Monday, October 10, 2011

நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ

திரைப்படம்: வெடிகுண்டு முருகேசன்
இசை: தீனா
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள் : யுகபாரதி

நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
உன்னை போல யாரும் இல்லை இந்த சீமையில்
அன்பைப் போல வேதம் ஏதும் இல்லை பூமியில்
(நீண்ட தூரம் போகும் பாதை )

வீசும் தென்றல் காற்று பேசிப் போகும் உன் பேரை
பாறைக்குள்ளும் நீயே பாசம் வைக்கும் தேரை
இமையோ தூங்கினும் இதயம் தூங்கிடாதே
நடைபாதை தேங்கினும் நட்பு தேங்கிடாதே
வாசல் மீது கோலம் போல நட்பு சேருமே
காலம் மாறி போகக்கூடும் காட்சி வாழுமே
மனதில் களங்கமில்லாமல் கருணை புரிபவன் நீயே
எதையும் திறந்து பெறாமல் முழுதும் தருபவன் நீயே
(நீண்ட தூரம் போகும் பாதை )
ஆராரோ ஆரிராரிராரோ ஆராரோ ஆரிராரிராரோ

நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு
போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னை தாங்கு
கனவே கண்களாய் மாறிப்போவதேனோ
வெயிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ
என்னில் நீயும் வாழ்வதாலே ஏது தொல்லைகள்
நீயும் நானும் காதல் தாயின் இளைய பிள்ளைகள்
நெளியும் நதியலை போலே நினைவில் சுதந்திரமாக
உறவில் தலைமுறை கூட உயிரில் நிரந்தரமாக

நீண்ட தூரம் போகும் பாதை ஊரை சேருமோ
நீல வானை சேர்ந்த மேகம் நீங்கி போகுமோ
உன்னை போல யாரும் இல்லை இந்த சீமையில்
அன்பை போல வேதம் ஏதும் இல்லை பூமியில்
(நீண்ட தூரம் போகும் )
http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGDHI0156'&lang=en

1 Comment:

மாய உலகம் said...

அழகிய பாடல்...பகிர்வுக்கு நன்றி

Last 25 songs posted in Thenkinnam