Sunday, February 19, 2012

என்னில் என்னில் நீயென

என்னில் என்னில் நீயென
உன்னில் உன்னில் நானென
(என்னில்)
விழியிரண்டில் வேள்வியென வளர்த்தது
வேரருந்த மரமெனத்தான் சரிந்தது
காதல் தீ தீ வாட்டுது
கள்ளிப்பால் பாலூட்டுது(காதல்)

மாறும் காலம் என்றே
மாறாக்காதல் கொண்டேன்
கண்ணுக்குள் பூட்டித்தான்
கற்பூரம் ஏற்றித்தான்
பூஜித்தேன்

மௌனம் ஒன்றே உந்தன்
பாஷை என்றே நின்று
உன்னை நீ தண்டிக்க
என்னையும் நீ வஞ்சிக்க
வாழ்ந்தததேன்

யார் தந்த சாபக்கேடோ
துடிக்கிறேன்
கார்மேகம் கண்ணில் சூழ
தவிக்கிறேன்
முதல் முதலாய் கடிதம் பிறந்தது
முகவரியை எழுதும்முன்னே
பறந்தது
காதல் தீ தீ வாட்டுதே
கள்ளிப்பால் பாலூட்டுதே
என்னில் என்னில் நீயென
உன்னில் உன்னில் நானென

மின்னும் கானல் நீரில்
காதல் மீனைத்தேடி
நாளும் தான் நான் சென்றேன்
ஏமாற்றம் ஒன்றே தான்
கண்டேனே
எட்டும் தூரம் தன்னில்
கிட்ட நின்றாய் நீயும்
கண்ணைத்தான் கட்டித்தான்
காட்டுக்குள் தானாய்த்தான்
சென்றேனே
செவ்வானம் நாளை மீண்டும் உதிக்குமோ
செந்தூரம் உந்தன் கையால் கிடைக்குமோ
மூடுபனி பாதைதனை மூடலாம்
காத்திருந்தால் காட்சி அது தோன்றலாம்
(காதல்தீ)

திரைப்படம்: பாரிஜாதம்
பாடியவர்கள்: ஹரிச்சரண் , மாலதி
இசை: தரண்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam