முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய் மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்
நீந்தி வரும் நிலாவினிலே ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்சம் எழும் வினாக்களுக்கு என் பதில் என்ன பல வரிகள்
சேருமிடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள் இனி தேடிட நேரங்கள் இல்லை
தேடலில் நீ வரும் ஓசைகள் அது போனது உன் தடம் இல்லை
காதல் என்றால் வெறும் காயங்களா அது காதலிக்கு அடையாளங்களா
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய் மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
படம் : நீதானே என் பொன்வசந்தம்
இசை : இளையராஜா
பாடியவர் : சுனிதி சவுகான்
வரிகள் : நா. முத்துக்குமார்
1 Comment:
நல்ல பதிவு
Post a Comment