Friday, March 15, 2013

கோடை கால காற்றே


கோடை கால காற்றே - திரைப்பாடல்.காம்

கோடை கால காற்றே
குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினந்தோறும் இசை பாடு
அதை கேட்கும் நெஞ்சமே
சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே
புது சோலைப்பூக்களே

வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
இது நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே
புது சோலைப்பூக்களே

ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
பென் மலையருவி பன்னீர் தூவி
பொன்மலையழகின் சுகம் ஏற்காதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
இவைகள் இளமாலைப் பூக்களே
புது சோலைப்பூக்களே



படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam