Tuesday, March 13, 2012

பாதகத்தி கண்ணு பட்டு

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
பாராங்கல்லு ரெக்க கட்டி பறக்குதடி எட கொறஞ்சி
பட்ட மரம் ஒன்னு பொசுக்குனு துளிர்க்குதே

நீ சிரிக்கும் பொது, எம் மனசு வழுக்குதே
உன்கிட்டக் கெஞ்ச, என்னோட நெஞ்ச, என்னடி செஞ்ச சொல்லு சொல்லு
காதல சொன்னேன், கற்பூரக் கண்ண என்னடி பண்ண சொல்லு சொல்லு

பாதகத்தி கண்ணுபட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு

மனசு முழுக்க ஆச, என்னடி நானும் பேச
நாக்குக்குள்ள கூச, தடுமாறிப்போனேன்
காணாத கானகத்தில் அலைஞ்சி திரிஞ்ச நானும்தான்
காத்தாக என்ன உரசி சாச்சிபுட்ட நீயும்தான்

உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான்
உம் பேர உசுரு மேல உசுரு மேல வெட்டிக்கிட்டேன் நான்

பாதகத்தி கண்ணுபட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு

அழுக்கா கெடந்த மனச, நீயும் இறங்கி அலச
மறந்து நிக்குறேன் பழச புரியாம தானே
ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறன் நானும்தான்
அங்கேயும் உன் நெனப்ப, அனுப்பி வைக்குற நீயும்தான்

நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே
உன் கூட நதி போல நதி போல காலம் ஓடுதே

பாதகத்தி கண்ணுபட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
பாராங்கல்லு ரெக்க கட்டி பறக்குதடி எடை கொறைஞ்சி
பட்ட மரம ஒன்னு பொசுக்குனு துளிர்க்குதே

நீ சிரிக்கும் போது, எம் மனசு வழுக்குதே

உன்கிட்ட கெஞ்ச, என்னோட நெஞ்ச, என்னடி செஞ்ச சொல்லு சொல்லு
காதல சொன்னேன், கற்பூர கண்ணே என்னடி பண்ண சொல்லு சொல்லு
இசை: யுவன் சங்கர்
பாடியவர் : யுவன் சங்கர்
படம்: கழுகு
பாடலைக்கேட்க ..
http://s02.download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Kazhugu/Paathagathi%20Kannupattu%20-%20TamilWire.com.mp3

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam