Thursday, February 16, 2012

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே
காதல் நுழைந்த வழி கண்டறிவாய் காதலியே

விண்ணில் மழை துளிகள் மின்னலாய் நின்றுவிட
மண்ணில் எனது நிழல் உன்னைப்போல மாறி விட
விரலோரம் கவிதை ஊறியதே
விழியோரம் காதல் கசிகிறதே
நதி மேலே ஓற்றை காலில் மழை ஆடும் ஆனந்தமாய்
கனவு ஊறும் மனசுக்குள்ளே
காதல் வந்து ஓற்றை காலில் சுற்றி சுற்றி மூழ்கடிக்குதே

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே

உன் இதயம் நான் படிக்க கள்வனாய் மாறி வந்தேன்
என்னைப் போல நீயும் ஓரு கள்ளி என கண்டு கொண்டேன்
என் விரலை உன் விரலாய் இரவினில் தீண்டுகிறேன்
முத்தமென்று தண்ணீரை முகத்தினில் ஊற்றுகிறேன்
உன் முகம் தேடி காலையில் வெயிலாகிறேன்
உன் குரல் தேடி சாலையில் குயிலாகிறேன்

தேர்வு அறை முழுதும் தேவதையே உன் நினைவு
நாளை விடுமுறையாம் காதல் வதை உன் பிரிவு

கண்கள் எனை மறந்து உன்னையே தேடியது
சுவாசம் உன் பெயரை என்னுள்ளே பாடியது
லேசாக சண்டை போடவா
பேசாமல் முத்தம் கேட்கவா
வெயில் காயும் சாலையிலே மழை தூவும் ஆனந்தமாய்
தனிமை நீங்கும் வேளையிலே
காதல் நம்மை காற்றைப் போல எங்கோ எங்கோ கொண்டு செல்லுதே...

திரைபடம்: தவமாய் தவமிருந்து
இசை: சபேஷ் முரளி
பாடியவர்: ப்ரசன்னா

1 Comment:

ADHI VENKAT said...

இனிமையான பாடல்.

Last 25 songs posted in Thenkinnam