Sunday, February 19, 2012

ஒன்ன நம்பி நெத்தியிலே

ஒன்ன நம்பி நெத்தியிலே
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டே வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே
பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சுக்க ராசா
விட்டுப்போனா உதிர்ந்து போகும் வாசன ரோசா

(ஒன்ன நம்பி நெத்தியிலே )

நீரிருந்தா மீனிருக்கும்
நீயிருந்தா நானிருப்பேன்
ஊருங்கூட ஒன்ன நம்பி இருக்குது ராசா

நீரிருந்தா மீனிருக்கும்
நீயிருந்தா நானிருப்பேன்
ஊருங்கூட ஒன்ன நம்பி இருக்குது ராசா
ஒண்ணாரு எனக்கு கண்ணாரு
ஒன்னத்தான் எண்ணி இந்தக் கன்னி
ஒரு சிந்து படிச்சேனே
ஒன்னத்தான் கனாக்கண்டு கண்ணு முழிச்சேனே

(ஒன்ன நம்பி நெத்தியிலே)


வீரத்துல கட்டபொம்மன் ரோஷத்துல ஊமத்தொர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்குராசா
வீரத்துல கட்டபொம்மன் ரோஷத்துல ஊமத்தொர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்குராசா
சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்
அந்தக் கத அப்போ அட இப்போ
நம்ம சொந்தக்கத சொல்லு
நெனப்புல கட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள நில்லு

(ஒன்ன நம்பி நெத்தியிலே )
திரைப்படம்: சிட்டுக்குருவி
பாடியவர்: சுசீலா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam