Monday, December 19, 2011

தாரா அவர் வருவாரா


தாரா அவர் வருவாரா
கண்கள் தவிப்பதைத் தான் அறிவாரா
மாறா அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா

தனியே பேசி மனம் மகிழ்ந்தாடுவாரா
தணியாக்காதலுடன் உறவாடுவாரா
அழைப்பாரா அணைப்பாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
(என் தாரா ..)

இதய வீணைதனில் ஒலி மீட்டுவாரா
இன்பக்காவியமாய் சுவையூட்டுவாரா
புதுமை ஊஞ்சலிலே தாலாட்டுவாரா
புகழ்வாரா மகிழ்வாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
(என் தாரா ..)
திரைப்படம் : அரசிளங்குமரி
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை:ஜி.ராமனாதன்

1 Comment:

வல்லிசிம்ஹன் said...

தாரா தார வந்தாரா'வோனு பார்த்தேன். இது ராஜசுலோசனா:)
இதுவும் நல்லத்தான் இருக்கு.

Last 25 songs posted in Thenkinnam