Thursday, September 12, 2013

பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்

பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே

மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே

பெருங்காற்றிலே மரமாகிறேன்
வேரோடு தான் என் நெஞ்சம் ஆடுதே

தனியாக நான் நொடி நேரமும்
இருந்தால் அது எனை கொல்லுதே

ஏன் என்று தெரியாத பயம் தோன்றுதே
ஆனாலும் இது கூட இதம் ஆனதே


பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே


ஒரு நேரத்தில் நீ பல பார்வைகள்
பார்க்கின்ற பழக்கத்தை எங்கே கற்றாய்

சில நேரத்தில் சிலை போலவே
செய்கின்ற கலையை நீ எங்கே பெற்றாய்

புரியாத பாடல் அதை நெஞ்சமே தினமும் இசைகின்றதே
முழுதாகி மாறி மனம் தஞ்சம் கேட்டுத் தொடர்கிறதே

தொலை தூரம் காணும் தொடுவானமாய் விழி மயக்கியதே
காலை தொடங்கி மாலை வரையில் காதல் எனைச் சுடச் சுட வதைக்குதே

பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே


சில நேரங்களில் நீ விரல் தீண்டுவாய்
என் உயிர் காடு தீ பற்றி எரிகின்றதே

பொதுவாக நீ ஒரு சொல் சொல்கிறாய்
என் புலன் ஐந்தும் பனியாகிக் கரைகின்றதே

உனக்காக வாழும் சில நாட்கள் தான் என் வாழ்க்கையடா
உனதாக என்னை உரு மாற்றிப் போனது காதலடா

அடையாளம் இல்லா ஓர் ஆசை தான் நெஞ்சை உலுக்கிடுதே
ஆலை நடுவே போட்ட கரும்பாய் வாழும்வரை மனம் பாடாய்படுத்துதே


பெயரில்லா மொழியிலே பேசுவாய் பேசுவாய்
உயிரெல்லாம் ஒரு விசை தாக்குமே
மழையில்லா நேரமும் அருகில் நீ வருகையில்
ஆறேழு வானவில் தோன்றுமே

திரைப்படம் : கண்பேசும் வார்த்தைகள்
இசை:ஷமந்த்
வரிகள் : விவேகா
பாடியவர்கள் : விஜய் யேஸுதாஸ், ஹரிணி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam