Wednesday, August 6, 2014

அங்கே இப்போ என்ன செய்கிறாய்




அங்கே இப்போ
என்ன செய்கிறாய்?ஆடை மாற்றித் தூங்கச்செல்கிறாய்
என்னைத் தூங்கப்போகச் சொல்கிறாய்
போகிறேன்

போகிறேன் ஓ ஓ
என்னவும் பேசலாம்
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே
உன் மனம் என்னவோ
துழாவிப் பார்க்கத்தோன்றுதே

விரல் நுனி அனுப்பிடும்
விசாரணை சுகமே
பதில் ஒலி வரும் வரை
படும் வலி சுகமே

உயிரில்லையே விரல்களுக்கு
நோகின்றதே அது எதுக்கு (??)
ஆனாலும் ஏன் சுகமிருக்கு
நெஞ்சே சொல்

நிறம் எது மணம் எது
பிடிக்குது உனக்கு
கரும் நிறம்
கடல் மணம்
பிடிக்குமே  எனக்கு
நான் காலையில் எழுந்ததுமே
தானாகவே தலை திரும்பும்
உன் செய்தியை மனம் விரும்பும்
ஏனோ ஏனோ




திரைப்படம் : இரும்பு குதிரை
வரிகள் : தாமரை
இசை : ஜி.வி. ப்ரகாஷ்
பாடியவர்கள்: விஜய்ப்ரகாஷ், எம்.எம்.மானஸி. முக்தா

1 Comment:

Anonymous said...

It is ஓய்வில்லையே விரல்களுக்கு, நோகின்றதே நக இடுக்கு...

Last 25 songs posted in Thenkinnam