - என்னென்ன செய்தோம்



என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே
எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே
காணாத துயரம் கண்ணிலே
ஓயாத சலனம் நெஞ்சிலே
இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
அன்பான புன்னைகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்

வாழ்கையின் பொருள்தான் என்ன
வாழ்ந்துதான் பார்த்தால் என்ன
கதை சொல்கிறாய் பயம் கொள்கிறாய்
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
காலை சூரியனின் ஆதிக்கமா
பாடும் பறவைகளும் போதிக்குமா
உனது அரசாங்கம் பெரும் காடு
உலகம் அதிலே ஒரு சிறு கூடு
உன்னை அணைத்து கொண்டு
உள்ளம் மருகி நின்றால்
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்
இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா

உள்ளிருக்கும் உன்னை தேடி
ஓயாமல் அலைவோர் கோடி
கருவறையா நீ கடல் அலையா
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
மலைகள் ஏறிவரும் ஒரு கூட்டம்
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம்
என்னில் கடவுள் யார் தேடுகிறோம்
பொய்யாய் எவரின் பின் ஓடுகிறோம்
கண்ணை பார்க்க வைத்த கல்லை பேச வைத்த
பெருந்தாயின் கருணை மறக்கிறோம்
இறைவா
சில நேரம் எண்ணியது உண்டு
உன்னை தேடி வந்ததும் உண்டு
சன்னதியில் சலனம் வெல்லுமா
இறைவா
அன்பான புன்னகை செய்வாய்
அழகான பார்வையில் கொல்வாய்
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய்
கல்லாக இருப்பவன் நீயா
கண்ணீரை துடைப்பவன் பொய்யா
உள் நெஞ்சிலே உனை வாங்கினால்
கரை சேர்க்கிறாய்

படம்: மயக்கம் என்ன
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
வரிகள்: செல்வராகவன்

பூந்தென்றல் காற்றே வா வா

பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

ஏங்காமல் ஏங்கும் இளமைக்காலம்
எங்கெங்கும் தோன்றும் இனிமைக்கோலம்
என் நெஞ்சின் நினைவில் புதிதோர் ராகம்
என்றென்றும் தொடரும் மனதில் தாகம்
பூவாரமே எந்தன் பொன்னாரமே
நான் பாட நீ வேண்டும் அன்பே...ஏ ஏ

பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

காணாத நெஞ்சம் கனவில் வாழும்
காவேரி போல நினைவில் ஆடும்
கண்மூடும் நேரம் கவிதை பாடும்
கைசேரும் போதும் இதயம் கூடும்
ஏனென்பதோ என்னதான் என்பதோ
நீ சொல்ல வாராததேனோ...ஓ ஓ

பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
ஆனந்த தாகம் தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா


இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுசீலா , ஜெயச்சந்திரன்
திரைப்படம் : மஞ்சள் நிலா

Monday, November 7, 2011

போறானே போறானே காத்தோட தூத்தலப் போல

திரைப்படம்: வாகை சூட வா
இசை: ஜிப்ரான்.எம்
பாடலசிரியர்: கார்திக் நேதா
பாடியவர்கள்: ரஞ்சித், நேஹா பஸின்
====

போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே

அழகாய் நீ நெரஞ்ச
அடடா பொந்துக்குள் புகையைப் போல

போறாளே போறாளே காத்தோட தூத்தலப் போல
போறாளே போறாளே போவாம தான் போறாளே

போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே போவாமத் தான் போறாளே
====
பருவம்…தொடங்கி… ஆசவைச்சேன்….
இல்லாத…சாமிக்கும் பூசவைச்சேன்…

மழையில், நனஞ்ச காத்தப் போல,
மனச நீயும் நனச்சுபுட்ட

ஈரகுலைய கொஞ்சம் இரவல்தாய்யா
உன்ன மனச கொஞ்சம் புனையவா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா

அட நல்லாங்குருவி ஒன்னு மனச மனச
சிறு கன்னாங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன கொரத்தி பொன்னு கண்ணு முழியத்தான்
ஈச்சங்காய ஆஞ்சிருச்சே …
====
போறானே போறானே காத்தோட தூத்தலப் போல
போறானே போறானே போவாமத் தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத் தான் போறானே
====
கெனத்து நெலவா நானிருந்தேன்,
கல்ல எரிஞ்சு கொழப்பிப்புட்ட

ஒன்ன பார்த்து பேசயில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்

மூக்கணாங் கவுரப்போல உன்னெனப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு

அடகாக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்கின்னு பூத்திரிச்சே என் பொளப்பு

அட மஞ்சக் கெழங்கே உன்ன நெனச்சி நெனச்சி தினம்
மனசுகுள்ள வச்சி பூட்டிகிட்டேன்
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து நான்
காயத்துக்கு பூசிக்கிட்டேன்
===
போறாளே.. போறாளே.. போறாளே..
போவாமதான் போறாளே.

அழகாய் நீ நெரஞ்ச
அடடா பொந்துக்குள் புவியப் பொல ..

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாம தான் போறானே

போறானே ..போறானே ..போறானே ..

மயக்கம் என்ன - காதல் என் காதல்



காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல

ஏ மச்சி உட்ரா

ஏய்என்னை பாட உடுடா
நா பாடியே தீருவேன்

சரி பாடித் தொல


காதல் எங் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாழான நெஞ்சு இப்ப வெந்னீருல

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல
எதுவும் புரில உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல
சூட்டுல எங்குறேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள

நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ வொர்த்தே இல்ல

தேனூறுன நெஞ்சுக்குள்ள
கல்லூறுதே என்ன சொல்ல

ஒ படகிருக்கு வலை இருக்கு
கடலுக்குள்ள மீனா இல்ல

வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல

மான் விழி தேன் மொழி
என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி

ப்ரெண்ட்சு கூடத்தான் இருக்கணும் மாமா
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட
உன்னத் தவிர எனக்கொண்ணும் இல்ல

ஒ... கனவிருக்கு கலரே இல்ல
படம் பாக்கறேன் கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல
உறவிருக்கு பெயரே இல்ல

வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி...

போதும் மச்சான்

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல
எதுவும் புரில உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

குட் நைட்...குட் நைட்...

ஆங்... ஓகே

ஏய்...

குட் நைட்... தேங் யு சோ மச்... மச்சி

படம்: மயக்கம் என்ன
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: தனுஷ், செல்வராகவன்
வரிகள்: தனுஷ்

Sunday, November 6, 2011

மயக்கம் என்ன - வோட வோட வோட



வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல

ஃப்ரியா சுத்தும் போது ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

உலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்சு கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது

கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கர் ஆயிட்டேன்
குண்டு சட்டியில
ரெண்டு குதிர வண்டி ஓட்டுறேன்

ஒரு பீச்சுல தனியா அலைஞ்சேன் அலைஞ்சேன்
நடு ரோட்டுல அழுதேன் புரண்டேன் கிழிஞ்சேன்
பாரம் தாங்கல தாங்கல கழுதை நான் இல்லையே
ஜாணும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே
கிராக்கா மாறிட்டேன் ஜோக்கர் ஆயிட்டேன்
பீயூசு போன பின் பல்புக்கான சுவிட்ச்ச தேடுறேன்

வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல

:ஃப்ரியா சுத்தும் போது ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

நடு ராத்திரி எழுந்தேன் படுத்தேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்

மீனா நீந்தறேன் நீந்தறேன்
கடலும் சேரலையே
படகா போகுறேன் போகுறேன்
கரையும் ஏறலையே

கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கர் ஆயிட்டேன்
கேள்வி கேட்டு கேட்டு
கேள்விகுறி போல நிக்குறேன்

வோட வோட வோட தூரம் கொறயல
தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல
ஃப்ரியா சுத்தும் போது
ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப
ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

உலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்சு கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது

படம்: மயக்கம் என்ன
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்: தனுஷ்
வரிகள்: செல்வராகவன்,தனுஷ்

Saturday, November 5, 2011

மயக்கம் என்ன - நான் சொன்னதும் மழை வந்துச்சா



நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்துச்சா
உன்ன தூக்கி போக தான் வருவேனுன்னு
கிளி வந்து பதில் சொல்லுச்சா
கரு நாக்கு கார புள்ள
கருப்பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நெனப்பு தொல்ல
நீ களவாணி
ஓஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

ஆடு ... ஆடு ...

ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா

அடி போடி போடி போடி முட்ட கன்னி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ணை மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவுல தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாரேன்
காதுக்கு ஜிமிக்கி தாரேன்
கழுத்துக்கு தாலி தாரேன்
நீ வர்றியாடி
கருவாட்டு கொழம்பா ஆ ஆ... நீயும்... ருசி ஏத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது.

படம்: மயக்கம் என்ன
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,சைந்தவி
வரிகள்: செல்வராகவன்

Friday, November 4, 2011

ஏழாம் அறிவு - ஏலேலம்மா



ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

அடி நியூட்டன் ஆப்பிள் விழ
புவி ஈர்ப்பை கண்டானடி
இன்று நானும் உன்னில் விழ
விழி ஈர்ப்பை கண்டேனடி
ஓசை கேட்காமலே இசை அமைத்தான் பீதோவனே
நீ என்னை கேட்காமலே எனை காதல் செய் நண்பனே

குத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே
குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே
மேலும் மேலும் அழகாய் மாறி போனனேன் நானே

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

சிறு நேரம் இல்லாமலே
துளி நீரும் இல்லாமலே
இள வெயிலும் படாமலே
பூ பூக்கும் இன்பம் தந்தாய்
தோளில் விழாமலே
கை சிறிதும் படாமலே
உன் நிழலும் தொடாமலே
நீ என்னை கொள்ளை இட்டாய்
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா வா

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
வந்தாளம்மா வெள்ளம் அல்லுமா

என் ஜன்னல் கதவிலே
இவள் பார்வை பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
உன் காதல் என்னை இழுக்க
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க

படம்: ஏழாம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், கார்த்திக், ஷாலினி, சுருதி ஹாசன்
வரிகள்: நா. முத்துக்குமார்

Thursday, November 3, 2011

அன்பே ஒரு ஆசை கீதம் ...

அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ

இங்கே தினம் ஏங்கும் நெஞ்சம்
மீண்டும் பார்ப்பாயோ
குயிலோசை கேட்குதோ ..ஓ.. ஓ.. ஓ. கூக்கு
நீ எங்கே நான் இங்கே
வா.. நீ.. வா...
(அன்பே)


கண்ணில் விழுந்து
என் நெஞ்சில் கலந்தாய் (கண்ணில்)
கண்ணே என் காதலி
நெஞ்சில் இருந்தே
நித்தம் இனிக்கும்
நீயே என் நாயகி
நீயின்றி நானில்லை
வா . .. நீ .வா..

(அன்பே)

ஜென்மம் முழுதும்
உன் நெஞ்சில் உலவும்
ஜென்மம் முழுதும்
உன் நெஞ்சில் உலவும்
என் ஜீவன் உன்னிடம்

உன்னைத்தொடர்ந்தேன்
என் எண்ணம் இருக்கும்
நீயென்றும் என்னிடம்
நீயின்றி நான் இல்லை
வா.. நீ.. வா...

அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ
இங்கே தினம் ஏங்கும் நெஞ்சம்
மீண்டும் பார்ப்பாயோ

குயிலோசை கேட்குதோ ..ஓ.. ஓ.. ஓ. கூக்கு
நீ எங்கே நான் இங்கே
வா.. நீ.. வா...

படத்தின் பெயர்: பூவுக்குள் பூகம்பம்
இசை: சங்கீத ராஜன்
பாடியவர் : எஸ்.பி .பி

ஏழாம் அறிவு - யம்மா யம்மா காதல் பொன்னம்மா



யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே

பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்

அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை
ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாரு

என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே

வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா

படம் : ஏழாம் அறிவு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: கபிலன்

Wednesday, November 2, 2011

ஏழாம் அறிவு - இன்னும் என்ன தோழா



இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

இன்னும் என்ன தோழா, , எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!
தொடு வானம் இனி தொடும் தூரம்!
பலர் கைகளை சேர்க்கலாம்!

விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?

ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்

பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?

இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு!
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

படம்: ஏழாம் அறிவு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பல்ராம், நரேஷ் ஐயர், சுசித் சுரேசன்
வரிகள்: பா. விஜய்

ஒருநாள் உன்னோடு ஒருநாள்



ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்....


மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே
உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்


உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு
கோபம்.. வேகம்.. மாறாதோ
மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ
புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக

காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்

ஒரு நாள்..

உன்னோடு ஒரு நாள்

உறவினிலாட..

புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

இசை:இளையராஜா
பாடியவர்கள்: எஸ். ஜானகி, எஸ்.பி. பி
வரிகள் : பஞ்சு அருணாசலம்
திரைப்படம் :உறவாடும் நெஞ்சம்

Tuesday, November 1, 2011

மயிலே மயிலே உன் தோகை இங்கே


ஜென்ஸி பற்றிய ஒரு கட்டுரை



மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
கனி வாய் மலரே பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா...நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழலில் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே

திரைப்படம் : கடவுள் அமைத்த மேடை
பாடியவர் : பாலசுப்ரமணியம் , ஜென்ஸி
இசை : இளையராஜா

Saturday, October 29, 2011

கண்கள் ஒன்றாகக் கலந்ததால்

கண்கள் ஒன்றாகக் கலந்ததால்
காதல் திருக்கோலம் கொண்டதோ
கைகள் ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட மலர்ந்ததோ
(கண்கள் ஒன்றாக)

வசந்தங்களே வாழ்த்துங்களேன்
வளர்பிறையாய் வளருங்களேன்

(கண்கள் ஒன்றாக )

மழை வரும்போது குளிர் வரும் கூட
மலர் மணம் வீசுமே
இவள் மனம் உந்தன் வருகையைக்கண்டு
எழில் முகம் பூக்குமே
அடித்திடும் கைகள் அணைத்திட
நானும் அடைக்கலம் ஆகினேன்
முல்லையே எல்லையில்லையே
உந்தன் அன்பினில் மூழ்கினேன்

(கண்கள் ஒன்றாக )

ஒருகணம் பார்க்க பலகணம்
நெஞ்சில் திரைப்படம் பார்க்கிறேன்
உயிருடன் நித்தம் உரசியே
என்றும் உன் வசம் கலக்கிறேன்
பிரிவதும் பின்பு இணைவதும்
கடல் அலைகளும் கரையுமா
பெண்மைதான் தூங்கவில்லையே
உந்தன் பித்துதான் அதிகமா

(கண்கள் ஒன்றாக )

திரைப்படம் : சேரன் பாண்டியன்
பாடியவர்கள் : மனோ, சித்ரா
இசை: சௌந்தர்யன்

Thursday, October 27, 2011

நீ கோரினால் வானம் மாறாதா

படம்:180
பாடல்: நீ கோரினால் வானம் மாறாதா
பாடியவர்: கார்த்தி,ஸ்வேதா
இசை: ஷரத்
எழுதியவர் : மதன் கார்க்கி

ந நன நன நன
நன நன

ந நன நன நன
நன நன நா

நீ கோரினால் வானம்
மாறாதா
தினம் தீராமலே மேகம்
தூராதா

தீயே இன்றியே
நீ என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பின்னே ஓடாதே

தீயே ... இன்றியே...
நீ என்னை வாட்டினாய்...
உன் ஜன்னலை... அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே.....

ஓடும் ஓடும்
அசையாதோடும்
அழகியே..

ஓடும் ஓடும்
அசையாதோடும் ஓடும் ஓடும்
அழகியே....

ந நன நன நன
நன நன

ந நன நன நன
நன நன நா

நீ கோரினால் வானம்
மாறாதா
தினம் தீராமலே மேகம்
தூராதா

கண்டும் தீண்டிடா
நான் போதை ஜாதியா
என் மீதி பாதி பிம்பப் பூவே
பட்டுப்போகாதே

கண்டும் தீண்டிடா ஆ... ஆ......
நான் போதை ஜாதியா.ஆ... ஆ.....
என் மீதிப் பாதி...
பிம்பப் பூவே
பட்டுப்போகாதே.....

போதை ஊறும்
இதழின் ஓரம்
பருகவா...

உன் போதை ஊறும்
இதழின் ஓரம் ஓரம் ஓரம்
பருகவா....

ந நன நன நன
நன நன

ந நன நன நன
நன நன நா

நீ கோரினால் வானம்
மாறாதா
தினம் தீராமலே மேகம்
தூராதா

ந நன நன நன
நன நன

ந நன நன நன
நன நன நா

நீ கோரினால் வானம்
மாறாதா
தினம் தீராமலே மேகம்
தூராதா

ஏஜே ஏஜே மனம் மறைப்பதேன்?

படம் : 180
இசை : ஷரத்
பாடியவர்கள் : ரம்யா எஸ்.கபாடியா,விது ப்ரதாப்




ஏஜேஏஜே
மனம் மறைப்பதேன்? ஏஜே

பார்வை கூறும் வார்த்தை நூறு
நாவில் ஊறும் வார்த்தை வேறு
நாணம் தீரும் - நீ இவளைப் பாரு
மனதைக் கூறு
மனம் மறைப்பதேன்?…

நாடியைத் தேடி உனது
கரம் தீண்டினேன்
நாழிகை ஓடக் கூடா
வரம் வேண்டினேன்


அருகிலே வந்தாடும்
இருதயம் நின்றோடும்
திண்டாடும்

ஏஜே ஏஜே
மனம் மறைப்பதேன் ஏஜே

மேல்விழும் தூறல் எனது
ஆசை சொன்னதா?
கால்வரை ஓடி எனது
காதல் சொன்னதா?

மனதினை மெல்வேனோ?
சில யுகம் கொள்வேனோ?
சொல்வேனோ?

ஏஜே ஏஜே
மனம் மறைப்பதேன்?
ஏஜே

பார்வை கூறும் வார்த்தை நூறு
நாவில் ஊறும் வார்த்தை வேறு
நாணம் தீரும் - நீ இவளைப் பாரு
மனதைக் கூறு
மனம் மறைப்பதேன்?

Sunday, October 23, 2011

என்ன தந்திடுவேன்



சொல்ல வந்ததை சொல்ல வந்ததை சொல்லவில்லை
சொல்லும் வரை சொல்லும் வரை காதல் தொல்லை

என்ன தந்திடுவேன்... நான் என்னைத் தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன்... நான் உயிரைத் தந்திடுவேன்

நீ வானவில் தந்தால் நான் வானம் தந்திடுவேன்
நீ ஓரிடம் தந்தால் நான் உலகை தந்திடுவேன்

உன் ஆயுள் காலம் தீரும் போது என்னாயுள் தந்திடுவேன்

(என்ன தந்திடுவேன்

விரல்கள் நீ தந்தால் நான் ஸ்பரிசம் தந்திடுவேன்
விழிகள் நீ தந்தால் நான் கனவு தந்திடுவேன்
நொடிகள் நீ தந்தால் நான் யுகங்கள் தந்திடுவேன்
விதைகள் நீ தந்தால் நான் விருட்சம் தந்திடுவேன்
நீ கோபப் பார்வை பார்க்கும் போது கொஞ்சல் தந்திடுவேன்
என் தோளில் வந்து நீயும் சாய தொட்டில் தந்திடுவேன்
நீ பார்த்திடும் போது பாராமல் நான் பார்வை தந்திடுவேன்
நீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்
(என்ன தந்திடுவேன்)

இறகு நீ தந்தால் நான் தோகை தந்திடுவேன்
கைகள் நீ தந்தால் உயிர் ரேகை தந்திடுவேன்
பூமி நீ தந்தால் நான் பூக்கள் தந்திடுவேன்
கிளைகள் நீ தந்தால் நான் கிளிகள் தந்திடுவேன்

உன் நெற்றி வருடி கேசம் ஒதுக்க காற்று தந்திடுவேன்
நீ இருட்டில் நடக்க எந்தன் விழியில் வெளிச்சம் தந்திடுவேன்
நீ ஜன்னலின் ஓரம் நின்றிடும் போது சாரல் தந்திடுவேன்
நீ தூங்கிடும் நேரம் லேசாய் கேட்கும் பாடல் தந்திடுவேன்

படம்:- சதுரங்கம்
பாடியவர்கள் : கார்த்திக், ஸ்ரீலேகா
இசை: வித்யாசாகர்

Saturday, October 22, 2011

பிறை தேடும் இரவிலே உயிரே



பிறை தேடும் இரவிலே உயிரே
எtதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா (பிறை)


இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

(பிறை )

அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணிவேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

(பிறை )

விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதைக் காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொல்லும் இந்த பூமியில்,
நீ வரம் தரும் இதம்.

வரிகள் : தனுஷ்
இசை : ஜிவி.ப்ரகாஷ்
பாடியவர்கள் : ஜிவி .ப்ரகாஷ் , சைந்தவி
திரைப்படம் : மயக்கம் என்ன?

Friday, October 21, 2011

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
என் உயிரில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓ...ஓ
ஏங்கிடுதே மனமே
(எங்கிருந்தோ )

வசந்தமும் இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று
இன்பத்தின் கீதம் தந்தாலும்
நீ இன்றி ஏது வசந்தம் இங்கே
நீ இன்றி ஏது ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ ...

(எங்கிருந்தோ )

காதலில் உருகும் பாடல் ஒன்று
கேட்கிறதா உன் காதினிலே
காதலில் உயிரை தேடி வந்து
கலந்திட வா ஏன் ஜீவனிலே
உயிரினைத் தேடும் உயிர் இங்கே
ஜீவனைத் தேடும் ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ ...


இசை : இளையராஜா
திரைப்படம் : என் ஜீவன் பாடுது
பாடியவர் : லதா மங்கேஷ்கர்

Thursday, October 20, 2011

ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்

ஒரு மலையோரம்
அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம்
ஒரு வீடு
உன் கை கோர்த்து
என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
செல்லம் கொஞ்சி நீப்பேச
உள்ளம் உருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதும்மடா..
இந்த ஜென்மம் தீரும்மடா..
ஒ..

(ஒரு மலையோரம் )

பெண்ணே முதல் முறை
உன் அருகிலே
வாழ்கிறேன்
போதும் போதும் விடு
உன் நினைவிலே தோய்கிறேன்..
என்னானது எந்தன் நெஞ்சம்
ஏனிந்த மாற்றமோ
பெண்ணானதும் நாணம் வந்து
தன் வேலையை காட்டுமோ..
உன் எதிரிலே... ஏ ஏ ஏ
எதுவுமே பேசிட வேண்டாம்
மௌனங்கள் ஆயிரம் பேசுமே
என் உள்ளிருந்து நீ பேச
இன்னும் என்ன நான் பேச
இந்த மயக்கம் போதும்மடி..
இன்னும் நெருக்கம் வேண்டும்மடி
ஓஓஹோ
ஒரு மலையோரம்
அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம்
ஒரு வீடு

உன்னைக் காணும் வரை
நான் கனவிலே
வாழ்ந்தவன்
உன்னைக் கண்டேன் பெண்ணே
உன் நினைவிலே
வாழ்கிறேன்..
என் தனிமையின் ஓரம் வந்து
இனிமைகள் ஊட்டினாய்
என் தாயிடம் பேசும் போதும்
வெறுமையைக் கூட்டினாய்
உன் காதலிலே… ஏ ஏ ஏ
மனமது புகையினைப் போலே
மறைத்தது யாருமே இல்லையே
என்னுள்ளே சேர்ந்திருக்க
எங்கே எனை நான் மறைக்க
இந்த வார்த்தை போதும்மடி..
எந்தன் வாழ்க்கை மாறும்மடி..
பெண்ணே..

திரைப்படம்: அவன் இவன்

பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ்,பேபி பிரியங்கா, பேபி ஸ்ரீ நிஷா ,பேபி நித்யஸ்ரீ
வரிகள்:நா.முத்துக்குமார்
இசை : யுவன் சங்கர் ராஜா

Monday, October 17, 2011

நிழல் என்றும் தூரமானதில்லை

நிழல் என்றும் தூரமானதில்லை
நிஜமென்றும் பாரமானதில்லை
மண்மீது நிலவு பூக்கும்
மாயையைப் போல
கண்முன்னே தோன்றும் காட்சி
நீ பாரு
கைக்கூடி வந்த காதல்
என்னாகும் கூறு
இதைக்கட்டிக்காக்கும் ஆளு
யார் பாரு


மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
கண்களைத் திறந்தே கனவுக்காணும் தான்
மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
வானவில்லில் அம்புகள் தொடுக்கும் தான்

என்றும் எங்கும் எப்பொழுதும்
உன் பேச்சே - அட
என்னுடலில் இருக்குது என்னாச்சே
நீயும் நானும் ஒன்றே என்று ஆயாச்சு -அட
வெய்யில் கூட வெண்பனிய போலாச்சு
அப்படியா தோன்றுது உனக்கு - அட
அப்படியே காட்டடி எனக்கு
இவ்வுலகம் முழுவதும் நமக்கு -அட
வேறுலகம் தேவைதானா எதுக்கு?

மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
நான்கு கண்கள் உள்ள ஜீவன் தான்
நோயே தான் நோயே தான்
காதல் என்றும் நோயே தான்
உடலில் புகுந்து உயிரை வாட்டும் தான்

காதல் கொண்டால் விந்தைகளும் நிகழும்
அட அவ்வப்போது அச்சங்களும் திரளும்
காதல் கொண்டால் இப்படித்தான் இருக்கும்
அதில் அச்சம் மடம் நாணம் கூட இனிக்கும்
இதயங்கள் செய்கின்ற கலகம்
அட எப்பொழுதும் அமைதியாய் விலகும்
இதைத்தான் விரும்புது உலகம்
தினம் இப்படித்தான் காதல் வந்து பழகும்

மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
உள்ளங்கையில் உலகைக் காட்டும் தான்
மாயை தான் மாயை தான்
காதல் என்றுமே மாயை தான்
உருவம் இன்றி உயிரும் வாழும் தான்

(நிழல்)

http://tamildot.com/K/Kumaran/Tamilmp3world.Com%20-%20Nizhal%20Endrum.mp3 இங்கே முழுதுமாகப் பாடலைக்கேட்கலாம்..

பாடலைப்பாடியவர்கள்: ராமு?, வினயா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம் : குமரன்

Sunday, October 16, 2011

கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்?

கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஏன் வடித்தாய்?
சிலையாய் வளர்ந்தேன்
உயிரை ஏன் கொடுத்தாய்?

உன் நெஞ்சின் உணர்வுகள்
இங்கு என்னுள்ளில் புகுந்ததே
சொல்லில் வருமோ வருமோ
சொல்லை எடுத்துத் தருவாய்
கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஏன் வடித்தாய்?
சிலையாய் வளர்ந்தேன்
உயிரை ஏன் கொடுத்தாய்?


உனைப் பார்த்த கண்கள்
விலகாது எங்கும்
உன்னிலே பதியும்

சுழன்றாடும் கனவில்
சொல்லாது சென்று
சுகத்திலே அலையும்

யார்ரார்க்கு மண்ணில்
நிலைக்காது அழகு
காலத்தின் ஒழுங்கு

நீ எனக்குத் தந்த
நிலையான அழகில்
கூடுமோ வயது?

உன்னுடல் தனில்
என் உயிர்தனை
கலந்து என்றும் வாழ்வேன்

காலங்கள் நமை பிரிக்குமோ
சிலையோடு சேர்ந்து
கால நேரம் நின்றது
கல்லாய்
கல்லாய் இருந்தாய்
சிலையாய் உனை வடித்தேன்

என் கண்கள் கூறும்
நீ தந்த பாவம்
உனக்குத்தான் புரியும்

உன் நெஞ்சின்
உண்மை
சொல்லாமலிங்கு
எனக்குத்தான் தெரியும்

பரிமாறிக்கொள்ள
பரிபாஷை இங்கு
நமக்குத்தான் எதற்கு

உள் அன்புகொண்டு
உறவாடும் நம்மை
புரியுமோ பிறர்க்கு


ஆசையும் உளியின் ஓசையும்
எனது உயிரின் நாதமாகும்
காதலாய்
இதைச் சொல்லவா?
என்றும் அழியும் உலகில்
அழிந்துதிடாத உறவிது
கல்லாய் கல்லாய்

கல்லாய் இருந்தேன்
சிலையாய் ஏன் வடித்தாய்
சிலையாய் வளர்ந்தேன்
உயிரை ஏன் கொடுத்தாய்?

பாடலைப்பாடியவர்கள்: தான்யா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை : இளையராஜா
திரைப்படம் : உளியின் ஓசை

Saturday, October 15, 2011

மாப்பிள்ளை டோய் ! மாப்பிள்ளை டோய்!

இன்னிக்கு கர்வாச்சவுத் ஸ்பெஷல்.. :)


மாப்பிள்ளை டோய்! மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு, மாப்பிள்ளை டோய்
மை லேடி டோய் மை லேடி டோய்
மனம் போலே வந்து வாச்ச, பெண் ஜோடி டோய்

காப்பியிலே பல் தேய்க்கிற, மாப்பிள்ளை டோய்
கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்
காப்பியிலே பல் தேய்க்கிற மாப்பிள்ளை டோய்
கோப்பையிலே தீனி திங்கிற மாப்பிள்ளை டோய்

மாப்பிள்ளை டோய் மாபிள்ளை டோய்
மணியான மதராசு மாப்பிள்ளை டோய்

சோப்பாலே மூஞ்சி தோய்க்கிரா சுந்தரி டோய்
சுண்ணாம்பை, கொழச்சி பூசுரா, சுந்தரி டோய்
சோப்பாலெய் மூஞ்சி தோய்க்கிரா சுந்தரி டோய்
சுண்ணம்பை, கொழச்சி பூசுரா, சுந்தரி டோஸ்

மை லேடி டோய் மை லேடி டோய்
மனம் போலே வந்து வாச்ச பெண் ஜோடி டோய்

சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
மன்னாதி மன்னனுனு மன்னாதி மன்னனுனு,
மனசுக்குள்ளே நினைச்சிடுவார்

மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு மாப்பிள்ளை டோய்

பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய்
பேயாண்டி தன்னை கண்டு, நீ ஏண்டி மையல் கொண்டாய்
பெண்களுக்கு அழகாகுமோ?
ஸா ரி ஸ்
ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபடப மப
ஸா ரிஸ
ஸரிஸநி ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபதப
ஸரிமரி ஸநிதஸஸ ரிஸநித பமமப
தபம ரிக மகரிஸ

நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார்
நாயாய் அலைந்து தேடித் தாய் மாமன் பிடித்து வந்தார்
ஓயாத குறும்பை கண்டு, தீராத காதல் கொண்டேன்

பாடலைப்பாடியவர்கள் : ஏ.எம்.ராஜா, பி.லீலா
படம். மனம் போல் மாங்கல்யம்
பாடலாசிரியர் : சுரதா
இசை: ஏ.ராமாராவ்

Friday, October 14, 2011

மனதில் என்ன நினைவுகளோ

லாலலா லலாலா

மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..
அதுவோ எதுவோ..
இனிய ரகசியமோ...
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..


தனிமை இருளில் உருகும் நெஞ்சம்
துணையை விரும்புமே
துணையை விரும்பி இணையும் பொழுது
அமைதி அரும்புமே


ஒன்றை விட்டு
ஒன்றிருந்தால் தாபம் மனதில் வளருமே
காதலின் பார்வையில் சோகம் விலகும்

மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..

நடந்து முடிந்த கதையை மறந்து
புதிய வழியிலே லலாலா
புதிய வழியில் புதிய உறவில்
புதிய உலகிலே
செல்லுங்களேன்... செல்வங்களே
உலகம் மிகவும் பெரியது
கருணையின் கைகளில் தாய்மை மலரும்

மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..
அதுவோ எதுவோ..

திரைப்படம்: பூந்தளிர்
இசை: இளையராஜா
பாடலைப்பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியன், எஸ்.பி சைலஜா

Wednesday, October 12, 2011

வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள்






வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள்
ஆஞ்சிலோ வண்ணங்கள்
நம் காதல் ரேகைகள் தானே (வெண்ணிற)
I have a dream கடல் காதல் ஆக்குமா
I have a dream நிலம் அன்பால் பூக்குமா
I have a dream ரோமின் சாலைகள்
I have a dream sky காதலை சேருமா

நாளெல்லாம் தேடினேன்
காதலைப் பாடினேன்
யாரென்னை கேட்பினும்
நல்ல பாடல் சொல்ல வந்தேனே
காதலின் சாலைகள்
பூமியைக் கோர்க்குமா
எல்லைகள் வேண்டுமா
என்ற கேள்வி ஏங்கி கேட்குமா


I have a dream கடல் காதல் ஆகுமா
I have a dream நிலம் அன்பால் பூக்குமா
I have a dream ஓ ஓ ரோமின் சாலைகள்
I have a dream I have a dream I have a dream

யாரோ நதியினில் போகும் வழிகளில்
எங்கும் உள்ளதே காதல்
ஒரு கூவம் கரையினில் ஆர்சிட் பூத்திடும் மாயம் செய்யுமே காதல்
vernes'இன் கடிதங்கள் keats'இன் கவிதைகள் எழுதசொன்னதே காதல்
நம் வான்கோ காதில் காதல் சொல்லிடு வரங்கள் தந்திடும் காதல்

I have a dream கடல் காதல் ஆகுமா
I have a dream நிலம் அன்பால் பூக்குமா
I have a dream ரோமின் சாலைகள்
I have a dream sky காதலை சேருமா


I have a dream கடல் காதல் ஆகுமா
I have a dream நிலம் அன்பால் பூக்குமா
I have a dream roman சாலைகள்
I have a dream I have a dream I have a dream


படம்: பேசு
பாடகர்: யுவன் ஷன்கர் ராஜா
இசை : யுவன்

Tuesday, October 11, 2011

கை வீணையை ஏந்தும் கலை வாணியே

சகரி மக பம தப
மபகம ரிகரிரிக மககா
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே
திருமலர் தாழ் போற்றி வா கண்மணி
வணங்குவோம்
திருமலர் தாழ் போற்றி வா கண்மணி
வணங்குவோம்
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே

உன் கோயில் எங்கும்
நாதஸ்வரங்கள் கேட்கும்
அந் நாதம் நெஞ்சில்
உந்தன் நினைவை வார்க்கும்
நாள் தோரும் பாயும்
நாத வெள்ளம் நீயே
பாவாணர் நாவில்
மேவும் எங்கள் தாயே
உந்தன் பாதம் போற்றி
உந்தன் பிள்ளை நாங்கள் வேண்டும்
(ஸ்)வரங்கள் தாராயோ
கை வீணையை ஏந்தும் கலை வாணியே
மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே

பாட்டாலே மீரா
நந்தன் வசமே சேர்ந்தாள்
பூங்கோதை ஆண்டாள்
கண்ணன் மனதை ஆண்டாள்
ஆண்டாளைப் போலே
பாவை ஒன்று பாடு
ஆண்டாண்டு காலம்
அன்பு தன்னை தேடு
தஞ்சம் நீயே என்று
நெஞ்சும் நாவும் நாளும் பாட
ஸ்வரங்கள் தாராயோ
(கை வீணையை )

திரைப்படம்: வியட்நாம் காலனி

பாடகர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ,
இசை: இளையராஜா
பாடல் ஆசிரியர்:வாலி

Monday, October 10, 2011

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் (2)
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னைச்)

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் (நின்னைச்)

துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்! (நின்னைச்)

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் (2)
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
(நின்னை)(2)

பாடியவர் : இளையராஜா , பாம்பே ஜெயஸ்ரீ
இசை: இளையராஜா
திரைப்படம்: பாரதி
பாடல் வரிகள் : பாரதியார்

நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ

திரைப்படம்: வெடிகுண்டு முருகேசன்
இசை: தீனா
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள் : யுகபாரதி

நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
உன்னை போல யாரும் இல்லை இந்த சீமையில்
அன்பைப் போல வேதம் ஏதும் இல்லை பூமியில்
(நீண்ட தூரம் போகும் பாதை )

வீசும் தென்றல் காற்று பேசிப் போகும் உன் பேரை
பாறைக்குள்ளும் நீயே பாசம் வைக்கும் தேரை
இமையோ தூங்கினும் இதயம் தூங்கிடாதே
நடைபாதை தேங்கினும் நட்பு தேங்கிடாதே
வாசல் மீது கோலம் போல நட்பு சேருமே
காலம் மாறி போகக்கூடும் காட்சி வாழுமே
மனதில் களங்கமில்லாமல் கருணை புரிபவன் நீயே
எதையும் திறந்து பெறாமல் முழுதும் தருபவன் நீயே
(நீண்ட தூரம் போகும் பாதை )
ஆராரோ ஆரிராரிராரோ ஆராரோ ஆரிராரிராரோ

நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு
போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னை தாங்கு
கனவே கண்களாய் மாறிப்போவதேனோ
வெயிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ
என்னில் நீயும் வாழ்வதாலே ஏது தொல்லைகள்
நீயும் நானும் காதல் தாயின் இளைய பிள்ளைகள்
நெளியும் நதியலை போலே நினைவில் சுதந்திரமாக
உறவில் தலைமுறை கூட உயிரில் நிரந்தரமாக

நீண்ட தூரம் போகும் பாதை ஊரை சேருமோ
நீல வானை சேர்ந்த மேகம் நீங்கி போகுமோ
உன்னை போல யாரும் இல்லை இந்த சீமையில்
அன்பை போல வேதம் ஏதும் இல்லை பூமியில்
(நீண்ட தூரம் போகும் )
http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGDHI0156'&lang=en

Sunday, October 9, 2011

குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு



குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா அது எப்படி ஆடுமய்யா

குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

ஆண் பிள்ளை முடி போடும் பொன் தாலிக்கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேல எனக்கென்ன கோபம்
ஓலைக்குடிசையிலே இந்த ஏழை பொறந்ததுக்கு
வந்தது தண்டனையா அது தெய்வத்தின் நிந்தனையா
இதை யாரோடு சொல்ல

குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

எல்லார்க்கும் தலைமேலே எழுத்தொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக்கூடும்
கண்ணீரை குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும் அதுதான்
ஏழையின் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல

குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமய்யா அது எப்படி ஆடுமய்யா

குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Last 25 songs posted in Thenkinnam