Wednesday, September 11, 2013

என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ

என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ

மனம் ஏனோ
மணி ஊஞ்சல் ஆடுதே
இது நானா
என கேட்கத் தோன்றுதே

(என் சுவாசத்தில்)

இங்கு காதல் என்பது கடவுள் என்றால்
இதுவரை நான் ஒரு நாத்திகனே

நம் மனமே கோவில்
முத்தம் திருநீர்
பக்தன் நீயே காதலரே

இங்கு காதல் என்பது கடவுள் என்றால்
இதுவரை நான் ஒரு நாத்திகனே

நம் மனமே கோவில்
முத்தம் திருநீர்
பக்தன் நீயே காதலரே

இமை அசைந்திடும் ஓசையும் கேட்கிறதே
உயிர்வரையிலும் பார்வைகள் பாய்கிறதே
அன்பே.. அன்பே…

என் உள்ளம் எண்ணம் தேகம்
ஜீவன் ஆதி அந்தம் யாவும் நீ தானே

என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ

என் மனமெனும் சாலையில் இது நாள் வரையில்
பெண்ணின் சுவடுகள் கிடையாதே


ஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும்
இதுவரை நெஞ்சம் அறியாதே

என் மனமெனும் சாலையில் இது நாள் வரையில்
பெண்ணின் சுவடுகள் கிடையாதே

ஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும்
இதுவரை நெஞ்சம் அறியாதே

நொடியினை ஒரு ஆண்டென மாற்றிடலாம்
மணிகணக்கினில் மௌனத்தைப் பேசிடலாம்


இனி உன்னில் என்னை என்னில் உன்னை
மாற்றி மாற்றி ஊற்றி வைப்போமா


என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களைக் கூட பேச வைத்ததாரோ

மனம் ஏனோ மணி ஊஞ்சல் ஆடுதே
இது நானா என கேட்கத் தோன்றுதே

என் சுவாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ

பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், கல்யாணி
திரைப்படம் : ஜெர்ரி
இசை: ரமேஷ் வினாயகம்



0 Comments:

Last 25 songs posted in Thenkinnam