Monday, September 24, 2012

துள்ளி எழுந்தது பாட்டு



துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு

குயிலே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது
மாலை முதல்
மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன
காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு

அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது
நான் தேடிடும்
நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே
வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்

துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு

படம் : கீதாஞ்சலி (1985)
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
வரிகள் : வாலி

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடித்த இனிமையான பாடல்... நன்றி...

Last 25 songs posted in Thenkinnam