Thursday, September 27, 2012

ஓ திவ்யா ஓ திவ்யா



ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவிப்பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

உன் கண்கள் ஓரமாய் வந்து என் ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா
உன் பாத கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே ஆசை
திருமுகம் காட்டி உயிர் காப்பாயா

ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவிப்பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

எனக்காக என்னை பற்றி யோசிக்க தான் நீ வந்தாய்
அழகாக என்னை மாற்றி உருவம் நீ தந்தாய்
வெறும் கல்லாய் வாழும் என்னை தொட்டு சிற்பம் செய்கிறாய்
சிறு நூலையாகும் என்னை அள்ளி ஆடை நெய்கிறாய்
இயல்பாக பேசும் போது எனக்கே தெரியாமல் தான்
உன் பெயரை சொல்லி போகிறேன்
இனிப்பான சுமைகள் தூக்கி சுவர் ஏறும் எறும்பை போல
உன் காதல் ஏந்திச் செல்கிறேன்

ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

முதல் பார்வை அதிலே சிக்கி இன்னும் வெளியே வரவில்லை
அதற்குள்ளே மீண்டும் பார்த்தாய் ஐயோ முடியவில்லை
உன் நாசி தவழும் மூச்சில் உயிரும் விக்கி நின்றதே
உன் நாபி கமலம் அங்கே கண்கள் சிக்கிக் கொண்டதே
மிருதுவான மஞ்சள் பெண்ணே ருதுவான கொஞ்சல் கண்ணே
உனக்காக தானே வாழ்கிறேன்
நூற்றாண்டு கடிதம் போலே உதிர்கின்ற எந்தன் மனசை
உனக்காக திறந்தும் வைக்கிறேன்

ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
உன் கண்கள் ஓரமாய் வந்து என் ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா
உன் பாத கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே ஆசை
திருமுகம் காட்டி உயிர் காப்பாயா

படம் : மாசிலாமணி (2009)
இசை : D. இமான்
பாடியவர் : ஷான்
வரிகள் : பா. விஜய் 

இந்த பாடலை தன் உயிர் மூச்சாக கருதும் ஆதவனுக்காக நம் தேன் கிண்ணத்தில் 

2 Comments:

☀நான் ஆதவன்☀ said...

//
இந்த பாடலை தன் உயிர் மூச்சாக கருதும் ஆதவனுக்காக நம் தேன் கிண்ணத்தில் //

சான்ஸே இல்ல :))))) 1000 லைக் :)

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் வரிகளுக்கு நன்றி...

Last 25 songs posted in Thenkinnam