Wednesday, September 11, 2013

செல்லம் கொஞ்சும் பூவே - மேகா

raaga.com : Chellam Konjum Poove

செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளித் தாடா
விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்
உன்னை கேட்டேன் உயிரைத் தந்தாய்
மேகம் மேகத்தோடு கொஞ்சி
பேசும் ஓசை கேட்கலாமா
அந்த வெண்ணிலாவின் மடியில்
காதல் கதைகள் கேட்கலாமா
தூங்கிப் பார்க்கலாமா


பூக்கள் உதிர்கின்ற நிழற்சாலையில்
நெஞ்சம் உன்னோடு நீந்தும்
காதல் பரிசாக மழைப் பூக்களை
கைகள் உனக்காக ஏந்தும்
என் கண்கள் பார்த்துக்கொண்டே
நீ உளறும் உளறல் எல்லாம் 
ஒரு கவிதை ஆனதென்ன
நீ கவிஞன் ஆனதென்ன
எந்தன் காதல் தேவதை நீ
உந்தன் சிறகில் என்னை மூடு
எந்தன் மூச்சுக்குழலுக்குள்ளே
வந்து இரவின் ராகம் பாடு
என்னில் உன்னைத் தேடு

காலை பனி போல உன் ஞாபகம்
என்னை சில்லென்று தீண்டும்
மாலை வெயில் வந்து என் மார்பிலே
உந்தன் விரல் கொண்டு சீண்டும்
என் கனவின் அழகையெல்லாம்
நீ அள்ளி வந்ததென்ன
என் காதல் மொழிகளெல்லாம்
நீ சொல்லித் தந்ததென்ன
இங்கு வீசும் காற்று எல்லாம்
உந்தன் வாசம் வீச வேண்டும்
வானவில்லின் வண்ணம் அள்ளி
உந்தன் நெஞ்சில் பூச வேண்டும்
கண்கள் கூச வேண்டும்



படம்: மேகா
இசை: இளையராஜா
பாடல்: பழநி பாரதி
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா NSK

1 Comment:

Yaathoramani.blogspot.com said...

காதல் உணர்வைச் சொல்லும்
அற்புதமான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Last 25 songs posted in Thenkinnam