Tuesday, April 23, 2013

உதயம் NH4 - யாரோ இவன்



யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

எங்கே உன்னை கூட்டி செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல

என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே

ஏன் இன்று இடைவெளி குறைகிறதே

மெதுவாக இதயங்கள் இணைகிறதே

உன் கை விரல் என் கை விரல் கேட்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்

உன் சுவாசங்கள் எனை தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ

உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ

நதியினில் ஒரு இலை விழுகிறதே

அலைகளில் மிதந்து அது தவழ்கிறதே
கரை சேருமா கை சேருமா எதிர்காலமே

எனக்காவே பிறந்தான் இவன்
எனை காக்கவே வருவான் இவன்
என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

படம் : உதயம் NH4 (2013)
இசை : ஜி.வி. பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : ஜி.வி. பிரகாஷ்குமார், சைந்தவி
வரிகள் : நா. முத்துக்குமார்

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

/// அலைகளில் மிதந்து அது தவழ்கிறதே...
கரை சேருமா கை சேருமா எதிர்காலமே... ///

வரிகளுக்கு நன்றி...

Last 25 songs posted in Thenkinnam