Wednesday, September 11, 2013

ஜீவனே ஜீவனே - மேகா

 raaga.com - Jeevane Jeevane

ஜீவனே ஜீவனே எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல் நேரில் வாராயோ
கண்களில் உன் முகம் எந்தன் முன் தோன்றுதே
காலடி தேடியே பாதைகள் நீளுதே
நான் ஓய்ந்திடாமல் தேடி வந்து உன்னை சேருவேன்

தீபமென சுழலும் விழிச்சுடரொளியே
உனை காற்றினிலும் அணைய விடமாட்டேன்
உயிருக்குள்ளே உயிர் கலந்த உயிரொளியே
உனை ஒரு பொழுதும் வெளியில் விடமாட்டேன்
எனக்குள் உன்னை தூங்க வைத்து
எனது மூச்சால் மூடுவேன்
இரவும் பகலும் விழித்து இருந்து
உன்னைப் பார்த்தே வாழுவேன்
நான் ஓய்ந்து ஓய்ந்து போகும்போதும் உன்னைத் தேடுவேன்

கருவறையில் உறங்கும் ஒரு குழந்தையென
என் இதயத்திலே உனை சுமந்து வாழ்வேன்
கடவுள் வந்து எதிரில் நின்று கேட்டாலும்
நான் எனைத் தருவேன் உன்னைத் தர மாட்டேன்
காலம் நன்றே என்று ஆக
உன்னைக் கண்டேன் கண்மணி
சோகம் நின்றே நின்று போக
வந்து சேர்த்தாய் கண்மணி
இது காதல் காலம் வாழ்த்தும் கீதம் எங்கும் கேட்குதே

தேவியே தேவியே தென்றல் தாலாட்ட
சோகமே தீர்ந்ததால் நெஞ்சில் தேன் ஊற
மயில்களின் இறகினால் உன் முகம் வருடுவேன்
காதலின் அமுதினை இதயத்தால் பருகுவேன்
அந்த காதல் தேவன் ஆணை என்ன சொல்வதாரடி?!


படம்: மேகா
இசை: இளையராஜா
பாடல்: பழநிபாரதி
பாடியவர்: இளையராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam