Thursday, April 1, 2010

ஆகாய சூரியனை



ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள்

ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட
கொடி நான் என் எண்ணம் எதுவோ
கிளி நான் உனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளி நான் உன்னை கொஞ்சும் எண்ணமோ

(ஆகாயச்..)
அடியே நான் என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட
கொடியே உன் எண்ணம் என்னவோ
சகியே எனைக் கொஞ்சம் கொஞ்சம் கொத்தித் தின்னும்
கிளியே என்னைக் கொல்லும் எண்ணமோ

காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே ஒண்ணை உண்ணும் விந்தை இங்குதான்
காதல் பார்வையில் பூமி வேறுதான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிறும்
மாறுதல் இங்கேதான்
உன் குளிருக்கு இதமாய்
எனை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகம்தான்
உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது
(ஆகாய..)

என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்
டோராபோரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கினால் எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே
ஒளிந்து கொள்கின்றேன்
அடி காதல் வந்து என் கண்ணாமூச்சி
நீ கண்டு கண்டு பிடித்தால்
பின் காமன் ஆட்சி
கத்தியை பறித்து நீ பூவை திணிக்கிறாய்
பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி
(ஆகாய..)

படம்: சாமுராய்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஹரிணி

1 Comment:

சீனு said...

//காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே விண்ணை உண்ணும் விந்தை இங்குதான்
//

காதல் பந்தியில் 'நானே'(?) உணவுதான்
உண்ணும் பொருளே 'உண்ணை(?)' உண்ணும் விந்தை இங்கே தான்

(கொஞ்சம் செக் பன்னிக்கோங்க).

Last 25 songs posted in Thenkinnam