Tuesday, December 27, 2011

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்

http://www.saavn.com/popup/psong-c2VIrL4g.html&L=tamil

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
வெண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம் நீலாம்பரி கேட்கலாம்
(சந்தனம்)


மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த காதல் சீதனம் (மாணிக்க)

இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இசைவந்து பாடும் மோகனம்
இசைவந்து பாடும் மோகனம்

(சந்தனம்)

நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன (நீ பார்க்கும்)

இதமாக மை போட்டு இமையென்னும் கைபோட்டு
இதமாக மை போட்டு இமையென்னும் கைபோட்டு
உன் கண்கள் என்னைக் கொய்தன
உன் கண்கள் என்னைக் கொய்தன

(சந்தனம்)

திரைப்படம்: துடிக்கும் கரங்கள்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பி
இசை:எஸ்.பி.பி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam