Thursday, August 12, 2010

நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்

நீ இல்லாத போது ஏங்கும்
நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு

(நீ இல்லாத )

முதன்முதலில் தொடும் வரை தினம் நான் எங்கோ
விரல் நுனிகள் படும்வரை விழி தான்தூங்க
காவியம் பாடும் காதல் பூங்காற்று
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே

(நீ இல்லாத)

எது வரையில் சுகம் என அதை காண்பேன்
இதழ் முழுவதும் சுவை என அதை நான் சேர்வேன்
ஏங்கிடும் போது எண்ணம் தானாட
இருமேனியில் ஒரு பாவனை
இருந்தால் தொடரும் இனிமை


திரைப்படம் : இளமைக்கோலம்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், ஜென்சி
பாடல்வரிகள் : கங்கை அமரன்
இசை : இளையராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam