Thursday, April 21, 2011

விழியோரத்துக் கனவும் இங்கு கரைந்தோடிடுதே

விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே
விடியும் என்ற பொழுதில்
வந்து இருள் மூடிடுதே

கதைபோல் வந்த உறவு
இடையே இந்த பிரிவு
இசைகூடிய கவிதை
அதன் ஒலித்தேன் அதும் ஏனோ?

விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே
விடியும் என்ற பொழுதில்
வந்து இருள் மூடிடுதே

விழியோரத்துக் கனவும்
இங்கு கரைந்தோடிடுதே

ஆஆ ஆஆ ஆ
ஆஆஆ ஆஆஆ

ஒரு ஓவியக்கவிதை
கண்ணீரினில் நனையும்
ஒரு காவியக்கனவை
தினமும் மனம் நினைக்கும்
இருகாதலர் நடத்தும்
தனிமைப் பயணம்
ஒரு பாதையில் இருந்தும்
அதில் பிரிவும் ஏனோ?

திரைப்படம்: ராஜபார்வை
பாடியவர் : உமா ரமணன் , கமலஹாசன்
இசை : இளையராஜா

1 Comment:

சாகம்பரி said...

இது என்னுடைய கல்லூரிகாலத்து பாடல். காதலை உணராத போதே ஒரு வலியுடன் நாங்கள் ரசித்தோம். Thank you.

Last 25 songs posted in Thenkinnam