Friday, September 28, 2012

நீதானே என் பொன்வசந்தம் - வானம் மெல்ல கீழ்



வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருணம் தருணம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே

அன்று பார்த்தது 
அந்த பார்வை வேறடி இந்த பார்வை வேறடி

நெஞ்சில் கேட்குதே 
உள்ளம் துள்ளி ஓடிடும் வண்டு போல தாவிடும்

கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை உன் பார்வை தானே ஓ
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்

என் ஆசை என்ன என்ன நீ பேசி நான் கேட்க வேண்டும்
இங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே

உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில் பூட்டி வைத்த காவல் காப்பேனே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே

பாதி வயதிலே 
தொலைந்த கதைகள் தோனுது மீண்டும் பேசி இணையுது

பாதை மாறியே 
பாதம் நான்கும் போனது மீண்டும் இங்கு சேர்ந்தது

அன்பே என் காலை மாலை உன்னாலே உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே

நில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்

உன்னை பார்க்கத்தானடி

வாழும் காலம் யாவும் உன்னை
பார்க்க இந்த கண்கள் போதாதே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே

பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருணம் தருணம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே

படம் : நீதானே என் பொன்வசந்தம்
இசை : இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, பேலா ஷிண்டே
வரிகள் : நா. முத்துக்குமார்

1 Comment:

சிவக்குமார் said...

எனக்குப் பிடித்த பாடலிது

Last 25 songs posted in Thenkinnam