Thursday, February 16, 2012

மன்னிக்க மாட்டாயா

மன்னிக்க மாட்டாயா உன்மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும்
போதும்
மன்னிக்க மாட்டாயா
(மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி)

என் விழிகள் தீபங்களாய்
உனக்கென ஏற்றிவைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன்

உன்னடிமை உன்னருளை
பெற ஒரு வழி இல்லையா
உன்னருகில் வாழ உந்தன்
நிழலுக்கு இடமில்லையா
(மன்னிக்கமாட்டாயா)

என் மனதில்
நாள் முழுதும் இருப்பது நீயல்லவா
என் குரலில்
ராகங்களாய் ஒலிப்பதும் மூச்சல்லவா
என் இதயம் உன் உடமை
உனக்கது புரியாதா
இன்னுமதை நீ மிதித்தால்
உனக்கது வலிக்காதா
( மன்னிக்க மாட்டாயா)


திரைப்படம்: ஜனனி
இசை: எம்.எஸ்.வி
பாடியவர்: ஜேஸுதாஸ்

4 Comments:

ADHI VENKAT said...

நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said...

பாடல் வரிகளும் குரலும் இசையும்
சிறிது நேரம் சூழலையே மறக்கடித்துப் போகிறது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

வல்லிசிம்ஹன் said...

அருமையான பாடல். மறந்து கூடப் போய்விட்டேன். நன்றி கயல். யேசுதாஸ்+இசை, கருத்து எல்லாமே சூபர்ப்.

Unknown said...

என்றும் மறக்கமுடியாத இனிமையான பாடல்.

Last 25 songs posted in Thenkinnam