Monday, September 24, 2012

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி



உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

பட்டியில மாடு கட்டி பால கறந்து வச்சா
பால் திறிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு
செங்கனையா தின்னதுன்னு சொன்னாங்க
செங்கனையா தின்னிருக்க நியாயமில்ல
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
இசை : இளையராஜா
பாடியவர் : SP பாலசுப்ரமணியம்
வரிகள் : புதுமைப்பித்தன்

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இசையிலேயே வருத்தம் தெரிவிக்கும் பாடல்...

நன்றி...

பொன்னி ப்ரபா said...

இடை உலகின் சக்கரவர்த்தி இசையில் உருகிவிட்டது என் மனம்

Last 25 songs posted in Thenkinnam