Tuesday, January 3, 2012

விதைத்த விதை தளிராய் எழுந்து

விதைத்த விதை தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது
ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது

காலங்கள் செய்கின்ற கோலங்கள் புதிது
நாளொன்றும் உள்ளத்தின் எண்ணங்கள் புதிது
பாதை இரண்டு பயணம் இரண்டு
பாதை இரண்டு பயணம் இரண்டு
போனால் என்ன
மனம்தானே ஒன்று
போகும் பாதை அது சேரும் இன்று
வேறென்ன நாம் சொல்வது

(விதைத்த)

பூவாக பிஞ்சாகக் காயாகும் நினைவு
பூந்தென்றல் காற்றோடு வந்தாடும் கனவு
நாளும் வரவு சேரும் உறவு
நாளும் வரவு சேரும் உறவு
மேலும் மேலும் பல காதல் கோலம்
தோன்றும் காலம் இது காதல் காலம்
ஆனந்தமே ஆனந்தமே

(விதைத்த)

பாடியவர்கள் : தீபன் சக்ரவர்த்தி , சசிரேகா
இசை: இளையராஜா
திரைப்படம்: எத்தனை கோணம் எத்தனை பார்வை

Last 25 songs posted in Thenkinnam