Tuesday, September 10, 2013

மழையே மழையே தூரத்திலிருந்து நனைக்காதே

மழையே மழையே 
தூரத்திலிருந்து நனைக்காதே
மனதில் நுழைந்து ஒவ்வொரு 
அறையாய் திறக்காதே

அலையே அலையே
அழகால் என்னைக் குடிக்காதே
ஆசை என்னும் புயலுக்கு உள்ளே இழுக்காதே


இதழில் இதழால் கிறுக்காதே 
இமையைக் கனவால் நொறுக்காதே
இத்தனை மழை தான் சட்டென அடித்தால்
சின்னஞ்சிறு இதயம் தாங்காதே

(மழையே மழையே )
ஆண் ஒரு கரை தான் 
பெண் ஒரு கரை  தான்
காதல் நதியாய் நடுவினில் வந்து
இணைக்கிறதே இணைக்கிறதே
ஆயிரம் வார்த்தை பார்வையில் இருந்தும்
அதை விட மௌனம் பேசும் பாஷை 
பிடிக்கிறதே  பிடிக்கிறதே

புதிதாய் வருதே பூ வாசம் -அடடா 
எனக்குள் உன் வாசம் - இது
அன்பால் எழுதும் இதிகாசம் - நாம்
பூப்பது  எங்கோ புது நேசம் - இனி
விழியும் விரலும் 
விரலும் விழியும் 
கதை பேசும் 

(மழையே மழையே)

மேல் இமை அழைக்க
கீழ் இமை தடுக்க
இது தான் காதல் கண்ணில்
நடத்தும் கலவரமா கலவரமா

பூ இதழ் துடிக்க 
வேர்வரை வெடிக்க
வெட்கம் நாணம் அச்சம்
இனிமேல் துணைவருமா துணைவருமா

மயக்கம் எதிரே வலைவீசும்
தயக்கம் உடனே தடை வீசும்
இனி தினமும் கரையில் அலைவீசும்
அந்த அலையில் மொத்தத்தில் மனம் பேசும்
இனி
விழியும் விரலும் 
விரலும் விழியும் 
கதை பேசும் 

பாடியவர் : ஆண்ட்ரியா
திரைப்படம் : இருவர் உள்ளம்
இசை: விஜய் ஆண்டனி

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான இனிமையான பாடல்...

Last 25 songs posted in Thenkinnam