Friday, October 21, 2011

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
என் உயிரில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓ...ஓ
ஏங்கிடுதே மனமே
(எங்கிருந்தோ )

வசந்தமும் இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று
இன்பத்தின் கீதம் தந்தாலும்
நீ இன்றி ஏது வசந்தம் இங்கே
நீ இன்றி ஏது ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ ...

(எங்கிருந்தோ )

காதலில் உருகும் பாடல் ஒன்று
கேட்கிறதா உன் காதினிலே
காதலில் உயிரை தேடி வந்து
கலந்திட வா ஏன் ஜீவனிலே
உயிரினைத் தேடும் உயிர் இங்கே
ஜீவனைத் தேடும் ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ ...


இசை : இளையராஜா
திரைப்படம் : என் ஜீவன் பாடுது
பாடியவர் : லதா மங்கேஷ்கர்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam