தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு
இதுவரையில் எதைக்கேட்டாலும் தருவாயே மனம் கோணாமல்
துயரம் இதை நான் கேட்காமல்
கொடுத்தாயே எதற்காக
(தெய்வம்..)
ஒரு நாள் எனை பிரிந்தாலும் வாடிய முகமே
உனை இனி எங்குப் பார்ப்பது ஓ
எனதாசைகள் நிறைவேற ஏங்கிய
மனமே உனை எதைத்தந்து மேய்ப்பது
அழுதிடக்கூடாதென்று அறிவுறை கூறுவாய்
அழுகையை நீயே தந்து போனாயே
உறங்கிய நேரம் இன்றி உழைத்திடும் கண்களே
நிரந்தரத் தூக்கம் என்ன ஆண் தாயே
(தெய்வம்..)
உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ தினம் பேசுவாய்
அது என்ன ஆனது ஓ
தலைமேல் சுமை இருந்தாலும் புன்னகை
தருமே இதழ் அது எங்குப்போனது
நடந்திடப்பாதம் தந்து வழிக்காட்டினாய்
நடுவிலே முந்தி சென்றாய் என் செய்வேன்
எது எது இல்லையென்று எனக்கென வாங்கினாய்
இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்
(தெய்வம்..)
படம்: நான் மகான் அல்ல
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
வரிகள்: யுகபாரதி
Thursday, August 12, 2010
நான் மகான் அல்ல - தெய்வம் இல்லையெனும்போது
பதிந்தவர் MyFriend @ 1:14 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment