Friday, September 28, 2012

இடிச்ச பச்சரிசி புடிச்ச



கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு
பாருங்கடி பொண்ண பாருங்கடி
வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

ஏ நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்துடுச்சு
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு

விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிடுச்சு
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு

கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு

ஏ கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு
நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

ஏ தாங்கும் மரக்கிளையா போற வழி நீ துணையா
கூட வர என்ன கொறை அது போதும்

ஏ ஆலமரத்து மேல கூவும் ஒருக்குயிலா
வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்

என்னோட நீ சிரிச்சா கண்ணீர நீ துடைச்சா
வேறேதும் வேணாமே அது போதும்

வீடு திரும்பையிலே வாசல் தொறக்கையிலே
மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்திருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏரிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

படம் : உத்தமபுத்திரன் (2010)
இசை : விஜய் ஆண்டனி
பாடியர்கள் : ரஞ்சித், சங்கீதா, வினயா
வரிகள் : அண்ணாமலை

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam