Friday, October 14, 2011

மனதில் என்ன நினைவுகளோ

லாலலா லலாலா

மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..
அதுவோ எதுவோ..
இனிய ரகசியமோ...
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..


தனிமை இருளில் உருகும் நெஞ்சம்
துணையை விரும்புமே
துணையை விரும்பி இணையும் பொழுது
அமைதி அரும்புமே


ஒன்றை விட்டு
ஒன்றிருந்தால் தாபம் மனதில் வளருமே
காதலின் பார்வையில் சோகம் விலகும்

மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..

நடந்து முடிந்த கதையை மறந்து
புதிய வழியிலே லலாலா
புதிய வழியில் புதிய உறவில்
புதிய உலகிலே
செல்லுங்களேன்... செல்வங்களே
உலகம் மிகவும் பெரியது
கருணையின் கைகளில் தாய்மை மலரும்

மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..
அதுவோ எதுவோ..

திரைப்படம்: பூந்தளிர்
இசை: இளையராஜா
பாடலைப்பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியன், எஸ்.பி சைலஜா

1 Comment:

சேக்காளி said...

ராஜாவின் இசையில் அபூர்வமாய் சைலஜா - பாலுவுடன் இணைந்து பாடிய டூயட்.

Last 25 songs posted in Thenkinnam