Tuesday, December 20, 2011

அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே


அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே

ஓட்டுக்குள்ளே நத்தையைப் போல்
ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம்
பறவை போல பறக்கிறதே
பார்த்துகொள்ளு நீ கொஞ்சம்
மின்னல் வந்து விளக்கேற்றும்
மேகம் வந்து தாலாட்டும்
நினைக்கும் திசையில் பறந்திடலாம்
காதல் உனக்கு கை கொடுக்கும்
குட்டி குட்டி செடி அது
தொட்டில் கட்டும் மலர்
தினம் உன் பெயரை சொல்லிசொல்லி
அது அழைக்கிறதே
பெற்றவர்கள் முகம்
சுற்றி உள்ளவர்கள் முகம் - அட
அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே


ஆ..நீயின்றி நானில்லை அது நிச்சயம்
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
அன்பே அன்பே லலலாலலாலா..
அன்பே அன்பே லலலாலலாலா..

தேவதையின் கதைக் கேட்டு
சின்ன வயதில் தூங்கினேன்
தூக்கம் பறிக்கும் தேவதையை
நேரில் இன்று பார்க்கிறேன்..
சின்ன வயதில் பார்த்த நிலா
தூரமாகிப் போகலாம்
இந்த வயதில் நீ நினைத்தால்
நிலவின் மடியில் வாழலாம்..

ஒ...காதல் ஒரு வனம்
அதில் அலைவது சுகம்
வா சுற்றி சுற்றி எங்கும் நாம் நடந்திடலாம்
ஒ...காதல் ஒருமழை
அதில் தேவை இல்லை குடை
வா சொட்ட சொட்ட அதில் நாம் நனைந்திடலாம்...

ஆ ..நீயின்றி நானில்லை அது நிச்சயம்
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே

திரைப்படம் :: அன்பே அன்பே
பாடியவர்கள்: சாதனா சர்கம், ஹரிஹரன்
இசை: பரத்வாஜ்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam