அடிப் பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே அடிப்பெண்ணே
வானத்தில் சில மேகம்
பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசையென்ன
பூங்காற்றில் ஒரு ராகம்
பொன்வண்டின் ரீங்காரம்
பாடு ம் பாடல் என்ன
சித்தாடை கட்டாத செவ்வந்தியே
சிங்காரப் பார்வை சொல்லும்
சேதிஎன்னவோ
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே அடிப்பெண்ணே
நீரோடும் ஒரு ஓடை
மீனாடும் சிறு மேடை
தேடும் தேவை என்ன
பார்த்தாளோ ஒரு ராணி
பாலாடை இவள் மேனி
கூறும் ஜாடை என்ன
ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே
கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ
அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோசம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண் பாடுதே மனம் ஆடுகின்றதே
அடிப்பெண்ணே
அடிப்பெண்ணே
பாடியவர் : ஜென்சி
இசை : இளையராஜா
திரைப்படம் : முள்ளும் மலரும்
பாடல்வரிகள் : பஞ்சு அருணாசலம்
Wednesday, August 11, 2010
அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 12:13 PM
வகை இளையராஜா, பஞ்சு அருணாச்சலம், ஜென்சி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment