Tuesday, April 14, 2009

999. கடவுள் தந்த அழகிய வாழ்வு

மலேசியப்பதிவர் "காலச்சிறகுகள்" உஷா வின் பிறந்தநாளுக்கு தேன்கிண்ணம் வாழ்த்துப்பாடல் இசைக்கிறது .. வாழ்த்துப்பாடல் இசைக்க கேட்டவர் சென்ஷி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே
வாழ்த்து பாடு
கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
ஓ ஓ ஓஓஒ.....

பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..


எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்
ஓஓஒ ஓஒ
பரவசம் இந்த பரவசம்
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

(கடவுள் தந்த)


நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலையுதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே
கேளடி
( கடவுள் தந்த அழகிய வாழ்வு )



திரைப்படம்: மாயாவி
பாடியவர்கள்:கல்பனா , SPB சரண்
இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத்

15 Comments:

சென்ஷி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உஷா :-)

goma said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உஷா!

முத்துலஷ்மி கயல்விழி! இந்த பிறந்தநாள் வாழ்த்து பாடலைக் கேட்டபிறகு ,ஒரு கணம் சிலிர்த்து விட்டேன்.அதுவும் ஒளியோடு சேர்த்து பார்க்கும் பொழுது,நாடி நரம்பெல்லாம் புதிதாய் உருவெடுத்த புத்துணர்வு.
இந்த பாடல் எனக்கு புத்தாண்டு வாழ்த்தாய் ஏற்றுக் கொள்கிறேன் .
நன்றி.

goma said...

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்.....
......இன்று வரை இந்த பாடல் எப்படி என் செவிக்கு எட்டாமல் போனது.

ஆயில்யன் said...

எனக்கு நொம்ப்ப்ப்ப்ப்ப்ப் புடிச்ச பாட்டு :)

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உஷா :)

ஆயில்யன் said...

//எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்


இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது


எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம் ///


இந்த வரிகளோடே வாழ்ந்திடுவோம்!

ராமலக்ஷ்மி said...

உஷாவுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

இது நான் முன்னரே உங்களிடம் விரும்பிக் கேட்ட பாடல் முத்துலெட்சுமி. என் ப்ரொஃபைலில் எனக்குப் பிடித்த பாடலாகக் குறிப்பிட்டிருப்பேன்.

Anonymous said...

இனிமையான பாடல் எஸ்.பி.பி. அந்த காலத்தில் பாடிய உணர்வு ஏற்பட்டது. உங்களோடு உஷாவிற்க்கு என் வாழ்த்துக்களும்.

RAMYA said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உஷா!!

RAMYA said...

//
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்.....
//

அருமையான வரிகள் அல்லவா
மனதை கொள்ளை கொள்கின்றதே!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோமா.. இந்த மாதிரி நல்ல பாட்டெல்லாம் அடிக்கடி போட்டா டிவிக்காரங்க மரியாதை குறைஞ்சுடுமாம் :) அதான் உங்களுக்கு தெரியல..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி மன்னிக்கனும் நான் மறந்துட்டேன் போல.. எப்படியோ நீங்க வந்து கேட்டுட்டதும் மகிழ்ச்சி.

மற்றும் மறுமொழி இட்ட அனைவருக்கும் நன்றி.

Unknown said...

சென்ஷிக்கு என் நன்றிகள் பலக்கோடி
வாழ்த்துக்கும் நன்றி....
எனக்கு மிகவும் பிடித்த பாடல்....
கேட்கும் போது மனம் கலங்குகிறது...

Unknown said...

goma,ஆயில்யன்,ராமலஷ்மி,கோவை ரவி,ரம்யா, முத்துலஷ்மி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
உங்க வாந்த்துக்களை பார்க்கும்போது படித்தபோது ரொம்ப சந்தோஷமா இருக்கு...புத்தாண்டுக்கும் பிறந்தநாளுக்கும் கிடைத்த இனிய கிப்ட் இது....

ஐயப்பன் said...

I use to sing this in my every birthday party. all of my collegues know this is my favourite song. Many thanks for your post.

Last 25 songs posted in Thenkinnam