Tuesday, April 26, 2011

விழிதீபம் உனைத்தேடும்

விழிதீபம் உனைத்தேடும்
புதுராகம் மனம் பாடும்
சங்கீத மேடை
தெய்வீக ஜாடை (விழிதீபம்)

உன் பாடல் கேட்டு
தென்றல் இளங்காற்று
உரசும் தழுவும் தினம்தோறும் (உன்பாடல்)
பூவான எந்தன் நெஞ்சம்
எந்நாளும் உந்தன் சொந்தம் (பூவான)
கடைக்கண் பார்வை பேசாதோ
(விழிதீபம்)

ஆனந்த வெள்ளம் பொங்கிவரும் நேரம்
அடடா இதுபோல் சுகமேது
சந்தோச மாலை போட்டு
சங்கீத வீணை மீட்டு (சந்தோச)
இதயம் கனவில் நீந்தாதோ
(விழிதீபம்)

பாடலை இங்கே கேட்கலாம்.



திரைப்படம் : கடைக்கண் பார்வை
பாடியவர்கள்: பி.சுசீலா, எஸ்.பி.பி
இசை : V.S. நரசிம்மன்
பாடல் : மு. மேத்தா

1 Comment:

ADHI VENKAT said...

இனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றி முத்துலெட்சுமி.

Last 25 songs posted in Thenkinnam