புதிய மனிதா பூமிக்கு வா
எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹார்ட்டிஸ்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால் உலகை மாற்று
எல்லா உயிருக்கும் நன்மையாயிரு
எந்த நிலையிலும் உண்மையாயிரு
எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா
நான் கண்டது ஆறறிவு நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி நீ பெற்றது நூறு மொழி
ஈரல் கனையம் துன்பமில்லை இதயக் கோளாறெதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை எந்திரம் வீழ்வதில்லை
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை
இதோ என் எந்திரன் இவன் அமரன்
இதோ என் எந்திரன் இவன் அமரன்
நான் இன்னொரு நான் முகனே
நீ என்பவன் என் மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஜான ஒலி
நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி
ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி தமிழ் அல்லவா
ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு வா
படம்: எந்திரன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், SP பாலசுப்ரமணியம், கதிஜா ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
Friday, August 6, 2010
எந்திரன் - புதிய மனிதா
பதிந்தவர் MyFriend @ 1:45 AM
வகை 2010, AR ரஹ்மான், SP பாலசுப்ரமணியம், கதிஜா ரஹ்மான், ரஜினி, வைரமுத்து
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
மிக அருமையான பாடல்.....ஒரு வரி இந்த எழுத்துருவில் இல்லை - ஆண்...பெற்றது ஆண் மகனே - அதன் பிறகு “ஆம் உன் பெயர் எந்திரனே” என்று வரும்.
ஏ.ஆர்.ரஹ்மானிடம் பிடித்தது, அவர் கவிஞ்ரின் வரிகளை தன் இசையில் அமர வைக்கும் உத்தி.....ரஜினி சொல்லியது போல், அவர் ஒரு யோகி தான்
Post a Comment